என் மலர்
மதுரை
- தனது கண் முன்னே தன்னுடைய மகன் பஸ்சில் விழுந்து இறந்ததை பார்த்த மாரியப்பன் கதறி துடித்தார்.
- மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாலேயே பஸ்சில் பாய்ந்து புகழேந்தி பாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருமங்கலம்:
விருதுநகரை சேர்ந்த மாரியப்பன். இவரது மகன் புகழேந்தி பாண்டியன் (வயது27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அதிக மன உளைச்சல் காரணமாக கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு பணியை விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து விட்டார். அவர் தனது மன உளைச்சல் பாதிப்புக்கு மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அவர் சிகிச்சைக்காக தனது தந்தையுடன் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார். சிகிச்சை முடிந்ததும் இரவில் இருவரும் தங்களின் ஊருக்கு காரில் சென்றனர். மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராஜபாளையம் சந்திப்பு பகுதியில் வந்த போது சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தி உள்ளனர்.
அப்போது வாலிபர் புகழேந்தி பாண்டியன், தான் மறைத்து வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது கையில் வெட்டிக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியப்பன், தனது மகனை தடுத்து நிறுத்தினார்.
இதையடுத்து புகழேந்தி பாண்டியன் தனது தந்தையின் பிடியில் இருந்து தப்பி ரோட்டில் ஓடினார். அவர் அந்த வழியாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ்சில் பாய்ந்தார். இதில் பஸ்சுக்குள் சிக்கிய புகழேந்தி பாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தனது கண் முன்னே தன்னுடைய மகன் பஸ்சில் விழுந்து இறந்ததை பார்த்த மாரியப்பன் கதறி துடித்தார். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்பு புகழேந்தி பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனஉளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாலேயே பஸ்சில் பாய்ந்து புகழேந்தி பாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்சில் பாய்ந்து என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.
- பறிமுதல் செய்யப்பட்ட கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமொழி, வனிதா மற்றும் போலீஸ்காரர் நாகராஜன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. மிகவும் மெதுவாக வந்த அந்த காருக்குள் இருந்தவர்கள் டார்ச்லைட்டை அடித்தபடி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர்.
போலீசாரை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களின் பின்னால் துரத்தி சென்றனர். அரசப்பட்டி-கீழக்கோட்டை செல்லும் சாலையில் முத்துமாரி தோட்டம் என்ற பகுதிக்கு வந்தபோது காரில் வந்த 2 பே்ா, காரை அங்கேயே நிறுத்திவிட்டு இருட்டுக்குள் ஓடி தப்பி சென்று விட்டனர்.
அவர்களை துரத்தி வந்த போலீசார், காருக்குள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் துப்பாக்கி மற்றும் 113 தோட்டக்கள், 2 காலி கேஸ்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்தவர்களை அந்த பகுதியில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காரின் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது? என்று போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.
மேலும் அந்த காருக்குள் திருமங்கலம் காளிமுத்து நகரை சேர்ந்த பாலகணேஷ் என்பவரின் ஆதார் அட்டை, பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப் லைசன்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றிய போலீசார் தப்பி சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
தப்பி ஓடியவர்கள் வேட்டையாடுவதற்காக காரில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொண்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலில் ஈடுபட கொண்டு சென்றனரா? என்பது அவர்கள் சிக்கினால் தான் தெரியவரும். இதனால் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடந்தது.
- தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சி 67-வது வார்டு விராட்டிபத்து பகுதியில் 15-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினமும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவுன்சிலர் நாகநாதன், துப்புரவு பணி செய்யும் பெண் ஒருவரை தாக்கி, தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனை மற்ற தூய்மை பணியாளர்கள் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நாகநாதன் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் கவுன்சிலர் நாகநாதன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க வேண்டும்.
மதுரை
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்கவும், இங்கு சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் லூர்து, அருட்தந்தையர்கள் பெனடிக் பர்னபாஸ், லாரன்ஸ் ஆகியோர் பேசினர்.
இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
தெற்குவாசலில் உள்ள எலக்ட்ரிகல் நிறுவனத்தின் சூப்பர்வைசர் சையது அப்துல் கபூர் (வயது45). இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரைச் சேர்ந்த சைவம் (59) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவர்களுக்குள் கடன்தொகையை கணக்கிட்டு செட்டில் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் முன் விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று தெற்கு வாசல் பகுதியில் இருந்த சையது அப்துல் கபூரை, சைவம் அவதூறாக பேசி யதுடன் கத்தியால் குத்தினார். காயமடைந்த சையது அப்துல் கபூர் இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தி.மு.க பிரமுகர் சைவம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
- கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
மதுரை
மீனாட்சிநகர் கேட்லாக்ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு 7-வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை 2 பேர் வழிமறித்து வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பாண்டி மகன் வீரபூமு, அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் பாண்டி என்ற பாண்டியராஜன் (47) ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாண்டி என்ற பாண்டியராஜனை கைது செய்தனர்.
கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக பதுங்கிய வாலிபரை பிடித்தார். அவரிடம் விசாரித்தபோது மதுரை காமராஜர்புரம் குமரன் குறுக்கு தெரு குமரய்யா மகன் முனீசுவரன் (20) என்று தெரிய வந்தது.
அவரிடம் இருந்து வாள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பகுதி வழியாக வருபவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- மதுரையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
- விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
மதுரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்ட பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடந்தது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து.
கையுந்துபந்து, வளைகோல்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் இலவசமாக நடத்தப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு காலை முட்டையும், மாலையில் பிஸ்கெட், கண்டல் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, வரவேற்றார். 6-வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், மண்டல இந்திய வங்கி முதன்மை மேலாளர் அண்ணாமலை, இந்தியன் வங்கியின் மாவட்ட கோர்ட்டு கிளை மேலாளர் பாலகுமார், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 202 வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
- கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
- இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம்
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.
- வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை ஆனையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது54). சம்பவத்தன்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த செயின் மற்றும் மோதிரம் உள்பட 8 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து முருகன் கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடு புகுந்து நகை திருடிய தெப்பக்குளம் மருது பாண்டியர் தெரு பாஸ்கரன், மகன் மருதுபாண்டி(28), அண்ணாநகர் யாகப்பா நகர் அம்மையப்பர் தெரு அம்மாசி கண்ணன் மகன் ராஜ்குமார்(28) ஆகியோரை ேபாலீசார் போலீசார் கைது செய்தனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் அருணாசலம் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (52). இவர் தனது மகளை பின்னால் அமர வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அரசரடி மகபூப்பா ளையம் பகுதியில் சென்ற போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இளம்பெண் அணிந்திருந்த 4 கிராம் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பே ரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தற்போது பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களாக பெய்த கோடை மழையால் சாலைகள் மோசமாக காட்சியளிக்கிறது.
நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி விதிகளில் இந்த பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.
சமீபத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் போதுகூட கிழக்கு சித்திரை வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. தற்போது மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. சாலைகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வெளியூர் பக்தர்கள் நேதாஜி சாலை வழியாக வரவேண்டும். ஆனால் நேதாஜி சாலையில் உள்ள தண்டபாணி முருகன் கோவிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் வெளி மாநிலத்த வர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
மேலும் மாதத்தில் ஒரு முறை பாதாள சாக்கடையை எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் நடு ரோட்டில் கொட்டி வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சொல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க அக்கறையும் காட்டவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இன்று காலையில் வடக்கு மாசி வீதி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று நாள்தோறும் கோவிலை சுற்றியுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வெளி மாவட்டத்தினர் மற்றும் மற்ற மாநில மக்கள் டவுன்ஹால் ரோடு வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். டவுன்ஹால் ரோடு பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கி சுகாதார மற்ற முறையில் காட்சி யளிக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து நகருக்கு வரும் மக்களுக்கு மதுரையின் சுகாதாரம் குறித்து தவறான எண்ணம் ஏற்படும்.
எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோவிலை சுற்றி சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
உலக அளவில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இது போன்ற சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தளபதி எம்.எல்.ஏ. கூறினார்.
- வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
மதுரை
மதுரை பசுமலையில் மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், தணிக்கை குழு செயலர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை மாநகர் மாவட்ட செய லாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. பேசியதாவது:-
வருகிற ஜூன் 3-ந் தேதி தலைவர் கருணாநிதி பிறந்தநாளை அனைத்து வார்டு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.
மேலும் கட்சிக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் நலத்திட்டங்களால் மக்கள் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொள்ள முன்வரும் நிலையில் வீடு தோறும் சென்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அ.தி.மு.க. எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர்.
மதுரை
அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில். அன்ன தான நிகழ்ச்சி அலங்கா நல்லூர் அருகே உள்ள அரியூரில் நடை பெற்றது.
அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பேரவை மாநில துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் உதயகுமார் பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் விழாவாக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
1½கோடி தொண்டர்க ளின் எண்ணத்தை நனவாக்கும் வண்ணம், அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
தற்போது தேர்தல் ஆணையம் முழுமையாக பொதுக்குழு தீர்மா னங்களை அங்கீகரித்து ள்ளது. இதன் மூலம் எதிரிகளின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.






