என் மலர்
மதுரை
- பாதாள சாக்கடையை சரி செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.

பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதை படத்தில் காணலாம்.
மதுரை
மதுரையில் வணிக நிறு வனங்கள், ஒர்க் ஷாப்கள் நிரம்பிய மைய பகுதியாக சிம்மக்கல் உள்ளது. 50-வது வார்டு பகுதியான இங்கு மாவட்ட மைய நூலகமும் உள்ளது. இதன் அருகில் உள்ள அபிமன்னன் கிழக்கு மேற்கு தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட தாகவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் செய்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென சிம்மக்கல் மெயின் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிக ளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் பெண்க ளின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இத னால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத் தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முகாமில் பங்கேற்று பயன்பெற வேண்டும்.
- மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை
தமிழக முதல்-அமைச்சர் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்.
மதுரை மாநகராட்சி உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக கடந்த 24-ந்தேதி தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் 35 இடங்களிலும், மண்டலம் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் 38 இடங்களிலும், மண்டலம் 3-க்கு உட்பட்ட பகுதிகளில் 182 இடங்களிலும், மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளில் 188 இடங்களிலும், மண்டலம் 5-க்கு உட்பட்ட பகுதிகளில் 69 இடங்களில் என மொத்தம் 512 இடங்களில் நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 207 நியாய விலைக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 94 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
மதுரை மாநகராட்சி 5 மண்டலத்திற்கு உட்பட்ட 208 பள்ளி மற்றும் கல்லூரிகள், 83 சமுதாய கூடங்கள், 4 பூங்காக்கள், 72 அரசு துறை கட்டிடங்கள், 21 வழிபாட்டு தலங்கள், 116 திருமண மண்டபங்கள், 8 தனியார் குடியிருப்பு பகுதிகள் என மொத்தம் 512 பகுதிகளில் சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மதியம் 1 வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெறும். பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங் களை பெற்றுக்கொள்ளும் முகாம்கள் நடைபெறும்.
எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி தெரிவித்துள்ளார்.
- தவறான சான்றுகளை கொடுத்து சட்ட விரோதமாக தேரூர் பஞ்சாயத்து தலைவராக உள்ள அமுதா ராணியை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
- புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் தேரூர் பகுதியில் வார்டு எண் 8-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதே பேரூராட்சி வார்டு எண் 2-ல் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட் டியல் இனத்தவருக்கு ஒதுக் கப்பட்டு இருந்தது. ஆனால் கிறிஸ்தவரான அமுதாராணி தவறான சான்றுகளை நகராட்சி நிர்வாகத்திற்கு கொடுத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் கிறிஸ்துவரை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண் டுள்ளார்.
ஒருவர் இந்து, சீக்கியர் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களைத் தவிர வேறு எந்த மதத்திற்கும் மாறியவுடன், அவர் பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய அமுதாராணி தேவாலயத்தில் தனது திருமணம் மற்றும் தனது குழந்தைகளின் சுபநிகழ்ச்சிகளை நடத்தினார்.
கிறிஸ்தவரான அமுதாராணி தன்னை பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என கூறி பஞ்சாயத்து தலைவர் பதவியை முறைகேடாக பெற்றிருப்பது சட்ட விரோதமானது. இந்த விவரங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், தேரூர் கிராம செயல் அதிகாரி உள்ளிட்டோரும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை.
எனவே தவறான சான்றுகளை கொடுத்து சட்ட விரோதமாக தேரூர் பஞ்சாயத்து தலைவராக உள்ள அமுதா ராணியை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த நீதிபதி புகேழேந்தி முன் விசாரணை வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கு குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச் சித்துறை உதவி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- பூட்டிய வீட்டில் கடந்த 2010 ஆண்டு 33 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது.
- கொள்ளையன் சத்ரசிங்கை 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுரை:
நடிகர் கார்த்திக் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
குழந்தைகள், பெரியவர்கள் என ஈவு, இரக்கமின்றி கொடூர தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தனிப்படை அமைத்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கைது செய்வது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கும்.
அதேபோல் ஆடைகள் விற்பனை செய்வதுபோல் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடும் கும்பல் அதிரடியாக நுழைந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் போன்றும் அதில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்படியொரு சம்பவம் உயிரிழப்பு இன்றி மதுரையிலும் அரங்கேறியுள்ளது.
மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது மல்லிகை அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு. இந்த பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில் கடந்த 2010 ஆண்டு 33 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. நகையை பறிகொடுத்தவர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கட்ட விசாரணை நடத்தினர்.
கொள்ளை சம்பவம் நடந்த விதத்தை கொண்டு தனிப்படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இதில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை தனிப்படை போலீசார் தொடர்ந்தனர். கைரேகை உள்ளிட்ட கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை தாரகமாக கொண்டு குடும்பம், குழந்தைகள், உறவுகளை மறந்த தனிப்படை போலீசார் குஜராத் மாநிலத்தில் கூடாரம் போட்டு முகாமிட்டனர்.
இதற்கிடையே அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில் ரூ.2 ஆயிரம் திருடிய வழக்கில் நான் சிங் என்பவரை அவனியாபுரம் போலீசார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. அதாவது கடந்த 2010-ல் மல்லிகை அப்பார்ட் மெண்ட் குடியிருப்பில் நான்சிங்கின் கூட்டாளியான குஜராத் மாநிலம் தாகூத் மாவட்டம், மோதிலட்சி கிராமத்தைச் சேர்ந்த சத்ரசிங் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் குஜராத்தில் முகாமிட்ட அவனியாபுரம் தனிப்படை போலீசார் சத்ரசிங்கை தேடிவந்தனர். இந்தநிலையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் ஆணையின் பேரில் துணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் செல்வக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் அவனியாபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் தனிப்படையினர் சத்ரசிங்கை அவரது இடத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் சத்ரசிங், தனது கூட்டாளிகளுடன் தீரன் படத்தில் வருவதைப்போல தமிழ்நாடு வந்து பூட்டியுள்ள வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து விட்டு, நகைகளுடன் குஜராத் சென்று கூட்டாளிகளுடன் பிரித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிந்தது.
அதுமட்டுமின்றி கைதான சத்ரசிங் மீது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் மதுரை, நெல்லை, கோவை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள் ளது. அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் 2010-ம் ஆண்டு திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சத்ரசிங்கை 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த அவனியாபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான தனிப்படையினருக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- ரெயில் அருகில் வந்தபோது திடீரென முருகேசன் ரெயில் முன்பு பாய்ந்தார்.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சேதுராமன், ஏற்கனவே இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு முருகேசன், முத்தழகு ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் முருகேசன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் மதுரை வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் வெளியில் சென்றுவிட்டு வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட முருகேசன், மோட்டார் சைக்கிளில் திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலையில் வந்தார்.
பின்னர் அங்குள்ள வெயில் உகந்த அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ரெயில் அருகிலுள்ள தண்டவாளத்தின் ஓரமாக நின்றிருந்தார்.
அப்போது நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. ரெயில் அருகில் வந்தபோது திடீரென முருகேசன் ரெயில் முன்பு பாய்ந்தார்.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் நள்ளிரவு நேரமாக இருந்ததால் ஒருசில விநாடிகளில் காப்பாற்றக்கூட யாரும் இல்லாத நிலையில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முருகேசன், சென்னையில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கணவரை இழந்த லதா, தற்கொலை செய்துகொண்டு இறந்த மூத்த மகன் முருகேசன் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- மாநில அளவில் நடந்த சிலம்ப போட்டியில் மதுரை அணி 2-ம் இடம் பெற்றது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
மதுரை
மாநில அளவிலான சிலம்ப தொடுமுறை போட்டி கார்த்திக் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. போட்டியை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். போட்டியில் 16 மாநிலங்களில் இருந்து ஏராளமான போட்டி யாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை பதி னெட்டாம்படி சிலம்ப அகடாமியின் மாரிமுத்து சிலம்ப குழுவினர் 2-ம் மற்றும் 3-ம் இடம் பிடித்த னர். வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளை ஏராளமானோர் பாராட்டினர்.
- மதுரை, நெல்லை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகளை நியோ மேக்ஸ் நிறுவனம் பெற்றது.
- முதலீட்டு தொகையை திருப்பி தராததோடு, வட்டியும் வழங்கப்படவில்லை.
மதுரை:
மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏழை, எளியோரை குறி வைத்து அவர்களிடம் மூளைச்சலவை செய்து குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறினர்.
இதனை நம்பிய ஏராளமானோர் பணத்தை டெபாசிட் செய்தனர். குறிப்பாக மதுரை, நெல்லை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகளை நியோ மேக்ஸ் நிறுவனம் பெற்றது. முதலில் வாக்குறுதி அளித்தபடி அதிக வட்டித்தொகையை கொடுத்தது.
அதன்பின்னர் முதலீட்டு தொகையை திருப்பி தராததோடு, வட்டியும் வழங்கப்படவில்லை. இதனால் பணத்தை செலுத்தியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கை தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பணத்தை ஏமாந்தவர்கள் துணிச்சலுடன் வந்து புகார் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஏராளமானானோர் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் வந்து புகார் அளித்தனர். இதையடுத்து நியோ மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நிறுவனத்தில் சோதனை நடத்திய போலீசார் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில் நியோ மேக்ஸ் தொடர்புடைய தென்மாவட்டங்களில் 30 இடங்களில் 2வது முறையாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுவரை பெறப்பட்ட 100 புகார் மனுக்களில் ரூ.22 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க அரசு நிதிக்கு காத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- கம்பிகள் உருக்குலைந்து போயின.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி ஊராட்சியில் தாடகநாச்சிபுரத்தில் அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற மாதங்களில் சுனை நீர் வரும். கோடை காலங்களில் வறண்டும் காணப்படும்.
1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்ததால் சிறுமலையின் மேல்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டோடி 60 அடி உயரமுள்ள பெரும்பாறையின் கீழ் விழுவதால் குற்றால அருவிபோல் வடிவம் உருவானது. அன்றிலிருந்து இந்த அருவி வெளிஉலகுக்கு தெரிய தொடங்கியது. அதன்பின் இங்கு மழை காலங்களில் தண்ணீர் விழும் நேரங்க ளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மதுரை மாவட்டத்தில் மற்றொரு குற்றாலமாய் உரு வெடுத்தது.
2001-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அருவிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. அதேபோல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வனத்துறையின் சார்பாக படிகள் கட்டப்பட்டு அருவியின் முன் தளம் மற்றும் பிடி கம்பிகள் அமைக்கப்பட்டு ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டது.
சுற்றுலா தலமாக்க கோரி அப்போதைய எம்.எல்.ஏ. மாணிக்கம் சட்டசபையில் வேண்டுகோள் விடுத்ததை யொட்டி ரூ.6 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதால் வனத்துறை மூலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு, அடிவாரத்தில் இருந்து அருவிக்கு செல்லும் வழியில் பேவர்பிளாக் கற்களும், படிக்கட்டு களும் கட்டப்பட்டு அருவி முன்பு தடுப்பு கம்பிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்ப தற்கு இடையே தடுப்புகம்பிகள், ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டன.
அருவி நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகளுடன் கதவுகள் அமைக்கப்பட்டது. அதன்பின் வனக்குழு மூலம் ரூ.5 குளிப்பதற்கு கட்டணமாக பெறப்பட்டது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின்போது மீண்டும் அருவிக்கு செல்லும் சாலைகள் சீர்குலைந்தும், தண்ணீர் விழும் இடத்தில் தரைத்தளங்கள் பெயர்ந்தும், கம்பிகள் உருக்குலைந்து போயின.
ஆனால் 5 ஆண்டுகளாகியும் அதை சீரமைக்கும் முயற்சியில் வனத்துறை முன்வர வில்லை. அதனால் தற்போது கற்கள் பெயர்ந்து சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் பாதை எல்லாம் தற்போது தூர்ந்துபோய் செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்து மீண்டும் அடர்வனக் காடாகவே மாறிவிட்டது. மேலும் அருவி நுழைவு வாயில் பகுதியில் பூட்டு போட்டு பூட்டி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதனால் அருவியை காணவரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஓடை நீரில் குளித்து விட்டு செல்கிறார்கள். தற்போது அருவி வறண்டு ஓடையிலும் நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட காப்பு காட்டுக்குள் நுழைபவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர்.
மதுரை மாவட்டத்திலேயே இயற்கையின் கொடையாக சுற்றுலா பயணிகளுக்கு மூலிகை தண்ணீரில் நோய்களை குணப்படுத் தும் மாமருந்தாகவும் இருந்த அருவி, தற்போது சீர்குலைந்து போய் நிற்பது வேதனைக்குரியதாகும். கோடை, குளிர், மழை என்று இல்லாமல் எல்லா காலங்களிலும் எப்போது சென்றாலும் அந்த பகுதியில் மேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்து செல்வது குளுமையை ஏற்படுத்திவருகிறது. எனவே போர்கால அடிப்படையில் தண்ணீர் அதிகம் இல்லாத காலங்களில் மீண்டும் மராமத்து பணி செய்து தூர்ந்துபோன அருவிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், 5 ஆண்டுகளாகியும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக அருவி தூர்ந்து போய்விட்டது. சுற்றுலா பயணிகள் இன்றளவும் வந்து ஏமாந்து செல்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இயற்கையின் கொடை யாக உள்ள அருவியின் பயனை அனுபவிக்க முடியாமல் காட்சி பொருளாக்கி விட்டார்கள். தற்போது கோடைகாலத்தை பயன்படுத்தி இனியாவது அருவியை சீரமைக்கும் பணியை தொடங்க வனத்துறை முன்வரவேண்டும் என்றனர்.
ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கதிர வன் கூறுகையில், வனத்துறையினர் கட்டுப் பாட்டில் குட்லாடம்பட்டி அருகி உள்ளது. மராமத்து பணி செய்ய போதிய நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் பணி தொடராமல் இருந்து வருகிறது. ஒருமுறை மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்தனர். தமிழக அரசு ஏழைகளின் குற்றால மான இந்த அருவிக்கு கருணை கொண்டு நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.
வனத்துறை அதிகாரி கூறுகையில், இந்த அருவியை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் ஆர்வமாக இருக்கி றார். அதனால் மராமத்து பார்ப்பதற்கான திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதிக்காக காத்திருக்கிறோம். நிதி ஒதுக்கீடு வந்ததவுடன் பணி முழுவீச்சில் தொடங்கி ஒரே கட்டத்தில் முடிக்கப்பட்டு விடும் என்றார்.
- தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் சார்பில் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
- விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் கலந்து கொண்டார்.
மதுரை
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ. காலனி அலுவலகத்தில் புதிய நிர் வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அங்கீகார சான்றிதழ், சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநில தலை–வர் டாக்டர் எம்.பாரீஸ், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் கா.கவியரசு, மாநில ஒருங்கி–ணைப்பாளர் டாக்டர் பிச்சைவேல், மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வ–குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழி–லதிபர் பி.டி.ஆர்.டேனியல் தங்கராஜ், திரைப்பட நடிகர் டாக்டர் எம்.செல்வம், சேது திரைப்படத்தின் தயாரிப்பா–ளர் கந்தசாமி, சேது நல்ல–மணி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முருகன் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநிலச்செ–யலாளர் கீதாமுருகன், மாநில செயலாளர் சிக்கந்தர், மாநில ஆலோசகர் டாக்டர் குசலவன், மாநில மகளிரணி துணைத்தலைவி குருலட்சுமி, மாநில துணை பொதுச்செயலாளர் ஷர்மி–ளாபானு, மாநில துணைச்செயலாளர் ஜெக–நாதன் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ராமன், முருகேச–பாண்டி, பொன்.முருகன், விஜயா, ராஜன், சங்க–ரேஸ்வரி உள்பட ஏராளமா–னோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பா–டுகளை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் சின்ன–சாமி, பிர–காஷ், தெற்கு மாவட்ட தலைவர் சங்கர் பிரபு, செயலாளர் பவர்.ராஜேந்திரன், வடக்கு புறநகர் மாவட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயராஜா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
- விக்கிரமங்கலம், வாலாந்தூர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
மதுரை
வாலாந்தூர், விக்கிர மங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (26-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்.
அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டா மங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்க தேவன்பட்டி, குப்பணம் பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.
கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன்நகர், நரியம்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், மேல பெருமாள்பட்டி, கோழிப் பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, கல்புளிச்சான்பட்டி, நடுவூர். மலையூர், குளத்துப்பட்டி கீழ்ப்பட்டி, நடுமுதலைக்குளம் எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, அரசமரத்துப்பட்டி, கொடிக்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.
- சோழவந்தானில் ஆசிய சாம்பியன் ஆடவர் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா நடந்தது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்துகிறது.
சோழவந்தான்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான 7-வது ஆடவர் ஆக்கி போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடை–பெற உள்ளது. இந்த போட் டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொ–ரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை தமிழ்நாடு முழுவ–தும் வலம் வர உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி சென்னை மெரினா–வில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டா–லின் அறிமுக விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதன் தொடர் நிகழ்வாக சோழவந்தான் கல்வி சர்வ–தேச பொதுப்பள்ளி மைதா–னத்தில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் வெற்றி கோப்பையை அறி–முகம் செய்யும் விழா நடந்தது. இவ்விழாவில் கல்வி குழுமம் தலைவர் டாக்டர். செந்தில்குமார் உதவி தலைமை ஆசிரியர்கள் அபி–ராமி, டயானா, பள்ளி மாணவர் தலைவர் அர்ஜூன், பள்ளி மாணவர் துணை தலைவர் பொற்கலை ரிஷிகா, பள்ளி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌஷிக், பள்ளி விளையாட்டுத்துறை துணை அமைச்சர் சனோஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரி–யைகள், மாணவ, மாணவி–கள் பங்கேற்றனர்.
முன்னதாக கோப்பையை மாணவர்கள் கொடி பிடித்து ஊர்வலமாக மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கோப்பை தேனி மாவட்டத் திற்கு தொடர்ந்து பயணித்தது.
- ஆர். எஸ். மங்கலம் சுகாதார கட்டிடத்தை முதன்மை செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறி உள்ளது.
- வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
மதுரை
ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், சுற்று வட்டார கிராமத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் பலவீன மாக காணப்படுகிறது. மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. எனவே சுகாதார நிலைய கட்டிடத் தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், அந்த கட்டிடத்தை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்து, அந்த கட்டிடம் பலவீனமாக உள்ளது என ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கர வர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மிகவும் பழமையான சிதிலமடைந்த இதுபோன்ற கட்டிடங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மக்கள் சிகிச்சை பெறுவது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இந்தக் கட்டிடம் முழுமையாக சேதமடைந்து உள்ளது அறிக்கையிலுள்ள புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.
எனவே, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். மங்கலம் மருத்துவ மனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் நடவடி க்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த கட்டி டத்தை பழுது பார்ப்பது என்பது பயனளிக்காத ஒன்றாக தெரிகிறது.
எனவே இந்த கட்டிடத்தில் செயல்படும் மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலத்தை உடனடி யாக பாது காப்பான வேறு கட்டி டத்திற்கு மாற்றி மருத்துவ சிகிச்சைகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு குறித்து விரிவான அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.






