search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Private Police"

    • கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் அருளரசு (வயது 48). இவருக்கும் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கணேஷ் (வயது 39) என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2014 -ம் ஆண்டு கணேஷ், அருளரசை வெட்டி கொலை செய்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். பின்னர் கணேஷ் கடந்த 2015 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளியில் வந்த கணேஷ் அதன் பிறகு தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவான கணேஷை தேடி வந்தனர். கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருவதாக நீதிமன்றத்தில் கணேஷ் உறவினர்கள் வழக்கு தொடர்ந்து தேவையின்றி விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவு பெற்றனர். இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து கணேஷை தேடி வந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக எங்கு சென்றார் என தெரியாத நிலையில் மீண்டும் அவர்களது உறவினரிடம் கேட்டபோது கணேஷ் இறந்துவிட்டதாக தகவலும் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    இதில் கணேஷ் உறவினர்கள் திருமண பத்திரிக்கையில் கணேஷ் பெயர் இடம் பெற்றது. ஆனால் அதில் இறந்தது போல் எந்த தகவலும் பதிவு செய்யவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து கணேஷ் உறவினர்களின் போன் நம்பரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இதில் ஒரு நம்பருக்கு அடிக்கடி ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக குறிப்பிட்ட நம்பரை கண்காணிக்க தொடங்கினர். மேலும் அது யாருடைய நம்பர்? அவர் யார்? என்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அந்த நம்பரை பயன்படுத்தி வந்தது கணேஷ் என்பது உறுதியாக தெரிந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் ரகசியமாக கடந்த6 மாதமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்றிருந்ததும், அதன் மூலமாக அந்த பகுதியில் வசித்து வந்ததும் போலீசாருக்கு உறுதியாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேஷ் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொலை வழக்கு கைதியான கணேஷை போலீசார் பிடித்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த, மனோஜ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிபகுதிக்கு வெளி மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தர படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீஸார் பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில்அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துகடை ஊழியர் தட்டாஞ்சாவடி பிரகாசிடம் (25) விசாரணை நடத்தினர்.

    அவர்பண்ருட்டி, தட்டா ஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கடையில் இருந்த பாக்கெட் புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிரகாஷ் தெரிவித்த குடோனுக்கு அவரை அழைத்து சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 5000 கிலோ புகையிலை பொரு ட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கைது செய்யப்பட்ட 6 பேரையும் தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பாராட்டினார்.

    திருப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹஜ் மந்த்சிங். இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூர் மத்திய பஸ்நிலையம் பின்புறம் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் ஹஜ் மந்த்சிங் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென கடைக்குள் புகுந்தனர். அவர்கள் ஹஜ் மந்த்சிங்கை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி கடையில் இருந்த ரூ.16 லட்சம் மற்றும் 4 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கொள்ளை நடந்த கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கொள்ளை கும்பல் வந்த கார் திருப்பூர்-பல்லடம் ரோடு வித்யாலயம் பகுதியில் கேட்பாரற்று நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் காரின் பதிவு எண்ணை கொண்டு நடத்திய விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசின் கணவர் சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் தனித்தனியாக பிரிந்து மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் மதுரையில் வைத்து 2 பேரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெண் போலீசின் கணவர் சக்திவேல், அழகர் உள்ளிட்ட 2 பேரை சிவகங்கையில் வைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 6 பேரையும் தனிப்படை போலீசார் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இவர்கள் ஏற்கனவே இதுபோன்று பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது. மேலும் சென்னையில் உள்ள டாஸ்மாக்கில் ரூ.2 லட்சம் வழிப்பறி வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்கள் ஆறு பேரை பிடித்ததுடன் பணத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு பாராட்டினார்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 36). இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவரது அக்காள் கணவர் தாழையூத்தை சேர்ந்த நாராயணகுமார். இவர் பாளை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் முருகசேன் மூலக்கரைப்பட்டிக்கு வந்த நிலையில், தனது அக்காள் கணவர் நாராயணகுமாரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக புறப்பட்டார். இதனை அறிந்த நாராயணகுமாரின் நண்பர்களான ஆட்டோ டிரைவர் தங்கதுரை, செல்வம் ஆகியோர் நாங்களும் குற்றாலம் வருகிறோம் என கூறியுள்ளனர்.

    இதையடுத்து 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று மதியம் நாராயணகுமார், தங்கத்துரை ஆகியோர் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றனர். அறையில் முருகசேன் மற்றும் செல்வம் மட்டுமே இருந்துள்ளனர்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அறையில் முருகேசன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செல்வத்தை காணவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணகுமார், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார்.

    தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, பாலமுருகன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை நடப்பதற்கு சற்று முன் வரை செல்வம் மட்டுமே முருகேசனுடன் இருந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை. அதே நேரத்தில் முருகேசனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை காணவில்லை. அந்த நகை திருட்டு போயிருந்தது. ஏற்கனவே செல்வம் மீது திருட்டு, கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருப்பதாலும், அவர் மாயமாகி விட்டதாலும் நகைக்கு ஆசைப்பட்டு முருகேசனை அவர் கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பிச்சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பூட்டிய வீட்டில் கடந்த 2010 ஆண்டு 33 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது.
    • கொள்ளையன் சத்ரசிங்கை 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மதுரை:

    நடிகர் கார்த்திக் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படம் வடமாநில கொள்ளை கும்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

    குழந்தைகள், பெரியவர்கள் என ஈவு, இரக்கமின்றி கொடூர தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்கும் கும்பலை தனிப்படை அமைத்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கைது செய்வது போன்ற காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கும்.

    அதேபோல் ஆடைகள் விற்பனை செய்வதுபோல் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடும் கும்பல் அதிரடியாக நுழைந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் போன்றும் அதில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அப்படியொரு சம்பவம் உயிரிழப்பு இன்றி மதுரையிலும் அரங்கேறியுள்ளது.

    மதுரை அவனியாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது மல்லிகை அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு. இந்த பகுதியில் உள்ள பூட்டிய வீட்டில் கடந்த 2010 ஆண்டு 33 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது. நகையை பறிகொடுத்தவர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கட்ட விசாரணை நடத்தினர்.

    கொள்ளை சம்பவம் நடந்த விதத்தை கொண்டு தனிப்படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இதில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையை தனிப்படை போலீசார் தொடர்ந்தனர். கைரேகை உள்ளிட்ட கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களை தாரகமாக கொண்டு குடும்பம், குழந்தைகள், உறவுகளை மறந்த தனிப்படை போலீசார் குஜராத் மாநிலத்தில் கூடாரம் போட்டு முகாமிட்டனர்.

    இதற்கிடையே அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியில் உள்ள பழைய இரும்புக்கடையில் ரூ.2 ஆயிரம் திருடிய வழக்கில் நான் சிங் என்பவரை அவனியாபுரம் போலீசார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. அதாவது கடந்த 2010-ல் மல்லிகை அப்பார்ட் மெண்ட் குடியிருப்பில் நான்சிங்கின் கூட்டாளியான குஜராத் மாநிலம் தாகூத் மாவட்டம், மோதிலட்சி கிராமத்தைச் சேர்ந்த சத்ரசிங் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

    அதன்பேரில் குஜராத்தில் முகாமிட்ட அவனியாபுரம் தனிப்படை போலீசார் சத்ரசிங்கை தேடிவந்தனர். இந்தநிலையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் ஆணையின் பேரில் துணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர் செல்வக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் அவனியாபுரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் தனிப்படையினர் சத்ரசிங்கை அவரது இடத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் சத்ரசிங், தனது கூட்டாளிகளுடன் தீரன் படத்தில் வருவதைப்போல தமிழ்நாடு வந்து பூட்டியுள்ள வீடுகளை நோட்டம் பார்த்து கொள்ளையடித்து விட்டு, நகைகளுடன் குஜராத் சென்று கூட்டாளிகளுடன் பிரித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிந்தது.

    அதுமட்டுமின்றி கைதான சத்ரசிங் மீது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் மதுரை, நெல்லை, கோவை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள் ளது. அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் 2010-ம் ஆண்டு திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சத்ரசிங்கை 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த அவனியாபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான தனிப்படையினருக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    • வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
    • தனிப்படை போலீஸ் தலைமறைவாகியுள்ள இரண்டு பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அருமனை:

    அருமனை அருகே மேல்புறம் வெங்ஙனாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கலா (வயது 40).

    கணவரை இழந்த இவர் குழந்தையுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். கலா மேல்புறம் சந்திப்பு வழியாக கடைக்கு செல்லும் போது அடிக்கடி அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் கலாவிடம் கேலி செய்வது ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆட்டோ டிரைவருக்கும் கலாவுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது .

    இந்நிலையில் நேற்று காலை கலா பொருட்கள் வாங்குவதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது டிரைவர்கள் சிலர் கலாவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் கலாவை பிடித்து அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். இதையடுத்து கலா கூச்சலிட்டார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    கலா மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருப்பது குறித்து அருமனை போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டனர். இதுகுறித்து கலா அருமனை போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் பாகோடு பகுதியைச் சேர்ந்த சசி (45), விஜயகாந்த் (37), வினோத் (44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள னர்.

    இந்த வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீஸ் தலைமறைவாகி யுள்ள இரண்டு பேரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவது அறிந்த 2 பேரும் கேரளாவிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மின்கம்பத்தில் இளம்பெண் ஒருவர் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×