என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த, மனோஜ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






