என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூரில் குண்டர் சட்டத்தில் கைதாகி வெளயே வந்த ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேட்டர பள்ளியை சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் அபிலாஷ் (28). பிரபல ரவுடியான இவர்மீது 2 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளனர்.

    இவர் நேற்று இரவு 10 மணியளவில் அந்த பகுதியில் உள்ள மைதானம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியது. இதில், அவரது தலை, கழுத்து, கைகள் உள்பட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார், அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட அபிலாஷ், கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்பவரை கொலை செய்த வழக்கில், அபிலாஷ் முதல் குற்றவாளி என்பதும், குண்டர் சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தண்டனை காலம் முடிந்து வெளிவந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    எனவே, முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொல்லப்பட்டாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும், ஓசூர் டி.எஸ்.பி.முரளி மேற்பார்வையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சித்தனப்பள்ளி சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 34) இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    தற்போது, கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு சீனிவாசனை அவர் பணிபுரிந்து வரும் நிறுவனத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதனால் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர். சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, அவர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தார்.

    அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு தங்க, வெள்ளி நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    சீனிவாசன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல், நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த 63 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும்.

    இது குறித்து சீனிவாசன் ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாவட்ட சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வியும் நேரடி விசாரணை நடத்தினார்.

    மேலும் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால், தடுப்பூசி போடும் இடத்தை மாற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பள்ளியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆண்கள், பெண்களுக்கான தனித்தனியாக வரிசை ஏற்படுத்தப்பட்டு, சமூக இடைவெளியுடன் நிற்கும் வகையில் தரையில் வட்டமிடப்பட்டு உள்ளது முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, நீண்ட நேரம் காத்திருக்கும் முதியவர்கள், பெண்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்பட்டது.

    நீண்ட வரிசையில் காத்திருந்த 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், வாலிபர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாவட்டத்தில் 49 இடங்களில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 6,700 பேருக்கு தடுப்பூசி போட்டப்பட்டது.

    இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், கொரோனா சிகிச்சை மையம் உள்ள இடங்களில் செயல்படும் தடுப்பூசி மையங்கள், அரசு பள்ளிகளுக்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடுகள் முழுமையாக தீர்ந்த பின், தடுப்பூசி போடும் விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.

    ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு கேட்டு மா விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். அதாவது கோரிக்கை வாசகங்களை கையில் ஏந்தி மாந்தோப்பில் நின்றனர்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மா விவசாயிகள் தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டும் பனி, வெயில் மற்றும் புதிய வகையான புழுத் தாக்குதல் உள்ளிட்டவையால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மா விவசாயிகளின் கூட்டமைப்பு மற்றும் கே.ஆர்.பி அணை இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடந்தது.

    என்.தட்டக்கல் கிராமத்தில் மா தோப்பில் விவசாயிகள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய தட்டிகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் விவசாயிகள் பழனி, சுந்தரவடிவேல், நட்ராஜ், பத்மனி, காளியம்மாள், சுரேஷ், மாணிக்கம், வேலு, சுமன், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக ஒருங்கிணைப்பாளர் சவுந்தராஜன், பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு ஆகியோர் கூறியதாவது:-

    இந்த ஆண்டில் மாமரங்களில் பூக்கள் அதிகளவில் பூத்திருந்தாலும், கடும் பனிப்பொழிவு, பூச்சி தாக்குதலால் பூக்கள் கருகின. உரிய நேரத்தில் மழை பொழிவு இல்லாததால் பூக்கள் பூத்து மரங்களில் காய் பிடிக்கவில்லை. தண்ணீர் விலைக்கு வாங்கி விளைவிக்கப்பட்ட காய்கள் மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. அதற்கும் போதிய விலை கிடைக்காமல், சாலையில் கொட்டும் நிலைதான் ஏற்பட்டது.

    தொடர் இழப்புகளை சந்தித்து வருவதால் ஒரு சில ஆண்டுகளில் மா சாகுபடியை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். எனவே, தமிழக அரசு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் மா விவசாயிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வுகள் மேற்கொண்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    திருமணமான 6 மாதத்தில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கி கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
    கல்லாவி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே நாய்க்கனூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் ராேஜஷ்வரி (வயது 21). இவருக்கும், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்கி (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ராம்கி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் ராஜேஷ்வரி, தனது கணவர் ராம்கியுடன் நாய்க்கனூரில் பெற்றோர் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம் இரவு தனி அறையில் கணவர் ராம்கியுடன் ராஜேஷ்வரி தூங்கினார்.

    நேற்று காலையில் கண் விழித்த ராம்கி, தன்னுடைய மனைவி அங்குள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். ராம்கியின் சத்தம் கேட்டு ராஜேஷ்வரியின் பெற்றோர் ஓடி வந்தனர்.

    தூக்கில் தொங்கிய ராஜேஷ்வரியை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜேஷ்வரி பரிதாபமாக இறந்தார். அப்படி இருந்தும் ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ்வரியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இறந்த ராஜேஷ்வரி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பைனான்சியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில் நகரை சேர்ந்தவர் முருகன் என்கிற அருள்வாணன் (வயது 48). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை சிலர் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை, பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கெலமங்கலம் செந்தில் நகர் அந்தோணி (33), வெங்கடேஷ் (25), கர்நாடக மாநிலம் கோணப்ப அக்ரஹாரம் திவ்யா (35), ஏர்போர்ட் மாரதஅள்ளி ராஜா (27), மாருதி நகர் மஞ்சுநாத் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி ஜே.ஜே.கார்டனை சேர்ந்த மதுக்குமார் (33) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தாதன்கொட்டாய் அருகே சின்னதளிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணி (வயது 35). விவசாயி. இவரது மனைவி சிவசக்தி (31). இந்த நிலையில் வெங்கடரமணி வேறொரு பெண்ணுடன் சமீபத்தில், 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால் 2 குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் விரக்தியடைந்த வெங்கடரமணி கடந்த 12-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவசக்தி கொடுத்த புகாரின்பேரில், நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குந்தாரப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குருபரப்பள்ளி:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). கூலி தொழிலாளியான இவர் வேலை நிமித்தமாக கடந்த 12-ந் தேதி மாலை வேப்பனப்பள்ளிக்கு தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது குந்தாரப்பள்ளி- வேப்பனப்பள்ளி சாலையில் திப்பனப்பள்ளி கூட்டு ரோடு அருகே சென்றபோது, எதிரில் வேகமாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கந்தசாமியி்ன் சகோதரர், அண்ணாமலை கொடுத்த புகாரின்பேரில் குந்தாரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 42 பவுன் தங்க நகைகள், ரூ.16 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தாசரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60). விவசாயி. மாடு வியாபாரமும் செய்து வருகிறார். இவருக்கு, லோகேஷ்குமார் (32) என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். லோகேஷ்குமார் தன் தந்தையுடன் கோபித்து கொண்டு கடந்த, 8 ஆண்டுகளாக ஓசூரில் தன் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    முதல் மகள் திருமணமாகி, கிருஷ்ணகிரி ராசுவீதியில் வசித்து வருகிறார். 2-வது மகள் புவனேஸ்வரி (28), விபத்தில் கணவர் இறந்து விட்ட நிலையில் தற்போது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். புவனேஸ்வரி வீட்டின் முன்பு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் புவனேஸ்வரி பெட்டிக்கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது முகத்தில் கைக்குட்டை கட்டியபடி 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் புவனேஸ்வரியிடம் குளிர்பானம் கேட்டனர். அப்போது திடீரென அவர்கள் மயக்கபொடியை எடுத்து புவனேஸ்வரி முகத்தில் வீசினர். இதனால் அவர் மயக்கமடைந்தார்.

    இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கு பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், அரிசி, ராகி டப்பாக்களில் மறைத்து வைத்திருந்த ரூ.16 லட்சம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது புவனேஸ்வரி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி நேதாஜி ரோடு டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசவுந்தரி. இவர் தனது மகன் ரகுராமுடன் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் பெங்களூரு சென்றனர். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த வளையல்கள், மோதிரம், கம்மல் என 15 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடினர்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அக்கம்பக்கத்தினர், வீடு திறந்து கிடப்பதாக ரகுராமுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் விரைந்து சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த நகைகள், பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள், பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள் (39). முன்னாள் ராணுவ வீரரான இவர் தன் குடும்பத்துடன் காவேரிப்பட்டணத்தை அடுத்த வட்டம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.
    பாரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    பாரூர் போலீசார் சாந்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சாந்தனூர் சிவலிங்கம் (வயது 35), ஒடச்சகரை சக்திவேல் (39), சிவலிங்கம் (40), கைலாசம் (38) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 வயது ஆண், 50 வயது ஆண், 70 வயது மூதாட்டி ஆகிய 3 பேர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 266 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 369 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 36 ஆயிரத்து 888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 34 ஆயிரத்து 299 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    மாவட்டத்தில் 36 ஆயிரத்து 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 48 வயது பெண், 45 வயது ஆண் ஆகியோர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர்கள் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று கொரோனாவால் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 404 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 620 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 33 ஆயிரத்து 930 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 433 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    ×