என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்காரப்பேட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை
Byமாலை மலர்16 Jun 2021 2:10 PM GMT (Updated: 16 Jun 2021 2:35 PM GMT)
திருமணமான 6 மாதத்தில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கி கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே நாய்க்கனூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் ராேஜஷ்வரி (வயது 21). இவருக்கும், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்கி (26) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ராம்கி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் ராஜேஷ்வரி, தனது கணவர் ராம்கியுடன் நாய்க்கனூரில் பெற்றோர் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம் இரவு தனி அறையில் கணவர் ராம்கியுடன் ராஜேஷ்வரி தூங்கினார்.
நேற்று காலையில் கண் விழித்த ராம்கி, தன்னுடைய மனைவி அங்குள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். ராம்கியின் சத்தம் கேட்டு ராஜேஷ்வரியின் பெற்றோர் ஓடி வந்தனர்.
தூக்கில் தொங்கிய ராஜேஷ்வரியை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜேஷ்வரி பரிதாபமாக இறந்தார். அப்படி இருந்தும் ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ்வரியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இறந்த ராஜேஷ்வரி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டதால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X