search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே விவசாயி தற்கொலை

    கிருஷ்ணகிரி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தாதன்கொட்டாய் அருகே சின்னதளிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணி (வயது 35). விவசாயி. இவரது மனைவி சிவசக்தி (31). இந்த நிலையில் வெங்கடரமணி வேறொரு பெண்ணுடன் சமீபத்தில், 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால் 2 குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் விரக்தியடைந்த வெங்கடரமணி கடந்த 12-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவசக்தி கொடுத்த புகாரின்பேரில், நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×