search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பைனான்சியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

    பைனான்சியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் செந்தில் நகரை சேர்ந்தவர் முருகன் என்கிற அருள்வாணன் (வயது 48). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை சிலர் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை, பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கெலமங்கலம் செந்தில் நகர் அந்தோணி (33), வெங்கடேஷ் (25), கர்நாடக மாநிலம் கோணப்ப அக்ரஹாரம் திவ்யா (35), ஏர்போர்ட் மாரதஅள்ளி ராஜா (27), மாருதி நகர் மஞ்சுநாத் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி ஜே.ஜே.கார்டனை சேர்ந்த மதுக்குமார் (33) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×