என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓசூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை, பணம் கொள்ளை
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சித்தனப்பள்ளி சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 34) இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
தற்போது, கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு சீனிவாசனை அவர் பணிபுரிந்து வரும் நிறுவனத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர். சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, அவர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு தங்க, வெள்ளி நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
சீனிவாசன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கும்பல், நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் வைத்திருந்த 63 பவுன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும்.
இது குறித்து சீனிவாசன் ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாவட்ட சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வியும் நேரடி விசாரணை நடத்தினார்.
மேலும் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்ப நாய் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்