என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ஒசூரில் மாநில அளவிலான சப்ஜூனியர் எறி பந்து போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் சாதனை படைத்தனர்.
    • தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்கத்தின் சார்பில், மாநில அளவி லான சப்-ஜூனியர் எறிபந்து போட்டிகள், ஓசூர் தின்னூரில் உள்ள தனியார் பள்ளியில், 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இந்த போட்டிகளை, முதன்மை விருத்தினராக கலந்து கொண்ட ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார்.

    இந்திய எறிபந்து சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட எறிபந்து சங்க தலைவர் செந்தமிழ்செல்வன் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தவமணி வரவேற்றார். கிருஷ்ணகிரி மாவட்ட எறிபந்து சங்க புரவலரும், ஓசூர் மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ். நாராயணன், தனியார் பள்ளி தாளாளர் ஆர்.தீபா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில், தமிழகத்தின் 37 மாவட்டங்களிலிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 800 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டிகள், பகல், இரவாக 122 ஆட்டங்கள் நடைபெற்றது.

    நேற்று போட்டிகள் நிறைவடைந்து, அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. போட்டிகளில் மாணவர் மற்றும் மாணவியர் அணியில் கிருஷ்ணகிரி மாவட்ட அணியே முதலிடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றன.மேலும் வீரர், வீராங்கனை யருக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டது.

    அதேபோல், சென்னை மாவட்ட அணி மாணவ, மாணவியர் அணி 2-வது இடத்தையும் , 3-வது இடத்தை ஈரோடு மாவட்ட மாணவ, மாணவியர் அணியும் பிடித்தன. மேலும் இதில், பள்ளி முதல்வர் பவானி சங்கரி, ஆசிரிய, ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடும் நடவடிக்கை எனப்படும் தெரிவித்துள்ளார்.
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்த பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    விடுதிகள் பதிவு

    தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங் கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014-ம் ஆண்டும் நடை முறைக்கு கொண்டு வரப் பெற்றது. அதன்படி, தனியா ரால் நடத்தப்படும் பணிபுரி யும் மகளிருக்கான இல்லங் கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்க ளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதி களை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்ள படுகிறது.

    மேலும், தனியார் பணிபு ரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் விடுதிக்கு உரிமம் பெறுவதற்கு இணை யதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள் ளப்படுகிறது.

    தகுதிகள்

    பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெறுவ தற்கு பொதுப்பணித்து றையின் கட்டிட உறுதித் தன்மை சான்று, தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், தாசில்தாரால் வழங்கப்படும் கட்டிட உரிமம் சான்று, சுகாதாரச் சான்றிதழ் மற்றும் விடுதி காப்பாளர், பாதுகாவ லரின் மருத்துவச் சான்று, நன்னடத்தை சான்று ஆகிய வை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டி டத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும்.

    உரிமம் பெறாமல் செயல் படும் பணிபுரியும் மகளிருக் கான இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்கள் மீது ரூ.1 லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்ப டும்.

    தொடர்பு கொள்ளலாம்

    எனவே, தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி கள் நடத்தும் உரிமையா ளர்கள், பதிவு செய்யப்படா மல் செயல்படும் விடுதிகளை உடனடியாக இணைதளம் வாயிலாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரி யிலும், 04343-235717 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாயப்பு முகாம் மூலமாக 756 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • 102 தனியார்கள் நிறுவனங் கள் பங்கேற்றன

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்து றையில் வேலை வாய்ப்பு முகாமை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் சப் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் துவக்கி வைத்துர 756 -நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்து றை இணை இயக்குநர் ஆ.லதா ஆகியோர் முன்னி லை வகித்தனர்.

    இதில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்ஒய்.பிரகாஷ் பேசியாதவது;- தமிழ்நாடு முதலமைச்சர் படித்த இளைஞர்கள், வேலை வாய்ப்பற்ற இளை ஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்க ளை செயல்படுத்தி வருகி றார்கள். அவ்வகையில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கிதர வேண்டும் என்ற அடிப்ப டையில் முதலமைச்சர் கடந்த 20.3.2022 அன்று மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை தொ டங்கி வைத்தார்.முதலீடா ளர்கள் மாநாட்டை நடத்தி பல்வேறு நிறுவ னங்கள் அமைவதற்கு வழிவகை செய்துள்ளார்.

    அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டைட்டான், டாடா எலக்ரா னிக்ஸ், டெல்டா, ஓலா மற்றும் செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலை துவக்கப்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதேப்போல அரசு துறையில் வேலை வாய்ப்புகள் போட்டித் தேர்வுகளின் வாயிலாகவே அரசுப் பணிகளில் வேலை வாய்ப்பு சாத்தியமாகும். அரசு வேலைவாய்ப்புகள் பெற உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் தன்னாார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இம்மாவட்டத்தில் நடை பெறும் இவ்வகுப்பு களில் பயிற்சி பெற்றுள்ளவர்க ளில் 2023 வரை 131 நபர்கள் அரசுப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அரசு துறைகளில் பணி யாற்றி வருகிறார்கள் இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தனியார் துறை வேலை வாய்ப்பு அரங்கு களை நடை பெற்ற இம்முகா மில் அசோக்லைலேன்ட், டி.வி.எஸ், டெல்டா, டாடா எலக்ரானிக்ஸ் உள்ளிட்ட 102 தனியார்கள் நிறுவனங் கள் பங்கேற்றனர். இம்முகா மில் 2580 நபர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்டனர். அவர்களில் 757 நபர்களுக்கு நிறுவனங் கள் சார்பில் பணி நியமன ஆணைகளை வழங்கப்பட் டது.

    • கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் ரூ.3.83 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
    • இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.

    கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமனற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் வழிகாட்டுதலின் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய் பிரியா முன்னி லையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது அவர் பேசுகையில், இந்த வருடத்தில் இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.

    வழக்கா டிகள் நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணலாம். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களின் முன் சமரசங்களின் வாயிலாக 99 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 619 வசூல் ஆகியுள்ளது.

    எனவே, இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக்கொள்ள முன்வர வேண்டும். இது குறித்து மற்றவர்க ளுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    நேற்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்ச ம்பள்ளி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற ங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 971 வழக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 271-க்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும், முதன்மை மாவட்ட நீதிபதி, குடும்ப நல வழக்கில் இணைந்த ஜோடிக்கு இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கியும், பாகப்பிரிவினை வழக்கில் இணைந்த குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கியும் வாழ்த்தினார்.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெனிபர், நீதித்துறை நடுவர் எண்.1 கார்த்திக் ஆசாத், வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ராமசந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவால் செய்யப்பட்டிருந்தது.

    • ஒசூரில் பட்டாசுக் கடைகள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தாசில்தார் வலியுறுத்தினர்.
    • அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரியில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, ஓசூர் அருகே பட்டாசு ஆலையை பார்வையிட சென்றபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த, மாவட்ட வருவாய் அலுவலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகளை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 15பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், எல்லை பகுதி அருகிலும். நடந்த பட்டாசு வெடி விபத்துக்கள், உயிர் சேதங்கள் பொது மக்களை அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. அடுத்த (நவம்பர்) மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஓசூர் மாநகரில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஓசூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், "பட்டாசு கடைகளில் 18 வயதிற்கு கீழ் யாரையும் வேலைக்கு அமர்த்த க்கூடாது. என எச்சரித்தார். மேலும், தொழிலாளர்கள் குறித்த விபரம் முழுமையாக சேகரித்து தினமும் வருகை பதிவேடு பின்பற்ற வேண்டும், கட்டா யமாக தொழிலா ளர்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்திருக்க வேண்டும் என்றும்,பட்டாசு கடைகளில் இரண்டு கதவுகள் திறந்த நிலையிலும், தீயை அணைக்க மணல், நீர் வாளிகள் இருப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தினார். இதில், 70 பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ. 5 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    • ஓசூர் டவுன் போலீசார் நடவடிக்கை

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள குடிசாதனபள்ளியை அடுத்த கரியசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வ வின்னரசி (வயது30). இவர் பேரிகை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று செல்வவின்னரசி ஓசூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரின் கைப்பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும், செல்போனையும் காணவில்லை. இதுகுறித்து செல்வவின்னரசி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தான் பஸ்சுக்காக காத்திருந்தபோது தனது கைபையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், செல்போன் காணவில்லை என்றும், எனது அருகில் பஸ்சுக்காக 3 பெண்கள் காத்திருந்தனர். அவர்கள் தான் திருடி இருக்கவேண்டும் என்று சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் ஓசூரில் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் லட்சுமி புரா பகுதியைச் சேர்ந்த ரேணுகா (45), பார்வதி (35), லட்சுமி என்கிற சாவித்ரி (55) ஆகிய 3 பேரும் செல்வ வின்னரசியிடம் பணம், செல்போன் திருடியது தெரியவந்தது. 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

    • கிருஷ்ணகிரி அருகே ஆந்திரா எல்லையில் ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.
    • வனத்துறையினர் யானை காட்டுக்குள் விரட்ட ஏற்பாடு

    கிருஷ்ணகிரி அடுத்துள்ள காளிகோவில் அருகே ஆந்திர மாநில எல்லையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி லட்சுமணன் வயசு (60), என்பவர் உயிரிழந்துள்ளார். இரவு 12:30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காளி கோயில் அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள பொம்ம தேசகொள்ளை என்ற கிராமம் உள்ளது. இங்கு லெட்சுமணன் மனைவி வீரம்மா உடன் நெல் வயல் காவலுக்கு நேற்று இரவு சென்று உள்ளார்.

    காவல் இருந்த போது ஒரு பகுதியில் மனைவி தீ வைத்து விலங்குகள் வரமால் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். விவசாயி லெட்சுமணன் அங்குள்ள தென்னை மரத்தின் கீழே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை விவசாயியை தாக்கி மிதித்து கொன்றது. இது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் சென்று யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    கந்திகுப்பம் போலீசார் விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக கிருஷ்ண கிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவ மனைக்கு அனுப்பி உள்ளனர்.

    இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி யுள்ளது

    • கிருஷ்ணகிரியில் பெண் வீராங்கனைகளின் விழிப்புணர்வு பிரசார வாகன பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • 10 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் சென்றடைகின்றனர்.

     பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தலைப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பெண் வீராங்கனைகளின் மாபெரும் விழிப்புணர்வு பிரசார வாகன பேரணி தொடங்கி உள்ளது.

    ஜம்மு மற்றும் காஷ்மீர் (ஸ்ரீநகர்), மேகாலாயா (சில்லாங்), தமிழ்நாடு கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் இருந்து தொடங்கி 75 மோட்டார்சைக்கிளில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள், 15 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என 10 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து குஜராத் மாநிலம் ஏக்தா நகர் சென்றடைகின்றனர்.

    கடந்த 5-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த வாகன பேரணி நேற்று கிருஷ்ணகிரி வந்தது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் சரயு, மத்திய ரிசர்வ் காவல் படையின் துணை தலைவர் இமான்ஸ்சுகுமார் ஆகி யோர் வரவேற்று வாகன பெண் வீராங்க னைகளுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரை யாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் துணை ராணுவ படையின் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, துணை தலைவர் வெங்கடராமன், சி.ஆர்.பி.எப் கமாண்டோ குரூப் துணை ஆய்வாளர் வீரபத்திரன், கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட சி.ஆர்.பி.எப். கமாண்டோ குரூப் மற்றும் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் நலச்சங்கம் மற்றும் காவேரிப்பட்டணம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தருமபுரி ஜவான்ஸ் குரூப் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்

    • ஓசூரில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
    • ஒசூர் டவுன் போலீசார் நடவடிக்கை

      ஓசூர் தேர்பேட்டை விநாயகர் கோவில் அருகில் வசித்து வருபவர் வினோத் குமார்(வயது 26). இவரிடம் இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி வாங்கி தருவதாக ஓசூரை சேர்ந்த பத்மா, மற்றும் ஓசூர் வள்ளலார் நகரை சேர்ந்த சிவா (50), ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி ஹட்கோ பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் ரூ.8 லட்சம் பெற்றிருந்தனர்.

    மேலும் இதற்காக போலியாக ஆணையும் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஆணை போலி என தெரிய வந்ததும், வினோத்குமார் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்தனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத்குமார், இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் பத்மா, சிவா, ஸ்ரீதர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று சிவா மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    • மகள், மனைவி இறந்த சோகத்தில் காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • உருக்கமான கடிதங்கள் சிக்கியது.

    இருதய பாதிப்பால் குழந்தை இறந்த நிலையில், தாய் தற்கொலை செய்து கொண்டார். மகள், மனைவி இறந்த சோகத்தில் காதல் கணவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக இளம்பெண்ணும், அவரது கணவரும் அடுத்தடுத்து எழுதி வைத்த உருக்கமான கடிதங்கள் சிக்கியது.

    இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    முகநூலில் மலர்ந்த காதல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி (வயது 25). லாரி டிரைவர். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார்.

    அந்த நேரம் இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சம்ரோபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்ற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் முகநூல் (பேஸ்புக்) மூலமாக நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருமணம்

    இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அபிசல்மியா, தனது காதலன் ஜலபதியை திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்தது.

    இளம்பெண் தற்கொலை

    குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசல்மியா யாரிடமும் சரிவர பேசாமல் மவுனம் கர்தது வந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 6-ந் தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முன்பாக உருக்கமாக கடிதமும் எழுதி வைத்திருந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரனும் விசாரணை நடத்தி வந்தார்.

    கணவரும் தற்கொலை

    மேலும் தற்கொலை செய்து கொண்ட அபிசல்மியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர் கன்னியாகுமரி வீட்டிற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். குழந்தை இறந்த துக்கம் ஒருபுறம், ஆசை, ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தற்கொலை ஒருபுறம் என வேதனையின் உச்சத்தில் இருந்த ஜலபதி, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை தொடர்பாக உருக்கமான கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜலபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரும் சோகம்

    முகநூலில் பழகி பொறியியல் பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்த லாரி டிரைவர், குழந்தை இறந்த வேதனையில் மனைவியும் தற்கொலை செய்ததால் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போச்சம்பள்ளி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்

    உடல் நலக்குறைவால் குழந்தை இறந்ததால் வேதனையில் அபிசல்மியா கடந்த 6-ந் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    என் சாவுக்கு யாருமே காரணமில்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். எல்லாருமே என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க. ஆனாலும் எனக்கு என் பாப்பாவ பார்க்கனும். அவ கூடவே இருக்கனும்னு தோனுது. என்ன மன்னிசிருங்க. என் சாம்பல என் ஊரு (கன்னியாகுமரி) கடல்ல கரைச்சிடுங்க. அது தான் என் கடைசி ஆசை. யாருமே எந்த விஷயத்திலயும் என்னை நினைக்க வேண்டாம். அப்படியே மறந்துடுங்க. எந்த சடங்கு, சம்பிரதாயமும் பண்ண வேண்டாம்.

    வந்தேன், போய்ட்டேன், அவ்வளவுதான். என் அண்ணன, அப்பாவ கடைசி வர பாக்காமலேயே போறேன் அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மா நீ பீல் பண்ணாத. அண்ணன் உன்ன நல்லா பார்த்துக்குவான். இப்படிக்கு அபிசல்மியா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கணவர் எழுதிய உருக்கமாக கடிதம்

    இருதய பாதிப்பால் குழந்தை இறந்த நிலையில், வேதனையில் அபிஷல்மியா தற்கொலை செய்து கொண்டார். குழந்தை, மனைவியை பறி கொடுத்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட ஜலபதி தற்கொலைக்கு முன்பாக எழுதிய உருக்கமாக 4 பக்கத்தில் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    என்னால் என் மனைவி அபியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனக்கு என்னுடைய அபி, பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அவள் எங்கு சென்றாலோ அங்கு நானும் செல்கிறேன். லவ் யூ ஷோ மச் அபி. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்க அப்பா பிளீஸ் பா. அபியை எங்கு அடக்கம் செய்தார்களோ அங்கு என்னையும் அடக்கம் செய்யுங்கள். இது தான் என்னுடைய கடைசி ஆசை.

    எனக்கு எந்த ஒரு சடங்கு செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்து பத்திரமாய் இருங்கள். செம்பா கண்ணுகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். சங்கி நீ நன்றாக இருப்பாய். என்னுடைய அப்பா அம்மா மாதிரி இந்த உலகில் யாருக்கும் அமையாது. என்னுடைய அபி எனக்கு சாமி ஷோ நான் என்னுடைய சாமியிடம் செல்கிறேன்.

    அபி இல்லாத உலகம் எனக்கு வேண்டாம். இது என்னுடைய சுயமான முடிவு. அம்மா உன்னிடம் ஒரு பொய் சொல்லிட்டேன். நைட் அபி என்னை கூப்பிட்டா. நீயும் வா நான் பாப்பாவிடம் தான் இருக்கிறேன் என்று. எங்களுக்கு பயமாக இருக்கு என்று.

    எனக்கு இறப்பதற்கு பயமாய் தான் இருக்கு. அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை அதனால் தான் இந்த முடிவு. லவ் அண்டு லவ் ஒன்லி. அபிசல்மியா, ஜலபதி, பிரணிதா. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலாவை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில், சுற்றுலாத் துறை சார்பாக உலக சுற்றுலா நாள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் தொடங்கியது. இந்த பயணத்தை கலெக்டர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலக சுற்றுலா நாள் 2023 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி சுற்றுலாவில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் 6ம் வகுபபு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவ, மா ணவிகள் கிருஷ்ணகி ரியிலுள்ள அரசு அருங்கா ட்சியகம், கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா ஆகிய இடங்க ளுக்கு அழைத்து செல்லப்ப ட்டுள்ளனர்.

    சுற்றுலாத்துறை சார்பாக இரண்டு வாகனங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் தாங்கள் பார்வையிடும் சுற்றுலா இடங்களை சிறு குறிப்பு எடுத்து, சுற்றுலா குறித்து சிறப்பு கட்டுரையாக எழுத வேண்டும்.

    சிறப்பாக கட்டுரை எழுதிய மாணவ, மாணவி யர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். மேலும், மகிழ்ச்சி யாகவும், பாது காப்பான முறையில் தங்க ளின் பயணம் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், ஆதிதி ராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கல்லாவி பஸ் நிலையத்தில் காட்சி பொருளான உயர் மின் கோபுர விளக்கு சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

     கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி பஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள உயர் மின் கோபுர விளக்கு பயனற்று கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு, சில காலம் மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மின் கோபுர விளக்கு பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை, இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையம் இருளில் மூழ்கியுள்ளது. கல்லாவிக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் செல்லும் பகுதியில், மின்விளக்கு இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

    மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் பொது மக்களும் இரவு நேரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. உடனடியாக உயர் மின் கோபுர விளக்கை சரி செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×