search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் ரூ.3.83 கோடிக்கு தீர்வு
    X

    சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் ரூ.3.83 கோடிக்கு தீர்வு

    • கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் 971 வழக்குகளில் ரூ.3.83 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
    • இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.

    கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமனற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் வழிகாட்டுதலின் படி, கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்கு ழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய் பிரியா முன்னி லையில், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது அவர் பேசுகையில், இந்த வருடத்தில் இது 5-வது சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஆகும்.

    வழக்கா டிகள் நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு காணலாம். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வங்கிகள், பைனான்ஸ் நிறுவனங்களின் முன் சமரசங்களின் வாயிலாக 99 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 11 லட்சத்து 48 ஆயிரத்து 619 வசூல் ஆகியுள்ளது.

    எனவே, இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக்கொள்ள முன்வர வேண்டும். இது குறித்து மற்றவர்க ளுக்கும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    நேற்று கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்ச ம்பள்ளி, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்ற ங்களில் நிலுவை யில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப்பிரிவினை வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் ஆகியவை விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 971 வழக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 28 ஆயிரத்து 271-க்கு தீர்வு காணப்பட்டது.

    மேலும், முதன்மை மாவட்ட நீதிபதி, குடும்ப நல வழக்கில் இணைந்த ஜோடிக்கு இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கியும், பாகப்பிரிவினை வழக்கில் இணைந்த குடும்பத்திற்கு இனிப்புகள் வழங்கியும் வாழ்த்தினார்.

    இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல நீதிபதி நாகராஜன், மாவட்ட அமர்வு நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரியா, முதன்மை சார்பு நீதிபதி மோகன்ராஜ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ஜெனிபர், நீதித்துறை நடுவர் எண்.1 கார்த்திக் ஆசாத், வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ராமசந்திரன், செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவால் செய்யப்பட்டிருந்தது.

    Next Story
    ×