என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது செய்யப்பட்டார்.
    • கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரை சேர்ந்தவர் மஞ்சு என்கிற மஞ்சுநாத் (வயது 26). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, அடிதடி, பெட்ரோல் குண்டு வீச்சு என, 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, குருபரப்பள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

    கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த மஞ்சுநாத்தை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். இவர்கள் மஞ்சுநாத் யார் யாரிடம் தொடர்பில் உள்ளார், என்ன திட்டம் போடுகிறார் என ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸ் தன்னை நெருங்குவதை தெரிந்து கொண்ட மஞ்சுநாத் தனக்கு நெருக்கமானவர்களை தவிர யார் கண்ணிலும் படாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி அடுத்த மேல் சோமார்பேட்டைக்கு மஞ்சுநாத் வருவது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மேல்சோமார்பேட்டையில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று மதியம் மேல்சோ மார்பேட்டைக்கு வந்த மஞ்சுநாத்தை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதி களில் தொடர் கொள்ளையில் ஈடுபட முயன்றதும், கொள்ளைக்கு பின் வெளி மாநி லங்களுக்கு தப்ப முயன்றதும் தெரிந்தது. தொடர்ந்து மஞ்சுநாத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் காப்பீடு வழங்க கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
    • திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை வைக்க நடவடிக்கை

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பான பட்டாசு விற்பனை குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    சமீபத்தில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள், மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை வைப்பவர்கள், அரசின் விதிமுறைகள், நிபந்தனைகள் கட்டாயம் பின்பற்றிட வேண்டும். பட்டாசு கடைகளில் அலங்கார விளக்குகள், சீரியல் லைட் ஆகியவற்றின் மூலம் எளிதில் தீப்பெறி ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதனை பயன்படுத்த கூடாது.

    மேலும், பட்டாசு கடைக்குள் ஏசி, யுபிஎஸ், லெட் ஆசிட் பேட்டரி, டீசல் ஜெனரேட்டர்கள், அகர்பத்திகள், எண்ணெய் விளக்குகள் பயன்படுத்த கூடாது. மது போதையில் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்களை பட்டாசுகள் இறக்குவதிலோ, கொண்டு செல்வதிலோ ஈடுபடுத்த கூடாது. பட்டாசு கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் காப்பீடு செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிமம் வழங்கப்பட மாட்டாது.

    சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பது போல், திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு கடைகள் வைப்பதற்கான உரிமம் பெற்ற பிறகே, பட்டாசுக்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அதிகளவில் பட்டாசுக்கள் கொள்முதல் செய்து இருப்பு வைத்தால், அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், தடை செய்யப்பட்ட சீன பட்டாசுக்கள் விற்பனை செய்யக் கூடாது.

    லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் பட்டாசு கடைக்கு அருகில் நிறுத்தபடுவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும், குழந்தைகளை பட்டாசு கடைகளுக்கு அழைத்து செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தனி தாசில்தார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • குழந்தைகள் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு

    ஓசூரில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி களின் மாணவ,மாண விகளை அழைத்து செல்ல பயன்படுத்தும் வேன் மற்றும் பேருந்துகள் போக்கு வரத்து விதிமு றைகளை மீறி அதிக வேகமாக செல்கின்றன.

    இந்த நிலையில் ஓசூர் பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியில் நேற்று தனியார் பள்ளி வேன் ஒன்று மின்கம்பத்தில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, அதில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கம்பம் மற்றும் வீட்டின் சுவர் மீது மோதி நின்ற இந்த பள்ளி வாகனத்தில், குழந்தைகள் இருந்திருந்தால் மின்சாரம் பாய்ந்து பெரும் அசம்பா விதம் ஏற்பட்டிருக்கும்.

    பள்ளி வாகனங்களில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவை அதிக வேகத்துடன் செல்கிறது. மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் தனியார் பள்ளி வாக னங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்களும், ,பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
    • மேயர் சத்யா வாழ்த்து தெரிவித்தார்.

    கடந்த 7 ந்தேதி முதல் 9-ந் தேதி வரை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்காக வாலிபால் போட்டி நடைபெற்றது.

    இதில் மாணவியருக்கான வாலிபால் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.

    இதையடுத்து , சாதனை படைத்த பள்ளி மாணவி களை ஓசூர் மேயர் எஸ். ஏ. சத்யாவை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களை பாராட்டிய மேயர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூர் ஜுஜுவாடியில் நேற்று நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே, பட்டாசு கடை என்ற பெயரில் வெடி மருந்துதான் கடைகளில் வைக்கப்படும்.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில், கட்சியின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓசூர் ஜுஜுவாடியில் நேற்று நடைபெற்றது.

    இக் கூட்டத்திற்கு, வடக்கு பகுதி செயலாளர் அசோகா தலைமை தாங்கினார். ஓசூர் தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன்,மேற்கு பகுதி செயலாளர் மஞ்சுநாத் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். கிழக்கு பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார்.

    இதில், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதி களிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் பாடுபட வேண்டும். அடுத்து தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே போல், நாடாளுமன்ற தேர்தலிலும் 40 இடங்களிலும் இரட்டை இலை வெற்றி வாகை சூடும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கனவை, செயலை நனவாக்க இந்த 52 -வது ஆண்டு தொடக்க விழாவில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கஞ்சா விற்பனை கொடி கட்டி படிக்கிறது.கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே, பட்டாசு கடை என்ற பெயரில் வெடி மருந்துதான் கடைகளில் வைக்கப்படும். கிருஷ்ணகிரி, அரியலூர், போன்ற இடங்களில் நடந்த விபத்துகளுக்கு என்ன காரணம்? பட்டாசு என்ற பெயரில் வெடிமருந்துதான். தி.மு.க. ஆட்சியில் விலை வாசி உயர்ந்து விட்டது. தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றாத அரசாக, தி.மு.க. அரசு இருந்து வருகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை.

    இவ்வாறு தம்பிதுரை எம்.பி. பேசினார்.

    மேலும், மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பால கிருஷ்ணரெட்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் மதன், முன்னாள் நகர செயலா ளரும், மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான எஸ்.நாராயணன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாநில, மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கட்சி முன்னோடிகள், மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மாணவிகள் பிரிவில் 3 பேர் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.
    • 27 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    கொங்கு சகோதயா சார்பில் கடந்த 14-ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள வெங்க டேஸ்வரா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாளந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் தனிநபர் பிரிவில் 2 பேர் முதலிடமும், மாணவிகள் பிரிவில் 3 பேர் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

    14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான தொடர் நீச்சல் 200 மீட்டர் பிரிவில் 2-ம் இடமும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ப்ரீ ஸ்டைல் 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 12 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 4x25 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும் பிடித்தனர். மொத்தமாக 2 தங்கம், 4 வெள்ளி, 21 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    சாதனை புரிந்த மாணவர் களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் முண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதமன், மருத்துவர் புவியரசன் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
    • கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தகவல்.

    கிருஷ்ணகிரி, 

    மாவட்டத்தில் இந்த ஆண்டில் 1701 சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் ரூ.15 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறினார். கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் நேற்று, மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் காந்திமதி முன்னிலை வகித்தார்.

    முகாமை தொடங்கி வைத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பேசியதயாவது:-

    சைபர் கிரைம் குற்றங்கள்

    இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சார்பில், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் சைபர் கிரைம் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்திலேயே முதன்முறையாக சைபர் கிரைம் சார்பில் ரத்த தான முகாம் கிருஷ்ணகிரியில் நடைபெறுகிறது.

    அறிவியல் வளர்ச்சி மக்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவிற்கு குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைனில் புதுப்புது வழிகளில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம், பணம் இரட்டிப்பு, செயல்முறை கட்டணம் என பல்வேறு நூதன வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. இந்த மோசடி கும்பல்களிடமிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அக்டோபர் 15-ந் தேதி வரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 1701 புகார்கள் வரபெற்றுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் ஆன்-லைனில் மூலம் ரூ.15 கோடியே 34 லட்சத்து 10 ஆயிரத்து 283-க்கு மோசடி நடந்துள்ளது. இதில் மோசடியில் ஈடுபட்ட நபர்களின் வங்கி கணக்குகள் மூலம் 14 கோடியே 87 லட்சத்து 40 ஆயிரத்து 888 முடக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.33 லட்சத்து 58 ஆயிரத்து 162 பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதில் பெரும்பாலும் பணத்தை இழந்தவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகும். பொது மக்கள், மோசடி களில் ஏமாறாமல் இருக்க செல்போன் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் போது செயலின் நம்பகத்தன்மை, அதில் சுயவிவரங்களை கொடுக்கலாமா என ஆராய வேண்டும்.

    ஆன்லைனில் முதலீடு செய்யும் முன் நிறுவனத்தின் உண்மை தன்மையை அறிய வேண்டும். ஆன்லைனில், 99 சதவீத நிறுவனங்கள் போலியாக உள்ளன. நாம் செலுத்தும் பணத்திற்கு முதலில் லாபம் தருவது போல் பணம் கொடுத்து, முதலீடு செய்யும் பெரிய தொகையை ஏமாற்றி விடுவார்கள். எனவே ஆன்லைன் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. பான்கார்டு' விவரங்களை பதிவு செய்ய செல்போனுக்கு எந்த வங்கியும் குறுஞ்செய்தி அனுப்புவதில்லை.

    அவ்வாறு வருபவை அனைத்தும் போலியானது. ஆன்லைனில் கடன் வாங்குவதற்கு முன்பணம் கட்ட சொன்னால் அவர்களும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட வகைகளில் பொதுமக்கள் தங்கள் பணத்தை இழந்தால், 1930 என்கிற இலவச எண்ணில் புகார் அளிக்கவும். மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேரிலும் புகார் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04343 -294755 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு கூறினார்.

    இந்த ரத்த தான முகாமில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ரத்த தானம் செய்தனர்.

    • பணம் வைத்து சூதாடிய 46 பேர் பிடிபட்டனர்
    • ரூ.3,500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்த 40 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல பணம் வைத்து சூதாடியதாக 46 பேர் பிடிபட்டனர்.

    லாட்டரி

    மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி விற்பனை செய்த ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்க னிக்கோட்டை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதிகளை சேர்ந்த 14 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    குட்கா

    இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக ஊத்தங்கரை, சாமல்பட்டி, கல்லாவி, சிங்காரப்பேட்டை, நாகரசம்பட்டி, பர்கூர், கிருஷ்ணகிரி, குருபரப்பள்ளி, தளி, ராயக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    கஞ்சா

    மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா, என சோதனை நத்தினார்கள். இதில் கந்திகுப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    சூதாட்டம்

    அதே போல மாவட்டத்தில் எங்கும் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் பணம் வைத்து சூதாடியதாக கல்லாவி, சிங்காரப்பேட்டை, பர்கூர், நாகரசம்பட்டி, வேப்பனப்பள்ளி, ஓசூர், பாகலூர், மத்திகிரி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.4,300 பறிமுதல் செய்யப்பட்டது.

    • திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
    • பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.

    திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

    நேற்று, பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

    பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • 1 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கியது.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நி லைப்பள்ளியில் குருபரப் பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாண விகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறை வசதி இல்லாமல் இருந்தனர். இதையடுத்து நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 20 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 8 வகுப்ப றைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணி நேற்று துவங்கியது.

    இந்த கட்டிடத்தின் கட்டு மான பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்த லைவர் தட்ரஅள்ளி நாகராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகரன், குருபரப்பள்ளி தலைவர் கோவிந்தன், பெத்த னப்பள்ளி தலைவர் பழனி, ஓட்டுனர் அணி மாணிக்கம், கவுன்சிலர் சந்திரன், முன்னாள் தலைவர் கேபிள்.மணி, விவசாய அணி மோகன், சென்றாயன், சேகர், காந்திஜிலானி, திருப்பதி, வெங்கடாசலம், சிவாஜி, முருகன், தலைமை ஆசிரியர் ஆரோக்கியம், சுரேஷ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
    • பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

     கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. கட்சி தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே. அசோக்குமார் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பி.டி. சுந்தரேசன், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், பால்வளத் தலைவர் குப்பு சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன் , மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று 1 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. 6 வகுப்பறைகளை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மாதம் செப்டம்பர் 26-ஆம் தேதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த நிலையில், ஒரு வாரத்திலேயே வகுப்பறை யின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அதனைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு வெளியில் வராண்டாவில் மேற்கூரையிலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று 3-வது முறையாக வகுப்பறைக்கு வெளியே வராண்டாவில், கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.

    திறப்பு விழா கண்டு, 20 நாட்களே ஆன நிலையில் பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு அடிக்கடி உதிர்ந்து விழுந்ததால் மாணவர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். நேற்று, பள்ளி வராண்டாவில் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிய அளவில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால், நல்வாய்ப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் எந்தவித காயமின்றி தப்பினர்.

    பள்ளி கட்டிடத்தில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவதால், புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×