என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் 2-வது இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகள்
- மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
- மேயர் சத்யா வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 7 ந்தேதி முதல் 9-ந் தேதி வரை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்காக வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில் மாணவியருக்கான வாலிபால் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
இதையடுத்து , சாதனை படைத்த பள்ளி மாணவி களை ஓசூர் மேயர் எஸ். ஏ. சத்யாவை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களை பாராட்டிய மேயர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






