என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ.5 ஆயிரம், செல்போன் திருடிய 3 பெண்கள் கைது
- ஓசூரில் அரசு பள்ளி ஆசிரியையிடம் ரூ. 5 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
- ஓசூர் டவுன் போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள குடிசாதனபள்ளியை அடுத்த கரியசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வ வின்னரசி (வயது30). இவர் பேரிகை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று செல்வவின்னரசி ஓசூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரின் கைப்பையில் இருந்த ரூ.5 ஆயிரத்தையும், செல்போனையும் காணவில்லை. இதுகுறித்து செல்வவின்னரசி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தான் பஸ்சுக்காக காத்திருந்தபோது தனது கைபையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், செல்போன் காணவில்லை என்றும், எனது அருகில் பஸ்சுக்காக 3 பெண்கள் காத்திருந்தனர். அவர்கள் தான் திருடி இருக்கவேண்டும் என்று சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் ஓசூரில் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் லட்சுமி புரா பகுதியைச் சேர்ந்த ரேணுகா (45), பார்வதி (35), லட்சுமி என்கிற சாவித்ரி (55) ஆகிய 3 பேரும் செல்வ வின்னரசியிடம் பணம், செல்போன் திருடியது தெரியவந்தது. 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.






