search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு கடைகள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
    X

    ஓசூர் தாசில்தார் அலுவலகத்தில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.   

    பட்டாசு கடைகள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்

    • ஒசூரில் பட்டாசுக் கடைகள் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தாசில்தார் வலியுறுத்தினர்.
    • அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

    கிருஷ்ணகிரியில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, ஓசூர் அருகே பட்டாசு ஆலையை பார்வையிட சென்றபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த, மாவட்ட வருவாய் அலுவலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகளை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 15பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

    இவ்வாறு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், எல்லை பகுதி அருகிலும். நடந்த பட்டாசு வெடி விபத்துக்கள், உயிர் சேதங்கள் பொது மக்களை அச்சத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளன. அடுத்த (நவம்பர்) மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஓசூர் மாநகரில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஓசூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், "பட்டாசு கடைகளில் 18 வயதிற்கு கீழ் யாரையும் வேலைக்கு அமர்த்த க்கூடாது. என எச்சரித்தார். மேலும், தொழிலாளர்கள் குறித்த விபரம் முழுமையாக சேகரித்து தினமும் வருகை பதிவேடு பின்பற்ற வேண்டும், கட்டா யமாக தொழிலா ளர்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்திருக்க வேண்டும் என்றும்,பட்டாசு கடைகளில் இரண்டு கதவுகள் திறந்த நிலையிலும், தீயை அணைக்க மணல், நீர் வாளிகள் இருப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தினார். இதில், 70 பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×