என் மலர்
நீங்கள் தேடியது "பெண்கள் தங்கும் விடுதிகள்"
- கடும் நடவடிக்கை எனப்படும் தெரிவித்துள்ளார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்த பதிவு செய்து, உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
விடுதிகள் பதிவு
தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங் கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014-ம் ஆண்டும் நடை முறைக்கு கொண்டு வரப் பெற்றது. அதன்படி, தனியா ரால் நடத்தப்படும் பணிபுரி யும் மகளிருக்கான இல்லங் கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல், உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் பணிபுரியும் பெண்க ளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் உரிமையாளர்கள் விடுதி களை பதிவு செய்யவும், உரிமம் பெறவும் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு கேட்டுக்கொள்ள படுகிறது.
மேலும், தனியார் பணிபு ரியும் மகளிர் விடுதிகளின் உரிமையாளர்கள் விடுதிக்கு உரிமம் பெறுவதற்கு இணை யதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துக் கொள் ளப்படுகிறது.
தகுதிகள்
பணிபுரியும் மகளிர் விடுதியின் உரிமம் பெறுவ தற்கு பொதுப்பணித்து றையின் கட்டிட உறுதித் தன்மை சான்று, தீயணைப்பு தடையின்மை சான்றிதழ், தாசில்தாரால் வழங்கப்படும் கட்டிட உரிமம் சான்று, சுகாதாரச் சான்றிதழ் மற்றும் விடுதி காப்பாளர், பாதுகாவ லரின் மருத்துவச் சான்று, நன்னடத்தை சான்று ஆகிய வை பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்டி டத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும்.
உரிமம் பெறாமல் செயல் படும் பணிபுரியும் மகளிருக் கான இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி 2 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி நடத்துபவர்கள் மீது ரூ.1 லட்சம் அபராதமும், 3 முதல் 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்ப டும்.
தொடர்பு கொள்ளலாம்
எனவே, தனியார் பணிபுரியும் மகளிர் விடுதி கள் நடத்தும் உரிமையா ளர்கள், பதிவு செய்யப்படா மல் செயல்படும் விடுதிகளை உடனடியாக இணைதளம் வாயிலாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.21, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரி யிலும், 04343-235717 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.






