என் மலர்
கிருஷ்ணகிரி
- சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது.
- 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நடந்த கல்வீச்சில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது சோக்காடி கிராமம். இங்கு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்ட வருகிறது. இந்த பணிகளுக்காக கிரானைட் கற்களை லேயிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதில் இருந்து வரக்கூடிய தூசிகள் அந்த பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் படிந்துள்ளது.
இதையடுத்து அவர்கள், கோவில் கட்டும் பணியை சுற்றிலும் துணி கட்டி பணி செய்யுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த நேரம் அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவருக்கும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அரசியல் கட்சி பிரமுகருக்கு ஆதரவாக 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு அந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வசிக்க கூடிய பகுதிக்கு சென்றனர். அவர்கள் கற்களை வீசி அவர்களை தாக்கினார்கள். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதில் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.
மேலும் ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த கூரை தடுப்பிற்கும் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் 2 தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரு தரப்பினர் வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் தொடர்புடையவர்களையும், பிரச்சினைக்கு காரணமானவர்களையும் கைது செய்யக் கோரி பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை. இதனால் சமரச தீர்வு எட்டப்படவில்லை.
இதையடுத்து சோக்காடியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழரசி, கணேசன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதற்கிடையே அரசியல் கட்சி பிரமுகர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் சோக்காடி-கிருஷ்ணகிரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மாதேஷ் உள்ளிட்டோர் கல்வீச்சு நடந்த பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், சோக்காடி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையும், உளவுத்துறையும் செயல் இழந்ததை காட்டுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசாரிடம் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த தரப்பினர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது50), ஆனந்தன் (39), சித்தேவன் (44), சித்தராஜ்(53), மற்றொரு சித்தராஜ் (55) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று சித்தராஜ் தரப்பினர் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முனிராஜ் (49), வரதராஜ் (59), குமரன் (23), சத்தியமூர்த்தி (27), செல்வம் (37), சுப்ரமணி (42) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருதரப்பினரைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இன்று 2-வது நாளாக சோக்காடி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக சோக்காடி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
- ஒசூரில் திருமணம் நடந்து 10 நாட்களில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு இறந்தார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள திப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் (வயது28) இவருக்கும் ஸ்சுமிதா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 20ந்தேதி அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமார் திடிரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஒசூர் அக்கோ போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் புது மாப்பிள்ளை சந்தோஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கிருஷ்ணகிரி அருகே மாணவிகள் உட்பட 3 பெண்கள் மாயமாகினர்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 17 வயது சிறுமி. இவர் கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் திம்மாபுரத்தை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். திருமணம் ஆனவர். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதில் காருபாலாவை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. நர்சிங் மாணவி. கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் மஞ்சுநாத் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வழிக்காட்டல் பயிலரங்கம் நடைபெற்றது.
- மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளி களில் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடந்தது.
பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த இந்த உயர்கல்வி வழிகாட்டல் ஒருநாள் பயிலரங்கத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் 95 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என தெரி வித்தார். உதவி திட்ட அலு வலர் வடிவேலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவ லரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கருத்தாளர்களாக சென்னை சாய்ஈசன், சவு மியா ஆகியோர் பங்கேற்று கருத்துரை யாற்றினர். இதில், அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்தி றன் கொண்ட 110 மாணவர் கள், அவர்களின் பெற்றோர் கள், 45 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரியில் சாலை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இதற்கு தாளாரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரு மான வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் முகாமின் நோக்கம் குறித்து விளக்கி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக மகராஜகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஏட்டு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும்போது, போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்கள் தான் வாகனம் ஓட்ட வேண்டும். அதிவேகமாக வாகனங்களை ஓட்ட கூடாது என்றனர். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார். இந்த முகாமில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரி யர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஓசூர் அருகே உலக அமைதிக்காக திருமூலருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில்கு செல்லும் வழியிர கால பைரவர் கோவில் உள்ளது. இங்கு, உலக அமை திக்காகவும், உலக நன்மைக்காகவும் ஆருத்ரா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், சித்த காசிராஜன் தலைமையில், திருமூலர் சித்தருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கி, தொடர்ந்து பைரவர் பூஜை, நந்தீஸ்வரர் பூஜை, வராகி அம்மன் பூஜை, கோமாதா பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு களும், ஹோமங்களும், லிங்க சித்த ருக்கு சிறப்பு அபிஷே கமும் நடை பெற்றன.
பின்னர் பைரவர் தீபம், நந்தீஸ்வரர் தீபம், வராகி அம்மன் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தலைமை அர்ச்சகர் சண்முகம், வேள்வி நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இதில், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி ராஜி, கலா சந்திரன் ஆகியோரும், ஜெயகுமார் உள்ளிட்ட சிவனடியார்கள், சித்தரடி யார்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
- ஒசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6.40 லட்சம் மோடி செய்தார்.
- கடந்த மாதம் 14ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேசேகர் (வயது35) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 14ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ் செய்தி வந்துள்ளது. அதில் யூடிப்பில் பகுதி நேர வேலை உள்ளது. இதில் முதலீடு செய்து வேலை ப் பார்த்தால் பல லட்சங்கள் வரை சம்பா திக்காலம் என்று இருந்து ள்ளது. இதனை நம்பி அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ராஜ சேகர் போன் செய்து பேசினார்.
அதில் பேசிய நபர் சொன்ன வங்கி கணக்கு எண்ணில் ரூ. 6.39.439 பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜசேகர் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தருமபுரியில் செல்போன் டவரில் செல்ப் மோட்டார் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- சீனிவாசன்(27) என்பவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் 114 வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (62) இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தனியார் நினுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் தருமபுரி-ஒகேனக்கல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த செல்போன் டவரில் அலர்ட் ஒலி டவர் கண்காணிப்பாளராக பணியாற்றும் மணிகண்டன் என்பவருக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து செல்போன் டவருக்கு சென்று பார்த்தபோது செல்போன் டவரில் இருந்த செல்ப் மோட்டர், மற்றும் கிராங்கிங் டிவைஸ்-1 ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்று இருந்தனர். இது குறித்து செல்போன் நிறுவன மேலாளர் மணி அளித்த புகாரின் பேரில், தருமபுரி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர். அதில் சவுளுபட்டியை சேர்ந்த காவேரி மகன் சீனிவாசன்(27) என்பவரை கைது செய்தனர்.
- ஒசூரில் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
- பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வருவதால் மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். இந்நிலையில் இச்சம்ப வங்களில் தொடர்புடை யவரை கைது செய்ய, அட்கோ சப் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசார ணையில், ஓசூர், பாகலூர், அட்கோ, மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்ப றியில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் ஆனந்தபூர் மா வட்டம் குந்தக்கல் அபேஸ்ந கர் பகுதியை சேர்ந்த ஷேக் நாம்தார் உசேன்(34) என்பது தெரிய வந்தது.
இவர் மீது ஏற்கன வே, தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் நகைபறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வே று திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நி லையில், நீண்ட தேடுதலுக்கு பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் குண்டூரில் அவரை பிடித்த தனிப்படை போலீசார், நேற்று மாலை விசார ணைக்காக, ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள திருப்பதி மெஜஸ்டிக் பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஷேக் நாம்தார் உசேன் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தின் போது, தான் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், அதை காண்பிக்க செல்வதை போல் சென்றார். அப்போது திடிரென்று அதில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த, ஷேக் நாம்தார் உசேன் திடீரென சப்இன்ஸ்பெக்டர் வினோத், முதல் நிலை காவலர்கள் ராமசாமி, விழியரசு ஆகிய 3 பேரை, தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.
இதையடுத்து தற்காப் புக்காக, சப்இன்ஸ்பெக்டர் வினோத், துப்பாக்கியால் ஷேக் நாம்தார் உசேனை சுட்டார். இதில், அவருக்கு வலது காலில் குண்டு அடிப்பட்டு அங்கே விழுந்தார். அவரது காலில் பாய்ந்த குண்டும் வெளியே வந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் போலீசார், காயம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் உட்பட 3 போலீசார் மற்றும் குண்ட டிப்பட்ட ஷேக் நாம்தார் உசேன் ஆகியோ ரை மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவம னையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்ப வம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மகேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு மஞ்சப்பை குறித்து கருத்தரங்கம், விழிப்புணர்வு பேரணி, மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில், பூமிக்கு தீமை தரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். பழைய மரபுபடி அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ரவி, பவுன் ராஜ், வாசவி, திவ்யா, மகா லட்சுமி, ஹசீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுச் சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி செய்திருந்தார்.
- ஓசூரில் கட்டுமான பணிகள் முழுமை அடையாத நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை திறந்த தலைமையாசிரியை பெற்றோர், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கல்வி நிர்வாகம், தலைமையாசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபனப்பள்ளி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் ஓடு வேய்ந்த பாழடைந்த கட்டிடத்தில் 120 மாணவர்கள் படித்து வந்த நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் முயற்சியால் ரூ. 32 லட்சம் மதிப்பில் புதிதாக பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி தொடங்கப் பட்டது. தற்போது பள்ளி வகுப்புக்கள், கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் தலைமையாசிரியை ஆக லலிதா என்பவர் கடந்த 2022- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், அவரது வருகைக்கு பின்னர் பள்ளியின் வளர்ச்சி தலைகீழாய் மாறிவிட்டதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோபன பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மாணவர்கள் அதிகளவில் இந்த பள்ளியில் படித்து வந்த நிலையில், தலைமையாசிரியை செயல்பாடுகள் பிடிக்காமல், தற்போது 50 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கும், 40 சதவீதம் பேர் அருகில் உள்ள வேறு ஒர் அரசு பள்ளிகருக்கும் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 120 மாணவர்களில், 26 மாணவர்கள் மட்டுமே தற்போது இங்கு படிக்கின்றனர். இங்கு 4 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்த நிலையில், புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், கழிவறை, முன்பக்க மைதானம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மற்றும் பல்வேறு பணிகள் முடிவுறாத நிலையில், தலைமையாசிரியை லலிதா, கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட் சித்துறையினர் என யாருக்கும் எந்த வித தகவல்களையும் தெரிவிக்காமல், முன் அறிவிப்பின்றி திடீரென நேற்று கட்டிடத்தை திறந்தார்.
இதனால் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி மைதானம் சுத்தம் செய்யப்படாமல் கற்கள் குவிந்து காட்சியளித்தும், சுற்றுச்சுவர் இடிந்து விழும் சூழலில் உள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரையும் அழைக்காமல், ஏன் கட்டிடத்தை திறந்தீர்கள்? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியதால் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு பூட்டு போட்டு சமுதாய கூடத்திற்கு சென்றுவிட்டனர். இதுக்குறித்து கிராம மக்கள் கூறியதாவது;-
பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி விழாக்கள், என எந்த நிகழ்ச்சிகளுக்கும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பெற்றோர்களிடம் எவ்வித தகவல்களையும் தகவல் தெரிவிக்காமல், அவரே தன்னிச்சையாக நடத்துகிறார் என்று கூறினர். இந்த பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்ட கல்வி நிர்வாகம், தலைமையாசிரியை மீது உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளியை சிறந்த முறையில் இயங்கச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேயர் சத்யா தலைமையில் நடைபெற்றது
- கவுன்சிலர் களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டம் 2.0 ன் கீழ் ரூ.574.96 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் விரிவான விளக்க கூட்டம், நேற்று மாநகராட்சி கூட்டரங்கில் மேயர் எஸ்.ஏ. சத்யா தலைமையில் நடைபெற்றது.
துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் வழி முறைகள், திட்டத்திற்கான விதி முறைகள், திட்டம் தொடக்கம் மற்றும் நிறைவு பெறும் கால அவகாசம், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியன குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பாபு விரிவாக விளக்கி பேசினார்.
மேலும், மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர் களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கும் பாபு மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜாராம் ஆகியோர் விளக்கமளித்து பேசினர். இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவேற் றப்பட உள்ளது என்றும், அடுத்த ( 2024) ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்கி, 2027ஆம் ஆண்டுமார்ச் மாத இறுதியில் அதாவது 3 ஆண்டுகளில் முடிக்கப்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.
இதில் மாநகராட்சி பொதுக்குழு தலைவர் மாதேஸ்வரன், நகரமைப்பு குழு தலைவர் அசோகா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.






