search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பெண்கள் மாயம்
    X

    3 பெண்கள் மாயம்

    • கிருஷ்ணகிரி அருகே மாணவிகள் உட்பட 3 பெண்கள் மாயமாகினர்.
    • போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வர் 17 வயது சிறுமி. இவர் கல்லூரி ஒன்றில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதில் திம்மாபுரத்தை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூளகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். திருமணம் ஆனவர். கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதில் காருபாலாவை சேர்ந்த சக்திவேல் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. நர்சிங் மாணவி. கடந்த 27-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் மஞ்சுநாத் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×