என் மலர்
உள்ளூர் செய்திகள்

உலக அமைதிக்காக திருமூலர் சித்தருக்கு சிறப்பு வழிபாடு
- ஓசூர் அருகே உலக அமைதிக்காக திருமூலருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில்கு செல்லும் வழியிர கால பைரவர் கோவில் உள்ளது. இங்கு, உலக அமை திக்காகவும், உலக நன்மைக்காகவும் ஆருத்ரா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், சித்த காசிராஜன் தலைமையில், திருமூலர் சித்தருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கி, தொடர்ந்து பைரவர் பூஜை, நந்தீஸ்வரர் பூஜை, வராகி அம்மன் பூஜை, கோமாதா பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு களும், ஹோமங்களும், லிங்க சித்த ருக்கு சிறப்பு அபிஷே கமும் நடை பெற்றன.
பின்னர் பைரவர் தீபம், நந்தீஸ்வரர் தீபம், வராகி அம்மன் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தலைமை அர்ச்சகர் சண்முகம், வேள்வி நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இதில், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி ராஜி, கலா சந்திரன் ஆகியோரும், ஜெயகுமார் உள்ளிட்ட சிவனடியார்கள், சித்தரடி யார்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.






