search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
    X

    குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை கலெக்டர் சரயு வழங்கிய காட்சி. 

    3 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்

    • கலெக்டர் சரயு வழங்கினார்.
    • பொதுமக்கள் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டததில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 344 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சரயு, அந்த மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்கள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 900 வீதம் ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பிலான சக்கர நாற்காலிகளை கலெக்டர் சரயு வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×