என் மலர்
நீங்கள் தேடியது "வழிகாட்டல் பயிலரங்கம்"
- கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வழிக்காட்டல் பயிலரங்கம் நடைபெற்றது.
- மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளி களில் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டல் குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடந்தது.
பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடந்த இந்த உயர்கல்வி வழிகாட்டல் ஒருநாள் பயிலரங்கத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசும் போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் 95 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர் என தெரி வித்தார். உதவி திட்ட அலு வலர் வடிவேலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவ லரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கருத்தாளர்களாக சென்னை சாய்ஈசன், சவு மியா ஆகியோர் பங்கேற்று கருத்துரை யாற்றினர். இதில், அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்தி றன் கொண்ட 110 மாணவர் கள், அவர்களின் பெற்றோர் கள், 45 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.






