என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமணம் நடந்து 10 நாட்களில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு சாவு
- ஒசூரில் திருமணம் நடந்து 10 நாட்களில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு இறந்தார்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள திப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் என்கிற சந்தோஷ்குமார் (வயது28) இவருக்கும் ஸ்சுமிதா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 20ந்தேதி அன்று திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று சந்தோஷ்குமார் திடிரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஒசூர் அக்கோ போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் புது மாப்பிள்ளை சந்தோஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்று அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






