என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் விஷம் குடித்து வாலிபர் உட்பட 2 பேர் பலி யானார்கள்.
- போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தலகுண்டா பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 27) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நி லையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவ ரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர்.
இதில் மன வருத்தம் அடைந்த பாரதிராஜா நேற்று முன் தினம் வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவ ரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல னின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். இதே போன்று கர்நாடகா மாநிலம் கோலார் அருகே யுள்ள ஜெகதேனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ் ணப்பா (வயது 58) இவர் தளி அருகேயுள்ள அங்க ளாப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு நீண்ட நாட்க ளாக வயிற்று வலி இருந் துள்ளது. அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் வலி தீரவில்லை யென்று தெரிகி றது. இதனை யடுத்து கடந்த 31ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து அவரது உறவி னர்கள் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓசூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிககள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூரில், நேற்று காலை முதல் இரவு வரை நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். பொதுவாகவே ஓசூர் நகரில் வாகன போக்கு வரத்து அதிகளவில் இருந்து எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.
இந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள், குடும்பத்துடனும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் துணி கடைகள், ஷோரூம்கள், மால்கள், பலகார கடைகளுக்கு கூட்டம், கூட்டமாக வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகரின் முக்கிய பகுதிகளான எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, உழவர்சந்தை சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் வாகன போக்குவரத்து காணப்பட்டது.
காலை முதல் இரவு 9 மணியை தாண்டியும் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வாகனங்கள் அதிக எண்னிக்கையில் வந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்தை கடக்க சுமார் 1 மணி நேரம் ஆனது.
மேலும் அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தொலைவிற்கு அணி வகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வண்டிகள், அவசர பணிகளுக்காக செல்வோர், மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைய நேரிட்டது.
தீபாவளி பண்டிகை முடியும் வரை, நகரின் முக்கிய பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க கலெக்டர் அறிவுரை வழங்கினர்.
- மழைக்காலம் என்பதால், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றி லும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வீடுகளை பொதுமக்கள் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினத்தை யொட்டி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சி கள், பேரூராட்சிகள், கிருஷ் ணகிரி நகராட்சி மற்றும் ஓசூர் மாநகராட்சி பகுதி களில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது.
அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரியில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தற்போது மழைக்காலம் என்பதால், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றி லும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக நீர் தொட்டிகள் குளோரின் கொண்டு சுத்த மாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்ச லை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் வகை கொசுக்கள் சுத்தமான நீரில் தான் வளர்கிறது.
எனவே, தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்கள் மூடிய நிலையிலேயே வைக்க வேண்டும். வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காதவாறு சுத்தப்படுத்த வேண்டும். காய்ச்சல் அறி குறி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதே போல வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள தால், தாழ்வான மற்றும் மழைநீர் தேங்ககூடிய பகுதி களை அடையாளம் கண்டு, வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை நீக்கி மழைநீர் வழிந்தோடுவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளை தவ றாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், அவர்கள் பள்ளி யில் கல்வியை கற்பதோடு இல்லாமல், வீட்டிற்கு வந்த வுடன் தினந்தோறும் படிக் கின்றனரா என்பதை கண்கா ணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில், குறிப்பாக மலை கிராமங்களில் குழந் தை திருமணத்தை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வா கம் சார்பில் பல்வேறு நடவடிக் கைககள் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத் தப்பட்டு வருகிறது. குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அவ்வாறு குழந்தை திரு மணம் செய்பவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை கள் எடுக்கப்படும். அதேப் போல கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் செய்வ தை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஆணா? பெண் ணா? என்பதை கண்டறியும் ஸ்கேன் சென்டர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்து நம்ம ஊரு சூப்பர் இயக் கத்தில் தங்களை முழுமை யாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சியின் வளர்ச் சியில் முதுகெ லும்பாக திகழும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்கு விக்கும் பொருட்டு, சிறப் பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு பொன்னடை அணிவித்து, கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தில், வேளாண் மைத்துறை இணை இயக்கு நர் கிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், ராஜேஷ், தாசில்தார் விஜய குமார், ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேன்கனிக்கோட்டையில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுப்பாட்டில்களை திருடி சென்ற 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ரூ.1.90 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே இருதுக்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 16 ந்தேதி இரவு டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே புகுந்து 10 பாக்ஸ் மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராம–சாமி தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோன்று தேன்கனிக் கோட்டை சாகர் லே அவுட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாகீர்(39). இவர் அந்த பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் விபத்தில் காயமடைந்த தனது உறவினரை பார்க்க ஓசூர் சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.1.90 லட்சம் பணத்தை திருடி சென்றனர். இந்த இரு திருட்டு சம்ப வங்கள் குறித்து சப் இன்ஸ்பெக்டர் ஜெய கணேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப் பள்ளியில் வசிக்கும் மாணிக்கம் மகன் வினோத் குமார் (31), மற்றும் ஓசூர் மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்த பிரபு (எ) தர்மலிங்கம் (33) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து தேன்கனிகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
- ஓசூரில் நடைமேடை அமைக்கும் இடத்தில் மேயர் சத்யா நேரில் ஆய்வு செய்தார்.
- 8 கி.மீ தொலைவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் நடப்போம் நலம் பெறுவோம், என்கிற திட்டத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் விதமாக வருகிற 4-ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதனையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, 5 வது வார்டிற்கு உட்பட்ட அண்ணாமலை நகர் பகுதியில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 8 கி.மீ தொலைவிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இதனை ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.
இதில் மாநகர நல அலுவலர் பிரபாகர், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் நாகராஜ், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- தமிழகம் மட்டுமின்றி,கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ராகு கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று சிறப்பு யாகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு, கேது பெயர்ச்சியானது கடந்த மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.
திருக்கணித வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நேற்று அதன் முழுமை நிறைவு பெற்றதை அடுத்து, ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்து பிரவேசித்தனர்.
ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ராகு பகவான் மற்றும் கேது பகவான் மூலவராக ஒரே சந்நிதியில் காட்சி தந்து அருள் பாலித்து வருவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிலையில் இக்கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதில், தமிழகம் மட்டுமின்றி,கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பரிகார பூஜைகளில் கலந்து கொண்டனர்.முன்னதாக மூலவர் ராகு கேது பகவானுக்கு பால், தயிர்,வெண்ணை, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
பின்னர் வெள்ளிக் கவசம் அணிவித்து மலர் அலங்காரத்தில் காட்சி தந்த மூலவர்களுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலந்த தண்ணீர் வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடை்தனர்.
- ஆற்றின் கரையில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தென்பெண்ணை ஆற்றின் அருகே ஏராளமான தனியார் தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஓசூர் கெல வரப்பள்ளி அணை நீரில் கலந்து துர்நாற்றத்துடனும், நுரை பொங்கி வெளியேறி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஓசூர் அருகே தொரப்பள்ளி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு வந்த நீர், கறுப்பு நிறமாகவும், நுரையுடன் ஓடி வந்ததை கண்டு விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சிய டைந்தனர். மேலும் இந்த நீர் விஷத்தன்மை கலந்த நீர் என்றும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். தொரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான நிலப்பரப்பில் நெல், கேழ்வரகு மற்றும் தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் சாமந்தி போன்ற பூக்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நச்சுத் தன்மையுடன் கறுப்பு நிறத்தில் தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் பாய்ந்து வருவதால் விவசாயப் பயிர்கள் மிகவும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சூளகிரி அரசு பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மஞ்சப்பை விழிப்பு பேரணி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கி மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பள்ளி மாண வர்கள் ஒசூர்-கிருஷ்ணகிரி சாலையில் பேரணியாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு பொது மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராம சந்திரன், ஒருங்கி ணைப்பாளர் வெங்கடேஷ் , ஆசிரியர்கள் , பள்ளியின் தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் ஆபிதா பானு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமன், துணைத் தலைவர் ஷானு, பொருளாளர் அஷ்பர் செயலாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள் சுதாகர், சேகர், ஜெபஸ்றின்மற்றும் உறுப்பி னர்கள் , மாண வர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளர் தீர்த்தகிரி மற்றும் ஓசூர் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் கணேசன் , முகமது அலி, கோவிந்தராஜ், செல்வம் உடன் இருந்தனர்.
- வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது.
- ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கிருஷ்ணகிரியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வணிகர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் வணிகர்கள் பொது மக்களுக்கு எந்த அளவில் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை அறிவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை யாகும். அன்னிய நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றுக்கு 4 இலவசம், 2-க்கு 2 இலவசம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
பொதுமக்கள் உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க முன் வர வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை புறக்கணியுங்கள். தற்போது தீபாவளி பண்டிகை வர உள்ளது. அனைத்து கடைகளுக்கும் சென்று பொது மக்கள் பொருட்கள் வாங்க முன் வர வேண்டும். இந்த நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில், கடைகளுக்குள் நுழைந்து வணிகர்களிடையே அச்சுறுத்த கூடாது.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்படும். இந்த நேரத்தில் பட்டாசு கடைக்காரர்களுக்கு அரசு துறை அதிகாரிகள் அச்சுறுத்தலை தந்து வருகிறார்கள். சில்லறை பட்டாசு விற்பனை கடைகளில் எங்காவது விற்பனை நடந்துள்ளதா? உற்பத்தி செய்யும் இடங்களில் விபத்துக்கள் நடந்திருக்கலாம். எனவே பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் உடனே உரிய அனுமதி வழங்க வேண்டும்.
இது தொடர்பாக நாங்கள் சென்னையில் அதிகாரிகளை சந்தித்துள்ளோம். இதே நிலை நீடித்தால் ஒரிரு நாட்களில் பிரச்சினை தீராவிட்டால் முதலமைச்சரை ஒரிரு நாட்களில் சந்தித்து தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கடைகளை திறக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பக்கத்து மாநிலங்களில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் நமது மாநிலத்தில் அப்படி இல்லை. சாமானிய வணிகர்களை காக்க முதலமைச்சர் முன் வர வேண்டும்.
உள்நாட்டு வணிகர்களை காக்க வேண்டும். அதற்காக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும். ஜி.எஸ்.டி. அதிகமாக கட்ட கூடிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால் நமது மாநிலத்திற்கு வரக்கூடிய தொகை குறைவாகும். ஜி.எஸ்.டி.யில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
கவுன்சிலிங் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்படுவது வணிகர்கள் தான். வியாபாரிகளை, வணிகர்களை காக்க பிரதமர் முன் வர வேண்டும். பட்டாசு கடைகளை பொது இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதற்கான வழிமுறைகள் தற்போது இயலாது. சட்டத்தை உடனடியாக மக்களிடம் கொண்டு வந்தால் தொழில் நடத்த முடியாது. ஆகவே தகுந்த பாதுகாப்புடன் பட்டாசு கடைகளை வைக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
- போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்து சென்னமாலம் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தளி அருகே காட்டு யானை தாக்குதலில் முதியவர் ஒருவர் பலியானார் மேலும் விளை பயிர்களையும் யானைகள் நாசப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் சென்னமாலம் கிராமத்தையொட்டி உள்ள கக்கமல்லேஸ்வரம் கோவில் பகுதியில் விவசாய தோட்டத்தில் நேற்று ஒரு காட்டு ஆண் யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து செத்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ராஜமாரியப்பன் ஜவளகிரி வனசரக அலுவலர் முரளிதரன் வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருந்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதிலிருந்த 2 தந்தங்களும் மீட்கபட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.
துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட யானைக்கு 15 வயது இருக்கும் என்றும், அது ஆண் யானை என்றும், அந்த யானையை நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர் அட்டகாசத்தில் காட்டு யானைகள் ஈடுபட்டு வந்ததால், மர்ம நபர்கள் ஆத்திரத்தில் காட்டு யானையை சுட்டுக் கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் ஜவளகிரி வனத்துறையினரும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் உதவி வனப்பாது காவலர் ராஜமாரியப்பன் தலைமையில் 3வனசரக அலுவலர்கள் கொண்ட குழுவினரை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோ பூஜையும், பெண்கள் பால்குடம் எடுத்தலும் நடந்தது.
- அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே கலுகோப சந்திரம் அடுத்துள்ள பெனசப்பள்ளி கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் சாமிக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விழா நிறைவடைந்தது. 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
இதையொட்டி நேற்று காலை கோ பூஜையும், பெண்கள் பால்குடம் எடுத்தலும் நடந்தது. தொடர்ந்து கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா பூர்ணாஹிதி, மஹா–அபிஷேகம், தீபாரதனை, தீர்த்த பிரசாதம் வழங்க பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு அருள் பெற்ற னர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.
- பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- 200 க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் வாச்சாத்தி முதல் அரசநத்தம், அக்கரைக்காடு, கலசப்பாடி, கோட்டக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
மேலும் இந்த கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் பயணம் செய்ய சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் இச்சாலையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களின் பங்களிப்போடு மண் சாலை அமைக்கபட்டது. இந்த மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தார் சாலை அமைக்கவில்லை.
இது சம்பந்தமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலசப்பாடி மலை கிராமத்திற்கு கொடியேற்ற வந்தவர் இங்குள்ள ஏழு மலை கிராம மக்களை ஒன்று திரட்டி உங்களுக்கு 28 கோடி மதிப்பில் மண்சாலை தார் சாலையாக அமைக்கும் திட்டம் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் மண் சாலையாக உள்ள சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என வாக்குறிதி அளித்தார். ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதளை கண்டிக்கும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மலைநாடு பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் நிருவன தலைவர் ராமசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர்கள், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இங்குள்ள மலை கிராமத்திற்கு செல்லும் மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்காவிட்டால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை இந்த ஏழு மலை கிராம மக்களும் புறக்கணிப்போம். மேலும் தமிழக அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தொடர்வோம் என எச்சரிக்கை விடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்களின் தேனாண்டை லட்சுமண குருக்களுடன் பாரம்பரிய உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 200 க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.






