என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருவேறு இடங்களில் விஷம் குடித்து வாலிபர் உட்பட 2 பேர் தற்கொலை
    X

    இருவேறு இடங்களில் விஷம் குடித்து வாலிபர் உட்பட 2 பேர் தற்கொலை

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் விஷம் குடித்து வாலிபர் உட்பட 2 பேர் பலி யானார்கள்.
    • போலீசார் விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தலகுண்டா பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 27) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நி லையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவ ரை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர்.

    இதில் மன வருத்தம் அடைந்த பாரதிராஜா நேற்று முன் தினம் வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவ ரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பல னின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். இதே போன்று கர்நாடகா மாநிலம் கோலார் அருகே யுள்ள ஜெகதேனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ் ணப்பா (வயது 58) இவர் தளி அருகேயுள்ள அங்க ளாப்பள்ளியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவருக்கு நீண்ட நாட்க ளாக வயிற்று வலி இருந் துள்ளது. அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்தும் வலி தீரவில்லை யென்று தெரிகி றது. இதனை யடுத்து கடந்த 31ந்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து அவரது உறவி னர்கள் அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×