என் மலர்tooltip icon

    கரூர்

    • குளித்தலையில் காவிரி ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்
    • குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகன் தீபக் (வயது 14). இவன், வேங்காம்பட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    ஜோதியின் உறவினரின் மகன் கடந்த ஆண்டு இறந்துள்ளார். அவருக்கு சாங்கியம் செய்வதற்காக உறவினர்கள் அனைவரும் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரைக்கு நேற்று வந்துள்ளனர். அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தீபக்கும் ஆற்றில் இறங்கி குளித்தபோது, திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

    இதைக்கண்ட அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள், ஆற்றில் மூழ்கிய தீபக்கை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீபக்கை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தீபக்கின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜோதி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கரூரில் நல்லசாமி கூறியுள்ளார்
    • தடையை நீக்கி அறிவிக்க தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை

    கரூர்,

    கரூரில் நேற்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகம் காரணமாக கீழ் பவானி பாசனம் நடப்பு ஆண்டில் பாதிப்புக்கு ஆளாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் தற்போது வெகுவாக குறைந்ததற்கு மழை பொழிவு குறைந்ததுதான் காரணம். இதற்கு நீர்வளத்துறை அமைச்சரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.தேர்தலுக்கு முன்பு தேவையற்ற இலவசங்களை அறிவித்து அவற்றை நடைமுறை படுத்தி வந்தால் இலங்கைக்கு வந்த நெருக்கடியை விட மோசமான நிலை தான் வரும். 28 மாத கால ஆட்சியில் 8 முறை ஆவின் பால், பால் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு நிர்வாகமின்மையே காரணம்.

    தமிழகத்தில் கள், காவிரிநீர், நீட்ேதர்வு, சனாதனம் பற்றிய புரிதல் இல்லை. புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அதை செய்ய தவறினால் வருகிற 2024 ஜனவரி 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பு தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்றது
    • சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    கரூர்,

    தோகைமலை ஒன்றியம், புத்தூர் ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தனிக்காசலம் தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு, ஒவ்வொரு தெருக்களில் உள்ள வீதிகள், பள்ளிகள், பொது இடங்கள் போன்ற பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள், தேங்காய் ஓடுகளில் தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். மேலும், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்துகளை தெளித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள், தோகைமலை வட்டார கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தோகைமலை அருகே வீட்டில் இருந்து மாயமான முதியவர் தரிசு காட்டில் பிணமாக கிடந்தார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்

    கரூர், தோகைமலை அருகே உள்ள பி.சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ரத்னாசலம் (வயது 75). இவர் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ரத்னாசலத்தை அவரது மகன் கவியரசன் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் பண்ணப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையம் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தரிசு காட்டில் அழுகிய நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக கவியரசனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் சென்று அங்கு பார்த்தார். அப்போது அங்கு இறந்து கிடப்பது வீட்டில் இருந்து மாயமான ரத்னாசலம் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்னாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கவியரசன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ரத்னாசலம் வயது முதிர்வின் காரணமாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தரிசு காட்டில் போட்டு விட்டு சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • தோகைமலை போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்

    கரூர்,  

    கரூர் தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் வெள்ளைய கவுண்டனூரை சேர்ந்த ராஜ்கணேஷ் (வயது 29) என்பவர் கொசூர் கடைவீதியில் நடத்தி வரும் தனது பெட்டிக்கடையிலும், கம்பளியாம்பட்டியை சேர்ந்த ராசம்மாள் (50) தனது பெட்டிக்கடையிலும் பதுக்கி வைத்து மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து ராஜ்கணேஷ், ராசம்மாள் ஆகியோரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி வசந்தா (64) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

    • புன்னம் சத்திரம் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்
    • இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் வடிகால் பணிகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், சிலர் வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணல்களை கொட்டி வைத்து அடைத்து விடுவதாலும், கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்பதால் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகிய தொற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள்புன்னம் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று சாக்கடை கழிவு நீர் கால்வாயில் அடைபட்டு கிடக்கும் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கரூர் அரசு மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா
    • இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப் பணித் திட்டம் சார்பாக முதலாமாண்டு மாணவிகளுக்கு நோக்குநிலை திட்ட விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் ஷாலினி பிரியா இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.அரசு மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு நாட்டு நலப்பணித் திட்ட மாணவி ஷஸ்மினாபானு வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி பிரியா நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட மாணவி திவ்ய தர்ஷினி விழாவினை தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜலிங்கம், சங்கீதா, சண்முகப்பிரியா, நந்தினி, ரம்யா, சஷ்டிகா ஆகியோர் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வு
    • மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்பு ப்பாளையம், நத்தமேடு பாளையம், திருக்காடு துறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், பாலத்துறை, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர் புதூர், வாங்கல்உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாலி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு ஆய்வு

      வேலாயுதம்பாளையம்,  

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் பரமத்தி வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை களப்பயணமாக பார்வையிட்டனர். 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பற்றி பாடம் உள்ளது. இந்த பாடங்களில் உள்ள பாடத்திட்டத்தின் செயல்பாடுகளின் விளக்கங்களை அறிந்து கொள்ள எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அறிந்து கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் குற்றவியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், துணை நீதிமன்றம், நீதிமன்ற பதிவு அறைகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர். நீதிபதிகள் மாணவ, மாணவியர்கள் இடையே இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளை பற்றி விரிவாக கூறினார்கள். அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தின் அனைத்து செயல்பாடுகளை பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்த களப்பயணம் மாணவர்களின் இடையே தங்களது ஜனநாயக கடமை, சமூகப் பொறுப்புணர்ச்சியை தூண்டும் விதமாக அமைந்தது. இவர்களுடன் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தினி மற்றும் சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் உடன் இருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பார்வையிட்டு வந்த மாணவ, மாணவியர்களை ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குனர்கள் டாக்டர் அருள், இன்ஜினீயர் சேகர், சம்பூரணம் மற்றும் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்
    • 100 மாணவிகள் கலந்து கொண்டு 740 கிலோ எடை கொண்ட குப்பைகளை அகற்றினார்கள்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம்- காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கரூர் மாநகராட்சி இணைந்து நடத்திய தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து 100 மாணவிகள் கலந்து கொண்டு 740 கிலோ எடை கொண்ட குப்பைகளை அகற்றினார்கள். இந்நிகழ்வில் கரூர் மாவட்ட மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு பற்றி எடுத்துக் கூறினார்.மேலும் மாணவிகளுக்கு தூய்மை பற்றிய உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.இதில் துணை ஆய்வாளர்கள் ராஜா, கோபாலகிருஷ்ணன், மதிவாணன், சுகாதார அலுவலர் லட்சியவர்மா, பொது சுகாதார குழுவின் தலைவர் பசுவை சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ஸ்ஸ்ரீ, பாரதி, வெளி நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சுரேகா, ஜீவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வேலாயுதம் பாைளயம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பில் பனை விதை நடவு செய்த தொழிலதிபர்
    • தென்னையைவிட லாபம் கிடைக்கும் என்கிறார்

    வேலாயுதம்பாளையம்,  

    பூலோகத்தின் கற்பகத்தரு என்று போற்றப்படுவது பனைமரம். இம்மரம் சங்க காலத்தில் இருந்து தமிழ ர்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்திருந்தது. இதன் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களு ம் மனிதர்களுக்கு மட்டும ல்லாமல் சிறு உயிரின ங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

    மனித வாழ்வுக்கு தேவையான

    இதன் வேர் பகுதி விறகா கவும், சேவு நிறைந்த தண்டுப் பகுதி வீடு கட்ட சட்டங்களாகவும், அதன் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்க பயன்படும் நாரும், ஓலை கூரை வேயவும், தடுப்பு கட்டவும், வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படு கிறது.

    மேலும் கூடை, விசிறி, பாய், தொப்பி போன்ற பலவித கலை பொருட்கள் தயாரி க்கப்படுகிறது.

    அதேபோல் பனை மரம் மருத்துவ குணம் நிறைந்த பதநீர், கள், உடலுக்கு குளி ர்ச்சி தரக்கூடிய கூடிய நொங்கு, பனம்பழம், பனங்கொட்டை, நார்சத்து மிகுந்த பனங்கிழங்கு ஆகிய வற்றை தருவதுடன் பதநீரில் இருந்து பனைவெல்லம், கற்கண்டு ஆகியவையும் தயாரிக்கிறார்கள்.

    இவ்வாறு பனை மரமா னது மனித வாழ்வுக்கு தேவையானவைகளில் பெரும்பாலானவற்றை தந்தது. இதனால் அவற்றை நம் முன்னோர்கள் அனை த்து இடங்களிலும் நடவு செய்து பாதுகாத்தனர்.

    காலச்சக்கரத்தில் கற்பக தரு பல இடங்களில் காணா மல் போய்விட்டது. இன்று கிராமங்களில் அங்கொ ன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பனைமரங்களே உள்ளன.

    10 ஏக்கர்

    இந்நிலையில் பனை மரத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பத ற்காக அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் பனை மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகின்றன. அதனால் ஒரு சிலர் பனை விதைகளை நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த அன்புநாதன் பனை மரம் நடவு செய்ய முன்வ ந்தார்.

    தொழிலதிபரும் விவசா யியுமான இவருக்கு சேங்க ல்மலை அருகே 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.

    விலை அதிகரிப்பு

    இதில் மண்மங்கலத்தை சேர்ந்த பனைமர ஆர்வலர் ராமசாமி மற்றும் பசுமை தளவை இயக்க செயலாளர் அரவிந்தன் ஆகியோர் ஒத்துழைப்புடன் 4ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அன்புநாதன் கூறும் போது,

    இன்று தென்னையை விட அதிகம் லாபம் தரக்கூ டியது பனைமரம். தென்னை ஏக்கருக்கு 70 மரம்தான் வைக்க முடியும். ஆனால் பனை 400மரம் வைக்கலாம்.

    ஒரு தேங்காய் ரூ.10 வரை தான் விற்பனை ஆகிறது. ஆனால் நொங்கு ஒரு சுளை ரூ.10வீதம் ஒரு காய் ரூ.30 முதல் 50வரை விற்பனை ஆகிறது.

    அதேபோல் பதநீர், கரு ப்பட்டி ஆகியவற்றின் தேவையும், விலையும் நாளு க்கு நாள் அதிகரித்து வருகி றது.

    மேலும் தென்னை மரத்தி ற்கு தொடர்ந்து நீர் பாய்ச்சு வதுடன் உழவு, குப்பை, உரம் என்று தொடர்ந்து பராமரிப்பு செலவு செய்ய வேண்டும்.

    ஒரு வருடம் கடும் வறட்சி வந்தாலும் பல வருடங்கள் பாதுகாத்த தென்னந்தோப்பு முற்றிலும் அழிந்து விடும். ஆனால் பனை மரம் மானாவாரி பயிர், வறட்சி, வெள்ளம் என்று எந்த சுழலையும் தாங்கி வளரக்கூடியது. பராமரிப்பு செலவு எதுவும் இல்லை. லாப நோக்கில் பார்த்தால் தென்னை மரத்தை விட இன்று பனை மரமே சிற ந்தது. நமது பாரம்ப ரியத்தி ன் அடையாளமான பனை மரம் சுற்றுசூழலை பாதுகா ப்பது டன் நிலத்தடி நீரையும் பாதுகாக்கிறது என்றார்.

    பனை விதை நடவு செய்த விவசாயி அன்புநா தனை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாரா ட்டி வருகின்றனர்.

    • 2024 தேர்தலில் கரூர் பாராளுமன்ற தொகுதியை தி.மு.க. குறி வைக்கிறது
    • ஜோதிமணி எம்.பி. தொகுதி மாறுவாரா?

    கரூர்,

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. கூட்டணி இடம் பெற்று ள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளில் சரி பாதி தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. பங்கிட்டு கொடு த்தது.

    அதில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், 2 கம்யூனி ஸ்டு இயக்கங்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா 2 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்ப ட்டது.

    இதில் இந்திய ஜனநாயக தற்போது கட்சி விலகி நிற்கி றது. மக்கள் நீதி மய்யம் உள்ளே வர காத்திருக்கிறது.

    இந்த நிலையில் நடை பெற இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்றுள்ள ஒரு சில கட்சிகள் கூடுதல் இடம் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது.

    காங்கிரஸ் கட்சியும் கட ந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளையும் கேட்கி றது.

    தொகுதி பங்கீட்டைப் பொறுத்த அளவில் காங்கிர ஸுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே தொகு திகளை மீண்டும் ஒதுக்குவ தற்கான வாய்ப்பு அதிகம் இல்லை.

    தொகுதி எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருப்ப தாக சொல்லப்பட்டு வருகி றது.

    இதற்கிடையே ஒரே இய க்கம் மீண்டும் மீண்டும் அதே தொகுதியில் கோலோ ச்சுவதை தி.மு.க. விரும்பவி ல்லை. தங்களது இயக்கத்தில் இருக்கும் அந்தந்த மாவட்ட த்தில் இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

    ஆகவே கூட்டணியில் அதிக சீட்டுகள் வைத்திரு க்கும் காங்கிரஸ் தொகுதிகள் வருகிற தேர்தலில் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதில் பிரதானமாக கரூர் பாராளுமன்ற தொகு தியை தி.மு.க. தலைமை குறி வைத்துள்ளது. இந்த தொகு தியில் உடன்பிறப்புகள் நேரடியாக களம் காண தீர்மானித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜோதி மணியின் வெற்றிக்கு அமைச்சர் செந் தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். பின்னர் இடை ப்பட்ட காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் வெடி த்தது.

    அப்போதே மீண்டும் தி.மு.க. கூட்டணியில் கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கிடை க்காது என்று அக்கட்சியினர் சொல்லி வந்தனர். அது விரைவில் உறுதி யாக இருப்பதாக சொல்கிறா ர்கள்.

    ஆனால் ஜோதி மணியை பொருத்தமட்டில் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு வைத்துள்ளார்.

    ஆகவே தனக்கான ரூட் டில் சென்று சலசலப்பு இல்லாமல் மீண்டும் கரூர் தொகுதியை பெற்று அனை வரையும் வியக்க வைப்பார் அல்லது கரூரில் தி.மு.க.வி னரின் ஒத்து ழைப்பு கிடைக்காத பட்சத்தில் தொகுதி மாறி போட்டி யிடவும் வாய்ப்புள்ளது என கதர் சட்டைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    கரூர் மாவட்டத்தை பொரு த்தமட்டில் காங்கிரஸ் கட்சியினர் இடையே இண க்கம் இல்லாத நிலை இருக்கி றது.

    இவ்வாறான சூழலில் தொகுதி ஒதுக்கீட்டில் ஜோதிமணியிடம் பூத் கமி ட்டி பலத்தை தி.மு.க. கேட் டால் அது அவருக்கு நெரு க்கடியை ஏற்படுத்தும். ஆகவே நிச்சயம் வருகிற தேர்தலில் ஜோதி மணியின் திட்டம் கரூரில் எடுபடாது என தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் அடித்து கூறினார்.

    யார் என்ன சொன்னா லும் காலம் சொல்லும் பதிலுக்காக நாம் காத்திருப்போம்...

    ×