search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்
    X

    தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்

    • புன்னம் சத்திரம் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரால் தொற்று நோய் அபாயம்
    • இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு சாலையின் இரு புறமும் கழிவுநீர் சென்றிட வடிகால் கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் வடிகால் பணிகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், சிலர் வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணல்களை கொட்டி வைத்து அடைத்து விடுவதாலும், கழிவுநீர் வெளியே செல்லாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்பதால் பல்லாயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகிய தொற்றுநோய்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே சுகாதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள்புன்னம் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்று சாக்கடை கழிவு நீர் கால்வாயில் அடைபட்டு கிடக்கும் சாக்கடையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×