என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
- வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறறது
- நாளை விநாயகரை கரைப்பதற்கான ஊர்வலம் நடைபெறுகிறது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் பால த்துறை, புதுக்குறுக்கு பா ளையம், கூலக்கவுண்ட னூர், கடைவீதி, சுந்தரா ம்பாள் நகர், கொங்கு நகர், புகழி மலை அடிவாரம், காந்திநகர், நந்தவனம், கந்தம்பாளையம், முல்லை நகர், காந்தி மண்டபம், மலைவீதி ,நடுநானப்பரப்பு, அண்ணா நகர், கொங்கு நகர்,பாலத்துறை தேசிய நெடு ஞ்சாலை, கட்டிபாளையம், பாண்டிபாளையம், புன்னம்சத்திரம், செம்படாபாளையம், அண்ணா நகர் மேட்டு தெரு காவல் நிலையம் எதிரில், கந்தம்பாளையம் காலனி ,காந்தி நகர் மூன்றாவது தெரு, முருகம் பாளையம், அதியமான் கோட்டை, முல்லை நகர், அய்யம்பா ளையம், அதியமான் கோட்டை லட்சுமி நகர்,நொய்யல், மரவாபாளை யம், சேமங்கி, பெரியார் நகர் ,பிரேம் நகர், பெருமாள் நகர், அம்மாபட்டி, முருக ம்பாளையம், முத்தனூர், நடையனூர், கரைப்பா ளையம், நன்செய் புகளூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி
மற்றும் பொதுமக்கள் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது . நேற்று காலை விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .பல பகுதிகளில் அக்கினி குண்டம் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓதி அதன் பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு சுண்டல் ,பொங்கல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நாளை (20 - ந் தேதி) அனைத்து பகுதிகளிலும் உள்ள விநா யகர் சிலைகள் வாகன ங்களில் ஊர்வலமாக எடு த்துச் சென்று புகழிமலை அடிவாரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது .
அதனைத் தொடர்ந்து இரவு சுமார் 7 மணி அளவில் விநாயகர் சிலை களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தவுட்டுப்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் கரைக்க உள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வ லத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரவக்கு றிச்சி உட்கோட்ட துணைப் போலீஸ் சூப்பிரண்டு அண்ணா துரை தலை மையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்துள்ளனர்.






