வாழைத்தார்கள் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வு மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது
வாழைத்தார்கள் விலை உயர்வு
Published on

வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்பு ப்பாளையம், நத்தமேடு பாளையம், திருக்காடு துறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், பாலத்துறை, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர் புதூர், வாங்கல்உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாலி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com