என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே உள்ள நாச்சியார் குடியிருப்பை சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த லிங்கத்தை 1996-ம் ஆண்டு ஒரு கும்பல் ஜெயிலுக்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது. அவரது தலையை மீனாட்சிபுரம் பஸ் நிலையம் பகுதியில் வைத்துவிட்டுஅந்த கும்பல் தப்பி சென்று விட்டது.

    இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முன் விரோதத்தில் லிங்கம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் இந்த கொலை வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அப்போது செல்வம் தலைமறைவானார். கடந்த 27 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் செல்வம் சென்னையில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்றனர். அங்கு செல்வத்தை கைது செய்த போலீசார், இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வடசேரி போலீஸ் நிலையத்தில் செல்வத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து வடசேரி போலீஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு செல்வத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 27 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தலைமறைவாகி உள்ள பிரீத்தி, ஹரீசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், வியாபாரி. இவரது மகள் சுகிர்தா (வயது 27). இவர் குமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மயக்கவியல் மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தா கடந்த 6-ந் தேதி ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மாணவி சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

    அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரிஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பரமசிவம், ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். மூகாம்பிகா கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் தற்கொலை செய்துகொண்ட சுகிர்தாவின் லேப்-டாப், செல்போனை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை செய்துகொண்ட சுகிர்தாவின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக போலீசார் கல்லூரியிலேயே முகாமிட்டு மாணவ-மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தலைமறைவாகி உள்ள பிரீத்தி, ஹரீசை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ஹரிஷ் மதுரை ஐகோட்டில் முன் ஜாமீன் பெற்றார். இதைத் தொடர்ந்து ப்ரீத்தியை போலீசார் தேடி வந்த நிலையில் அவரும் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை நாகர்கோவில் ஜே.எம்.-1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    • உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
    • தெரு நாய்கள் மாமிச உணவுகள் ஏதும் இருந்தால் அதனை கிண்டி கிளறி சேறும் சக்தியாக மாற்றி விடுகிறது.

    இரணியல் :

    கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நுள்ளிவிளை ஊராட்சியில் வள்ளி ஆற்றின் கரை கண்டன் விளை ெரயில் பாதை அருகே பேயன் குழி மற்றும் மாடத்தட்டு விளை பகுதிகளில் வீடுகளில் இருந்து குப்பைகள் கோழி இறைச்சி கழிவுகள் மாமிச உணவுகளின் மீதம் ஆகியவை கொட்டப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனை நுள்ளிவிளை ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அப்புறப்படுத்தாத நிலை காணப்படுகிறது. மேலும் அப்பகுதி வீடுகளில் உள்ள சாக்கடை கழிவுநீர் மழைநீர் ஓடையில் பாய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது . மேலும் தெரு நாய்கள் மாமிச உணவுகள் ஏதும் இருந்தால் அதனை கிண்டி கிளறி சேறும் சக்தியாக மாற்றி விடுகிறது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் தேங்கி நிற்கும் கழிவுநீர் மூலம் டெங்கு மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் ரீங்காரம் இட்டு நுள்ளிவிளை ஊராட்சியில் சுற்றி வரும் நிலை காணப்படுகிறது. மர்ம காய்ச்சலால் மரணங்கள் பல நிகழும் முன்பு மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா

    தென்தாமரைகுளம் :

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக நேற்று தென்தாமரைகுளத்தில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் பேரூர் செயலாளர் டேனியல் தேவசுதன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், வடக்கு தாமரைக்குளம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் (தெ) ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தென்தாமரை குளம் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சாமிதோப்பு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். சாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதிவாணன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கினார்.

    இதில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர்கள் வைகுண்ட பிரபு, செல்வராணி, சீதாலட்சுமி, தனுஜா, நிர்வாகிகள் வக்கீல் பாலன், முகுந்தன், செந்தில்குமார், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது.

    • பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வர்த்தகர்கள் போராட்டம் அறிவிப்பு
    • மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

    இரணியல் :

    குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜாண் ஜோசப். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் இவரது மனைவி ஜோஸ்பின் வல்ஷா, தனது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் பெருவிளையில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது மகன் ஆஷிக் (வயது 7) மாடத்தட்டுவிளையில் உள்ள ஒரு தனியார் தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அழைத்து வர ஜோஸ்பின் வல்ஷா சென்றார்.

    அந்த நேரத்தில் வில்லுக்குறியில் பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. மாடத்தட்டுவிளையில் இருந்து வில்லுக்குறி வரும் சாலை ஓரம் கட்டப்பட்டுள்ள மழை நீர் ஓடை வழியாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக ஆஷிக், மழைநீர் ஓடைக்குள் விழுந்தார். அவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்து ஜோஸ்பின் வல்ஷா அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் ஆஷிக், நெடுஞ்சாலைக்கு அடியில் உள்ள ஓடைக்குள் சிக்கி கொண்டான். உடனடியாக மாணவனை மீட்க ஓடையில் சிலர் இறங்கி தேடினார். மறுபக்கமும் இளைஞர்கள் சிலர் சென்று தேடினர். அப்போது நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மடையை தாண்டி ஆஷிக் வெளியே வந்தான். உடனடியாக அவனை மீட்ட இளைஞர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவன் ஆஷிக் சேர்க்கப்பட்டான். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஷிக் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தொழில் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எம் முருகன், செயலாளர் பூக்கடை முருகன், பொருளாளர் மார்ட்டின் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் கூறும்போது; மாணவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் போடப்பட்டுள்ள மழை நீர் ஓடை மடையில் 3-க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்கள் போடப்பட்டுள்ளன.

    இதனால் இந்த குழாய்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் சிக்கி மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. ஆஷிக் இதில் சிக்கியதாலே உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் ஓடையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேரூர் நிர்வாகம் முன்பு கண்டன போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 2-ம் வகுப்பு பள்ளி மாணவன் மழை நீர் ஓடையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரையை தொடங்கி வைக்கிறார்
    • சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடக்கிறது.

    கன்னியாகுமரி, அக்.18-

    குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலை யில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் துர்க்கா ஷ்டமி திருவிழா நாளை தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது இதையொட்டி கன்னியா குமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை நாளை காலை தொடங்குகிறது. முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு இருமுடி கட்டு மற்றும்புனிதநீர்குடங் களில்நிரப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு உள்ள சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடக்கிறது.

    விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்ககுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளி யுறவு மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி முரளிதரன், மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிய ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சமுத்திரகிரி ரதயாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த சமுத்ரகிரி ரத யாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, குலசேகரம் வழியாக 22-ந்தேதி பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலையை சென்று அடைகிறது.

    • விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
    • பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது

    மார்த்தாண்டம், அக்.18-

    குமரி மாவட்டம் செந்தறை தனியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ.மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா .பள்ளி தாளாளர் டயானா தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜோபி முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது சொந்த நிதியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

    கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜகிளன், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கீழ்குளம் பேரூராட்சி உறுப்பினர் அனிதா ராஜகிளன், முன்னாள் மேல்புறம் வட்டாரத் தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன.
    • காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூசாரி- பாலூர் சாலையானது சுமார் 420 மீட்டர் நீளம் கொண்ட சாலை. இந்த சாலை கருங்கல்- – மார்த்தாண்டம், கருங்கல் –- புதுக்கடை ஆகிய 2 மாநில நெடுஞ்சாலைகளை இணைப்பதும், திப்பிறமலை கிராம ஊராட்சியையும் பாலூர் கிராம ஊராட்சி யையும் இணைப்பதுமான இணைப்பு சாலையாகும்.

    2 மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக் கின்ற இணைப்பு சாலையாக இருப்பதால் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்கின்றன. நீண்டகாலமாக இந்த சாலை செப்பனிடாத காரணத்தினாலும், கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் கணப்பட்டது. இதனால் இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வ தற்கும் முடியாத நிலையில் அவதிப்பட்டனர்.

    எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மூசாரி – பாலூர் செல்லும் சாலையை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் துறையின் மூலமாக தேர்வு செய்து அரசாணை பிறப்பித்து தரம் உயர்த்தி உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வந்தார்.

    இதனையடுத்து இந்த சாலையை கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்டது. நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலை அலகினால் மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தி ரூ.30 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

    இப்பணிக்கான மதிப்பீடு தயாரிக்கும் போது பொது மக்களால் சாலையின் மொத்த அகலத்திற்கும் ஓடுதளம் அமைக்க கோரப்பட்டதை தொடர்ந்து 3.75 மீட்டர் தார் தளமும் அதன் இரு புறங்களிலும் பாவு தளமும் அமைத்திட ரூ.80 லட்சம் வரை தேவைப்பட்டதால் இப்பணிக்கான கூடுதல் தொகை ரூ.50 லட்சம், கூடுதலாக ரூ.80 லட்சத்திற்கு திருத்திய நிர்வாக அனுமதிக்கான கருத்துரு தலைமை பொறியாளர் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் சமர்பிக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் ரூ.80 லட்சம் திருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சேர்த்து சாலை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தனர். இதனையடுத்து சாலை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சாலை சீரமைக்கும் பணியை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கியூபர்ட் ராஜ், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் பிறைட், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் லெனின் குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • எம்.டி.பி. சமுதாய நல கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறு கின்றது.
    • மணமக்கள் பெற்றோர், மணமகள் சகோதரர் ரிஷ்வின் ஆல் வின் மற்றும் உறவினர்கள் செயது வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் சுசூகி மற்றும் நிஸான் நிறுவனங்களின் நிறுவனர் ஆல்வின்-ஜெயஷீலா ஆல்வின் தம்பதியரின் மகள் டாக்டர் ரித்து ஆல்வின், சென்னை வேட்டு விஷன் இந்தியாவின் தலைமை கணக்கு அதிகாரி ஜெயசிங்- அம்பத்தூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியை மார்கிரட் ேஜாஸ்பின் தம்பதியரின் மகன் டாக்டர் மேஷாக் ஜெயசிங், இவர்களது திருமணம் நாளை வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நாகர்கோவில் சி.எஸ்.ஐ. சபை தேவாலயத்தில் சி.எஸ்.ஐ. பேராயர் பேரருட்பணி செல்ைலையா தலைமையில் திருமண ஆராதனை தொடர்ந்து கோட்டாறு பறக்கை சந்திப் பில் அமைந்துள்ள எம்.டி.பி. சமுதாய நல கூடத்தில் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறு கின்றது.

    திருமண விழாவில் ெதாழிலதிபர்கள், நிஸான் மற்றும் சுசூகி நிறுவனங்களின் அதிகாரிகள், அலு வலர்கள், அரசியல்கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகின்றனர்.

    திருமண விழா நிகழ்சசி ஏற்பாடுகளை மணமக்கள் பெற்றோர், மணமகள் சகோதரர் ரிஷ்வின் ஆல் வின் மற்றும் உறவினர்கள் செயது வருகின்றனர்.

    • இட்லி, அதிரசம், அச்சுமுறுக்கு, மோதகம் என பலவகை உணவுகள் காட்சிப்ப டுத்தபட்டன.
    • ஆசிரியைகள் ஸ்வீட்லின், ஷைனி, சுதா, வினிதா, டயானா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சுங்கான் கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    மாணவர்கள் பெற்றோ ரின் உதவியுடன் தயாரித்துக் கொண்டு வந்த தானிய வகைகளில் செய்த உணவு வகைகளான கம்புஇட்லி, நவதானிய சுண்டல், பச்சைப்பயிறு உருண்டை, சாமைபிரியாணி, வெண் பொங்கல், சத்துமாவு உருண்டை கேழ்வரகு அல்வாலட்டு, எள்ளு ருண்டை, கடலை உருண்டை, கேழ்வரகுகளி, முருங்கைக்கீரை, இட்லி, அதிரசம், அச்சுமுறுக்கு, மோதகம் என பலவகை உணவுகள் காட்சிப்ப டுத்தபட்டன.

    விழாவில் பாரம்பரிய உணவு வகைகள் எவை? அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியைகள் சுனிமேரி மற்றும் மைக்கேல் ராணி ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

    உணவுத் திருவிழாவினை பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் அறிவுரைப்படி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட், முதல்வர் டாக்டர் பீட்டர் அந்தோணி சுரேஷ், ஆரம்பநிலை ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சோனியா, ஆசிரியைகள் ஸ்வீட்லின், ஷைனி, சுதா, வினிதா, டயானா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

    • 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசு
    • போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம் பாராட்டினார்

    நாகர்கோவில், 

    மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கராத்தே போட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசையும், மாணவி பிரித்தீ 2-ம் பரிசையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவிகள் சங்கீஷா கராத்தே குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும், சரணிஷா குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும் கட்டா பிரிவில் 3-ம் பரிசையும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் கட்டா, குமித்தே போட்டிகளில் மணவன் ராகவ் முதல் பரிசை வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், இயக்குனர்கள் முகிலரசு, ஆடலரசு, முதல்வர் தீபாசெல்வி, ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், ஆனிரீனா, சேவியர், வனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்தரசி, ஓசான்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

    • நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை கடைவிளை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 58), பாகோடு ஏலாகரை பகுதியைச் சேர்ந்த மேரி (70) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து சோதனை செய்த போது நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    ×