search icon
என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி?
    X

    பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி?

    • பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்
    • பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழைக்காலங்களில் விபத்தை தவிர்க்கும் பொருட்டு வீடுகளில் இன்வெர்ட்டர் பயன் படுத்தும்போது நுகர்வோர் கள் அதற்கென நியூட்ரல் வயரினை தனியாக பயன்படுத்த வேண்டும். நில இணைப்புக்கானது குறைந்தபட்சம் 3 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத் தப்படும் கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி, அயர்ன் பாக்ஸ், துணி துவைக்கும் எந்திரம் போன்ற சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவற்றை பயன்படுத்தும்போது காலணிகள் அணிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு, வீடுகள் மற்றும் ஓ.எச்.டி. மின் இணைப்புகளில் உள்ள மின் மோட்டர்களில் பணிபுரியும் போது கவனமுடன் பாதுகாப்பாக பணி புரியுமாறும், அருகில் உள்ள வயரிங் மற்றும் சர்வீஸ் வயர்கள் நல்ல நிலையில் உள்ளதையும் சர்வீஸ் பைப்பில் பி.வி.சி. குழாய் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிட வேலை செய்யும்போது அருகில் போதிய இடைவெளி இன்றி செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றி அமைத்த பின் பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். குளிர் சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற சாதனங்களை சுத்தம் செய்யும்போது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் மின் சாதனங்களில் கவனமுட னும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி யும் மின் விபத்துகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×