search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 2000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
    X

    மார்த்தாண்டம் அருகே காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 2000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

    • 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த வருவாய் துறையினர்
    • கடத்தல் காரை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    களியக்காவிளை :

    தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தி லிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜ சேகர் தலைமையில் வரு வாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழுவினர் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டி ருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் சென்றார். உடனே அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்று சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கல்லுவிளை பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×