search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வதிபுரத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பார்வதிபுரத்தில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்: தமிழ்நாடு மின் ஊழியர் சி.ஐ.டி.யூ. மத்திய அமைப்பின் சார்பில் பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. பிரபகுமார் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் செல்லச்சுவாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தங்கமோகனன், துணைத்தலைவர் ஜான் சவுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மின்சார வாரியத்தில் கடந்த பல வருடங்களாக ஒப்பந்தப் பணியாளர்களாக இருப்பவர்களை நிரந்தரப்படுத்த வேண்டியும், புதிதாக போடப்பட்ட இ-டெண்டர் முறையை ரத்து செய்திட வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடந்தது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டச் செயலாளர் குணசேகரன், பொருளாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×