search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பலி
    X

    களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பலி

    • கரைக்கு வந்த குழந்தைகள் அப்பாவை காணாததால் சத்தமாக அழுதுள்ளனர்.
    • களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே பனச்சக்குழி மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜில் (வயது 40). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். விஜில் களியக்காவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை விஜில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டு அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.

    மேலும் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறி 2 குழந்தைகளுடன் குளத்தில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தைகள் கரைக்கு வந்துள்ளனர். ஆனால் விஜில் கரைக்கு வரவில்லை. விஜில் குளத்தில் மூழ்கினார். விஜில் போதையில் இருந்ததால் கரைக்கு வரமுடியாமல் குளத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. கரைக்கு வந்த குழந்தைகள் அப்பாவை காணாததால் சத்தமாக அழுதுள்ளனர்.

    குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தினர் குளத்தில் இருந்து விஜிலை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விஜில் உடல் பிரேத பரி சோதனைகாக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×