என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
    • தமிழகத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் ஒரே ஒரு தடுப்பூசி மையம் மட்டுமே செயல்படுகிறது.

    நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பெரும்பாலானோ 2 தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒமைக்ரான் தொற்று 3-வது அலையை ஏற்படுத்தியது. அப்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பிணகள் தொடங்கியது. ஆனால் ஒமைக்ரான் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதால் பொரும்பாலான பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடவில்லை.

    இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை தடுக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பலர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வந்துள்ளனர்.

    அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் ஒரே ஒரு தடுப்பூசி மையம் மட்டுமே செயல்படுகிறது.

    இங்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி கிடைக்கிறது. கிண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே உள்ளது. மற்ற மருத்துவ மனைகளில் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. கோவின் செயலியில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய முடிகிறது. அனால் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி கிடைப்பது காரணமாக உள்ளது.சென்னையில் ஒரு தடுப்பூசி மையமும், மதுரையில் ஒரு தடுப்பூசி மையமும் செயல்பட்டு வருகிறது. ஆனால் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் ஒரு தடுப்பூசி மையம் கூட இல்லை.

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்துகிறது.

    தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்களில் 60 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் பொது மக்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்:-

    'தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஆண்டு தடுப்பூசிகள் கிடைத்த போது கொரோனா தொற்று குறைந்ததால் பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசி உற்பத்தி கடந்த 8 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் தடுப்பூசி நிறுவனங்கள் தங்களுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்' என்றார்.

    இது குிறத்து தனியார் மருத்துவமனை மேலாளர்கள் கூறுகையில்,

    'கடந்த ஆண்டு போல தடுப்பூசி வீணாகாமல் இருக்க, தடுப்பூசிகளுக்காக பொதுமக்கள் முன்பதிவு செய்த பிறகே தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவு எடுத்துள்ளோம்' என்றார்.

    • வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.

    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிறுவஞ்சி பட்டு பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ்(வயது25).

    இவர் திருவேற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து உள்ளார். இவருக்கும் திருவேற்காடு பகுதியைசேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

    பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மோகன் ராஜ்-இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களது திருமணத்தை வருகிற 26-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது அங்கு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இறந்து கிடந்தார். இதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அந்த வழியாக வந்த போது முன்னால் சென்ற லாரியை திடீரென டிரைவர் நிறுத்தினார். இதில் பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் முதியவர் மற்றும் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கோளிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ராவத்தநல்லூர், வாலாஜாபாத் வட்டத்தில் பூசிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கோவிந்தன் வீட்டி நகை-பணம் இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
    • கோவிந்தன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த நீர் வல்லூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.

    இவரது மகன், மகள் திருமணமாகி வேறு இடத்தில் வசித்து வருகிறார்கள். இதனால் கோவிந்தன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் கோவிந்தன் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோவிந்தன் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது உடலில் எந்த காயமும் இல்லை. வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிந்தனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கோவிந்தன் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. நள்ளிரவு வந்த மர்ம கும்மபல் அவருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    கோவிந்தன் வீட்டில் நகை-பணம் இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அவருக்கு நன்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து கோவிந்தன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது.
    • இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற பெண்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் போலீசாரால் மீட்கப்படும் சிறுமிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை காப்பகத்தில் இருந்த 6 பெண்கள் திடீரென மாயமானார்கள். காப்பக பாதுகாவலர் ஆய்வு செய்தபோது 6 பேர் காப்பகத்தில் இருந்து ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காதல் விவகாரத்தில் மீட்கப்பட்டவர்கள் என்றும் தெரிகிறது.

    இதுகுறித்து சிவகாஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படட்டது. போலீசார் மாயமான பெண்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 112 மாணவர்கள், 19 ஆயிரத்து 238 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
    • புழல் ஜெயிலில் 46 கைதிகள் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8,445 மாணவர்கள், 7989 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 434 பேர் தேர்வு எழுதினர்.

    பொதுத்தேர்விற்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, 5 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 5 கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 63 தேர்வு மையங்களுக்கு 63 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 63 துறை அலுவலர்களும், 11 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 177 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    25 ஆயிரத்து 531 மாணவர்களும் 24 ஆயிரத்து 682 மாணவிகளும் என மொத்தம் 50 ஆயிரத்து 213 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.

    மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வு மையங்களில் செல்போன் மற்றும் டிஜிட்டல் வாட்ச் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 112 மாணவர்கள், 19 ஆயிரத்து 238 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 350 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இதற்காக 119 தேர்வு மையம், 7 தனித்தேர்வு மையம் என மொத்தம் 126 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மாவட்டத்தில் தேர்வை கண்காணிக்க 225 பறக்கும்படையினர் 1950 அறைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    புழல் ஜெயிலில் 46 கைதிகள் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். சிறை ஒன்றில் 32 பேரும், சிறை எண்-2ல் 10 பேர், பெண்கள் சிறையில் 4 பேர் தேர்வு எழுதினார்கள்.

    • அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.
    • சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர். அதில் வந்த சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோதும் எதுவும் இல்லை. மீண்டும் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் மின்சார மோட்டார் இருந்தது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக அந்த மோட்டார் சற்று கனமாக இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த மின்மோட்டாரை உடைத்து பார்த்தனர். அதில் தங்கத்தை உருளை போல் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ.95 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
    • காஞ்சிபுரத்தில் தொழிலாளி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி ஞானசேகர் (வயது 58). இவர் வாடகை வீட்டில் தனது மனைவி ஹேமலதா என்பவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும் திருமணமாகி சென்ற நிலையில் கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்குமிடையே அவ்வப்போது சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே கோபமடைந்த ஞானசேகரின் மனைவி தனது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த வந்த ஞானசேகரன் மனஉளச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டின் உரிமையாளர் கீழே இறங்கி வெளியே செல்லும்போது ஞானசேகரனின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஞானசேகரன் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து ஞானசேகரனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி.
    • வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி. இதன் தலைவராக கோபி, துணைத்தலைவராக ஆறுமுகம் உள்ளனர். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஊராட்சி தலைவர் கோபி, துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் அனைத்தும் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பிறப்பித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார் குளம் ஊராட்சி தலைவியாக இருந்தவர் வேண்டா சுந்தரமூர்த்தி. இவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய அதிகாரத்தையும் நிறுத்தி வைப்பதாக கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

    • போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாயபாரத், ஆரோக்கிய அருண், இருதயராஜ்.

    இவர்களில் சகாயபாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றினார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக இருந்தார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொது மக்கள் மற்றும் போலீசாரிடம் பணத்தை வசூல் செய்தனர். இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.

    ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்த இருதயராஜ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    • கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சென்னையில் 2-விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.

    இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் மாலையில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஏகனாபுரம் கிராமமக்களை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் நேற்று 250- வது நாளை எட்டியது. இதையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வன்னியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். ஏகனாபுரம் கிராம மக்களின் போராட் டம் 250 நாளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.

    • பாஜக சுவர் விளம்பரப் பணிகளை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
    • கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்திற்கு பாஜகவினரை சந்திக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுவர் விளம்பரப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

    அப்போது, சிலிண்டர் விலை உயர்வு குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிலிண்டர் எரிவாயுவை இறக்குமதி செய்வதால், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதாகவும், கூடுதலாக மானியம் வழங்க போதிய நிதி இல்லை என்றும் கூறினார். மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    இந்தியாவில் சிலிண்டர் எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லாதததால், சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    ×