search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் 250 நாட்களை கடந்தது
    X

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் 250 நாட்களை கடந்தது

    • கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    சென்னையில் 2-விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது.

    இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 13 கிராமமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் மாலையில் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஏகனாபுரம் கிராமமக்களை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் நேற்று 250- வது நாளை எட்டியது. இதையொட்டி ஏகனாபுரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வன்னியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். ஏகனாபுரம் கிராம மக்களின் போராட் டம் 250 நாளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.

    Next Story
    ×