search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram accident"

    • வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.

    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிறுவஞ்சி பட்டு பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ்(வயது25).

    இவர் திருவேற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து உள்ளார். இவருக்கும் திருவேற்காடு பகுதியைசேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

    பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மோகன் ராஜ்-இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களது திருமணத்தை வருகிற 26-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது அங்கு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இறந்து கிடந்தார். இதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அந்த வழியாக வந்த போது முன்னால் சென்ற லாரியை திடீரென டிரைவர் நிறுத்தினார். இதில் பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் முதியவர் மற்றும் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.
    • போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவளூர் கிராமத்திற்கு இடையே சுமார் 1.2 கி.மீ. நீளமுள்ள தரைப்பாலம் உள்ளது.

    அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியான் குடிசை, கணபதிபுரம், இளையனார்வேலுார், நெய் குப்பம், ஆசூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற தொழிற்பேட்டைகளுக்கும் சென்னை- பெங்களூரு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் செல்கிறார்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இந்தப் பாலாற்று பாலம் தான் பிரதான போக்குவரத்து சாலையாக விளங்கி வருகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் சேதம் அடைந்தது.

    இதனால் வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தில், வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.

    போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் களகாட்டூர், மேட்டு தெரு, பெரியார் நகர் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வாலாஜாபாத் சென்றனர்.

    பாலத்தை சீரமைக்க கோரி பல போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தியதை தொடர்ந்து, சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கடந்த டிசம்பர் மாதம் பாலத்தின் உடைந்த பகுதிகளில் மட்டும் கிராவல் மண் மற்றும் மணல் மூட்டைகளை கொட்டி தற்காலிகமாக பாலத்தை சீரமைத்து வாகன போக்குவரத்தை தொடங்கினர். தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட இந்த தரை பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. பாலம் உறுதியற்ற தன்மையில் இருந்ததால் கனரக வாகனங்கள், டிப்பர் லாரிகள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வாலாஜாபாத் - அவளூர் வழித்தடத்தில், கற்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான டிப்பர் லாரிகளும், கனரக வாகனங்களும் செல்வதால், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் மண் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. இதனால் பாலத்தின் அகலமும் குறைந்து காணப்படுகிறது. மேலும் தரை பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும்போது, மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முடியாத சூழ்நிலை உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது அவ்வப்போது இந்த தரைபாலத்தில் விபத்து ஏற்படுகின்றது.

    இந்த நிலையில் நேற்று கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று இந்த தரைப்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயம் இன்றி உயிர் தப்பினார்.

    இந்த நிலையில் வருகின்ற மாதங்கள் மழைக்காலம் என்பதால் இந்த தரைப்பாலம் மேலும் சேதமாகும் அபாயம் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த தரைப்பாலத்தை மாற்றி மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மரணமடைந்த வியாபாரியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (33). சமோசா வியாபாரி.

    சேகர் நேற்று இரவு அவருடைய நண்பர் தனியரசு (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாலுசெட்டி சத்திரம் சென்றார். பின்னர் இருவரும் பிள்ளையார் பாளையம் திரும்பினார்கள்.

    இரவு 10 மணியளவில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் சென்னை- பெங்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தது. சேகர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தனியரசு பின்னால் உட்கார்ந்து இருந்தார். கிழம்பி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வியாபாரி சேகர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தனியரசு படுகாயத்துடன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்து குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விசாரணை நடத்தி வருகிறார். வியாபாரி மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வியாபாரி சேகர் தனது கண்களை ஏற்கனவே தானம் செய்து இருந்தார். எனவே அவருடைய கண்களை தனியார் கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தானமாக பெற்று சென்றனர். #Tamilnews
    ×