search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eyes donate"

    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மரணமடைந்த வியாபாரியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (33). சமோசா வியாபாரி.

    சேகர் நேற்று இரவு அவருடைய நண்பர் தனியரசு (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாலுசெட்டி சத்திரம் சென்றார். பின்னர் இருவரும் பிள்ளையார் பாளையம் திரும்பினார்கள்.

    இரவு 10 மணியளவில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் சென்னை- பெங்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தது. சேகர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தனியரசு பின்னால் உட்கார்ந்து இருந்தார். கிழம்பி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வியாபாரி சேகர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தனியரசு படுகாயத்துடன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்து குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விசாரணை நடத்தி வருகிறார். வியாபாரி மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வியாபாரி சேகர் தனது கண்களை ஏற்கனவே தானம் செய்து இருந்தார். எனவே அவருடைய கண்களை தனியார் கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தானமாக பெற்று சென்றனர். #Tamilnews
    ×