search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர்களின் அதிகாரம் நிறுத்தி வைப்பு
    X

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர்களின் அதிகாரம் நிறுத்தி வைப்பு

    • ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி.
    • வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி. இதன் தலைவராக கோபி, துணைத்தலைவராக ஆறுமுகம் உள்ளனர். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஊராட்சி தலைவர் கோபி, துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் அனைத்தும் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பிறப்பித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார் குளம் ஊராட்சி தலைவியாக இருந்தவர் வேண்டா சுந்தரமூர்த்தி. இவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய அதிகாரத்தையும் நிறுத்தி வைப்பதாக கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.

    Next Story
    ×