என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஊராட்சி தலைவர்களின் அதிகாரம் நிறுத்தி வைப்பு
- ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி.
- வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ளது மாத்தூர் ஊராட்சி. இதன் தலைவராக கோபி, துணைத்தலைவராக ஆறுமுகம் உள்ளனர். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக வார்டு உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே ஊராட்சி தலைவர் கோபி, துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோரின் அதிகாரம் அனைத்தும் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பிறப்பித்து உள்ளார்.
இதேபோல் காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார் குளம் ஊராட்சி தலைவியாக இருந்தவர் வேண்டா சுந்தரமூர்த்தி. இவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய அதிகாரத்தையும் நிறுத்தி வைப்பதாக கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்