என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே இன்று அதிகாலை மளிகை கடையில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் துறையூர் இடையர்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    குமார் ஈரோடு பூந்துறை ரோடு வாய்க்கால்மேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். குமார் தனது சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். எனவே அந்த பணிகளை பார்வையிட அவர் ஊருக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சரண்யா மளிகை கடையை கவனித்து வந்தார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையின் ஷட்டரை சரண்யா பூட்டி விட்டு சென்றார்.

    இன்று அதிகாலை 5.30 மணி அளவில் வழக்கம்போல் மளிகை கடையை திறக்க சரண்யா வந்தார். அவர் கடையின் ஷட்டரில் இருந்த பூட்டை திறக்க முயன்றார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உட்கார்ந்த நிலையிலேயே சரண்யா இறந்து விட்டார்.

    அந்த நேரத்தில் கடைக்கு பால் வாங்க அதே பகுதியை சேர்ந்த காவேரி என்ற பெண் வந்தார். அவர் சரண்யாவை அழைத்தார். அவர் பதில் ஏதும் சொல்லாததால் சந்தேகம் அடைந்த காவேரி சரண்யாவின் மீது கை வைத்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அலறி அடித்து கொண்டு ஓடி விட்டார். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் கூறினார்.

    இதையடுத்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மளிகை கடையின் மின் இணைப்பை துண்டித்தனர்.

    பின்னர் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மளிகை கடை திறக்க வந்த தனது தாய் இறந்த தகவல் கிடைத்ததும் அவரது மகன் மற்றும் மகள் ஓடி வந்து தாயின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் துறையூருக்கு சென்ற சரண்யாவின் கணவருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாய்க்கால்மேடு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் லேசான மழை பெய்தது. எனவே மின்கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசாரும், மின்சார துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்வது குறித்தும்,விற்பனை குறித்தும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கேட்டறிந்தார்.
    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டிலுள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, ஆவின் நிறுவனத்திலுள்ள பால் குளிரூட்டும் பகுதி , பால்கோவா, வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட ஆவின் பொருட்களை உற்பத்தி செய்யும் பகுதிகளை ஆய்வு செய்த மத்திய மந்திரி,  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்வது குறித்தும், விற்பனை குறித்தும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் பால்வளத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆயிவின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர், பால்வளத்துறை ஆணையர் பிரகாஷ்  மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை கொள்ளை சம்பவம் குறித்து சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை கொள்ளை சம்பவம் குறித்து சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிரா  மூலம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 68).விவசாயி. இவரது மனைவி ஜெயமணி (65). இவர்களுக்கு  கீதா, சுமதி என 2 மகள்களும், நாகராஜ் என்ற மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித் தனியே வசித்து வருகின்றனர்.  

    துரைசாமி, ெஜயமணி ஆகிய இருவரும் தினமும் இரவு வீட்டின் வெளியே வாசலில் கட்டிலில் படுத்து தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு துரைசாமியும், ஜெயமணியும் வீட்டு வாசலில் ஆளுக்கு ஒரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

    அப்போது அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துரைசாமியை அரிவாளால் வெட்டி–யுள்ளனர். மேலும் அவரது மனைவி ஜெயமணியையும் அரிவாளால் வெட்டி வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை–யர்கள் வெட்டியதில் துரைசாமி சம்பவ இடத்தி–லேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ஜெயமணி உயிருக்கு போராடிக்கொண்டி ருந்தார். 

    சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை போலீசார் துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை மருத்துவ–மனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜெயமணியை மீட்டு சிகிச்சைக்காக அதே பெருந்துறை  மருத்துவ–மனையில் அனுமதித்தனர். இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி ஆகியோர் நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை கண்டு–பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

     வட மாநிலத்தவர்கள் இந்த கொள்ளை -கொலை சம்பவத்தில் ஈடுபட்டி–ருக்கலாம் என தகவல் பரவியது. ஆனால் இது குறித்து முழுமையாக விசாரித்த பிறகு கூறமுடியும் என போலீசார் தெரிவித்தனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கொலை நடந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இதனால் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டி–ருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் துரைசாமி வீட்டுக்கு அடிக்கடி வருபவர்கள் விவரங்கள் சேகரித்து அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    உப்பிலிபாளையம் பகுதியை ஒட்டி திருப்பூர் பகுதி தொடங்குகிறது. திருப்பூர் பகுதிகளில் இதேபோல் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.  அதில் ஈடுபட்ட கும்பல் தான் இந்த கொலையில் ஈடுபட்ட இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இதற்கிடையே கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஜெயமணிக்கு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நலம் தேறிய பிறகு அவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைடைந்துள்ளனர்.
    தாளவாடி:

    தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தின் கடைகோடி மலைப்ப–குதியில் தாளவாடி, கொங்க–ள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதிநகர், கெட்டவாடி, அருள்வாடி போன்ற 40 கிராமங்கள் உள்ளன.  

    இங்குள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். தங்களுடைய நிலங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய காய்கறிகளை அதிகம் சாகுபடி செய்து வருகிறார்கள். 
    குறிப்பாக சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான தோட்டங்களில் முட்டைக்கோஸ் அறுவடைக்கு தயாராக உள்ளது.

    ஆனால் தோட்டத்துக்கு வந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைக்கோசை 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரையே கேட்கிறார்கள். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, ‘3 மாத பயிரான முட்டைகோசை ஒரு ஏக்கருக்கு சாகுபடி செய்தால் நாற்று நடுதல், களை எடுத்தல், உரம், மருந்து என ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இந்த பருவத்தில் ஓரளவு மழை பெய்ததால் முட்டைக்கோஸ் நன்றாக வளர்ந்துள்ளது. 

    ஆனால் எங்களிடம் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டை கோசை 3 ரூபாய்க்கு கேட்கிறார்கள்.ஆனால் கடைகளில் சில்லரை விற்பணையில் கிலோ ரூபாய் 25,முதல் 30 வரை விற்பணை செய்யபடுகிறது  விளைச்சல் அதிகம் என்று கூறி விலை குறைக்கிறார்கள். 

    ஒரு கிலோ முட்டை–க்கோசை நாங்கள் 6 ரூபாய்க்கு விற்றால்தான் கூலியாவது எங்களுக்கு கிடைக்கும். 

    தற்போது 3 ரூபாய்க்கு கேட்டால் எங்களால் அசல் தொகையை கூட எடுக்கமுடியாது  தொடர்ந்து 2 மாதமாக இதே விலை நீடிப்பதால் நஷ்டத்துக்கு விற்கிறோம்.

    இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு விவசாயி–களுக்கும் லாபம் வரும் வகையில் வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

    முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளரின் கணவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் தமிழரசி. இவர் டி.என்.பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளராக உள்ளார். இவரது கணவர் ஈஸ்வரன் என்கிற அர்த்தனாரீஸ்வரன் (50) அ.தி.முக. உறுப்பினர்.

    அர்த்தனாரீஸ்வரன் 8 வழிச்சாலை குறித்து தமிழக முதல்-அமைச்சர் பற்றி வாட்ஸ்அப் மூலம் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அர்த்தனாரீஸ்வரன் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அர்த்தனாரீஸ்வரன் மீது அரசுக்கு எதிராக அவதூறு பரப்புதல், வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.


    ஈரோடு கொங்கம்பா–ளையம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் பன்னீர்செ–ல்வம். இவரது மகன் மோகன–சுந்தர்(25). இவர் ஈரோடு ராசாம்பாளையம் சாலையில் சம்பவத்தன்று  நடந்து சென்றார். 

    அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோகனசுந்தரை மிரட்டி சட்டை பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த ஸ்மார்ட்  செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.  செல்போ–னின் மதிப்பு ரூ. 12 ஆயிரம் ஆகும்.

    இது குறித்து மோகன–சுந்தர்  வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு க்கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். 
       
    விசாரணையில் அவர்கள் மனோஜ் குமார்(22), பாலசுப்பிரமணியம் (19), மற்றும் 18 வயதுக்கு–ட்பட்ட சிறுவன் என தெரியவந்தது. இவர்கள்தான் மோகன–சுந்தரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

    இதையடுத்து சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மனோஜ் குமார், பாலசுப்பிரமணியம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவனை கோவையில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
    தாளவாடியில் வனக்குட்டையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டமாக வந்து செல்கிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குபடி வனத்துறையினர் தெரிவித்தனர்.
    தாளவாடி:

    தாளவாடியில் வனக்குட்டையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டமாக வந்து செல்கிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குபடி வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி,தலமலை, ஜூர்கள்ளி, ஆசனூர்,–கேர்மாளம், கடம்பூர்,டி.என்.பாளையம்,பவானிசாகர், விளாமுண்டி, சத்திய–மங்கலம் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. 

    இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய், கரடி, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  மலைப்ப–குதியில் தற்போது கோடை மழை பெய்து வருவதால்  குளம், குட்டைகள்   தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றன.

    இந்நிலையில்  தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மகாராஜன்புரம்  அருகே  வனக்குட்டை அமைந்துள்ளது.  இந்த வனகுட்டையில் தண்ணீர் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் குட்டி–யுடன்  கூட்டமாக வந்து  தண்ணீர் குடித்து செல்கிறது. சில நேரங்களில் யானைகள் குட்டையில் குளித்து கும்மாளமிட்டு வருகிறது.

    எனவே வனப்பகுதிக்குள் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கு–ம்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    வெள்ளோடு அருகே குடிேபாதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகறார்கள்.
    பெருந்துறை:

    வெள்ளோடு அருகே குடிேபாதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகறார்கள்.

    பெருந்துறையை அடுத்துள்ள வெள்ளோடு, கனகபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி  மகன் கார்த்தி  (35). கார்த்தி மது போதைக்கு அடிமையானவர். அடிக்கடி மனைவியிடம், பெற்றோரிடமும், உறவினர்களிடமும், ஊர்க்காரர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

    கார்த்திக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக்கின் மனைவி கவிதா புகார் அளித்ததின் பேரில் அங்கு விசாரித்துள்ளனர்.

     இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த கார்த்தி  கனகபுரம் பகுதி கருப்பராயன் கோவில் அருகே உள்ள ஒரு வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    அந்த வழியாக சென்றவர்கள் கார்த்திக்கின் தந்தையிடம் தெரிவித்ததன், பேரில் அவர் அங்கு சென்று பார்த்து விட்டு வெள்ளோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வெள்ளோடு எஸ்ஐ மணிவண்ணன் வழக்கு ப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    அந்தியூரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    அந்தியூர்:

    அந்தியூரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    அந்தியூர் அரசு மருத்துவ மனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு மருத்துவமனை மற்றும் அல்ட்ரா தொண்டு நிறுவனம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.

    இதில் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் விஸ்வேஸ்வரன் தலைமையில் அரசு மருத்துவ மனையை சுற்றியுள்ள காலி இடங்களில் தூய்மைப் பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுத பாணி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ராம்குமார் பூமி தினத்தின் சிறப்புகளையும் மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள், மண்ணின் வளங்கள்பற்றி விளக்கி பேசினார்.

    தொடர்ந்து அவர் பேசும் போது, பூமியும் குளிர்ச்சி அடைந்து மழை வளத்தை பெருக செய்து மக்களின் தேவைகள் அனைத்தையும் சரி செய்யக் கூடிய வல்லமை கொண்ட இந்த மரங்களை நாம் ஒவ்வொரும் தங்கள் வீடுகளில் உள்ள காலி இடங்களில் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து நம் எதிர்கால சந்ததிகளுக்குதூய்மையான காற்றை சுவாசிக்க அனை வரும் பாடுபட வேண்டும் என்றார்.

    இதில் டாக்டர் மலர்விழி, அந்தியூர் அரசு மருத்துவமனை செவிலி யர்கள், பணியாளர்கள் அந்தியூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஈரோட்டில் சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் வேப்பம்பாளையம் பிரிவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). விவசாயி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிக்குமார்(37) என்ற மகனும் உள்ளனர். இதில் பிரியதர்ஷினி திருமணமாகி கணவருடன் வசித்துவருகிறார். ரவிக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    ரவிக்குமார் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    ரவிக்குமார் தந்தையிடம் சொத்தை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கு பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் தந்தை மீது ஏற்கனவே ரவிக்குமார் கோபத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ரவிக்குமார் தனது தந்தை பழனிச்சாமியிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் பழனிச்சாமியை பலமாக தாக்கியுள்ளார். பழனிச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரவிக்குமார் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று தனது தாயை மிரட்டி அங்கிருந்து சென்று விட்டார்.

    ருக்குமணி தனது கணவரை அருகில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார். நள்ளிரவு 2 மணி அளவில் ருக்குமணி கணவரை எழுப்பி உள்ளார். ஆனால் பழனிச்சாமி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். இதையடுத்து அவரை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ருக்குமணி இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தகவல் அறிந்ததும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கொலை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர்கள் விஜயா, சோமசுந்தரம் ஆகியோரும் உடனிருந்தனர்.மோப்பநாய் ஜெரி வரவழைக்கப்பட்டது.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த செய்தி அக்கம்பக்கத்தில் பரவியதும் பழனிச்சாமி வீட்டு முன்பு ஏராளமானோர் திரண்டு விட்டனர். பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழனிச்சாமியின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவிக்குமாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், மூலக்கடை வட்டகாடு, காந்தி நகர், கள்ளிமடைகுட்டை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. தொடர்ந்து 100 டிகிரி வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் கோடைமழை கொட்டியது.

    இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் சாலைகளில் மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் இடி மின்னல் தாக்கி தென்னை மரங்கள் தீப்பிடித்தன. சூறாவளி காற்றால் பல ஆயிரம் வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பெருந்துறையில் 125 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    அம்மாபேட்டை பகுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இரவு 8.30 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சித்தார் பகுதியில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஆலங்கட்டி மழை பெய்தது.

    இதனால் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர், பொங்க வாலிகரடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன் என்பவரது தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தை மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் தீபிடித்து எரிந்தது.

    காற்றின் வேகத்தில் தீப்பொறி அவரது குடிசை வீட்டிலும் பட்டது. இதில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    மளமளவென பரவிய தீ வீட்டு முன்பு தென்னங்கீற்றால் வேயப்பட்டு இருந்த கொட்டகையிலும் பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

    இதேபோல் சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சித்தார் பாலத்தின் அருகே உள்ள ரோட்டோரத்தில் இருந்த புளியமரம் சாய்ந்து விழுந்தது.

    இதனால் மேட்டூர்பவானி ரோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பூதப்பாடி சந்தைப் பகுதியில் தென்னை மரம் சாய்ந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதன் காரணமாக பூதப்பாடி, சிங்கம்பேட்டை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதேப்போல் அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதியில் வரதராஜன் என்கிற விவசாயி தோட்டத்தில் பூவன் ரக வாழைகள் பயிரிடப்பட்டு இருந்தது.

    தற்போது அவை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று சூறாவளி காற்றால் 500 வாழைகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ .2 லட்சம் ஆகும். அதேபோல் பெரிய குரும்பபாளையம் பகுதியில் வாசுதேவன் என்கிற விவசாயி தனது 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அங்கு பயிரிடப்பட்டிருந்த செவ்வாழைகள் அறுவடைக்கு தயாராக இருந்தது. சூறாவளி காற்றால் 1,500 செவ்வாழைகள் முற்றிலும் சாய்ந்து விழுந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

    இதேப்போல் சின்ன குரும்பபாளையம், கேசரிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கோபி அடுத்த கடுகாம்பாளையம், நாதிபாளையம், பொலவகாளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பயிரிடப்பட்டு ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் சூறாவளி காற்றுக்கு சேதம் அடைந்தது.

    சாய்ந்த வாழைகள் குறித்து வேளாண்மை துறைஅதிகாரிகள் கணக்கீடு செய்து காப்பீடு செய்யாத பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    நேற்று ஒரேநாளில் சூறாவளி காற்றில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டு இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது.

    அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், சின்னத்தம்பிபாளையம், மூலக்கடை வட்டகாடு, காந்தி நகர், கள்ளிமடைகுட்டை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    தவிட்டுப்பாளையம் பகுதியில் மரம் சாய்ந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதேபோல் கிராமப்புறப் பகுதிகளிலும் மின்சாரம் தடைபட்டது. அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் மூங்கில் பாளையத்தில் குமாரசாமி கவுண்டர் என்பவரது தோட்டத்தில் இடி விழுந்து 10 தென்னை மரங்கள் தீபிடித்து எரிந்தது.

    சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அந்தியூர் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் காற்றில் பறந்தது. அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சூறாவளி காற்றில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இதனால் அந்தியூர்பர்கூர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழையின் காரணமாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    இதேபோல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு தான் அதிகபட்சமாக மழை அளவு பதிவாகியுள்ளது.

    கவுந்தபாடி, வரட்டுப்பள்ளம், சத்தியமங்கலம், கொடிவேரி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. ஈரோடு மாநகர பகுதியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த கோடை மழையால் பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பெருந்துறை125, கவுந்தப்பாடி52.4, பவானி 31, சென்னிமலை22, எலந்தகுட்டைமேடு 20.4, கோபி12.4, வரட்டுப்பள்ளம் 7, ஈரோடு 5, பவானிசாகர்4.2, கொடிவேரி3.2, நம்பியூர் 3, அம்மாபேட்டை1.2.
    தாளவாடியில் வனகுட்டையில் தண்ணீர் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் குட்டியுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கிறது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி,தலமலை, ஜூர்கள்ளி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய், கரடி, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மலைப்பகுதியில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் குளம், குட்டைகள் தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றன.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மகாராஜன்புரம் அருகே வனக்குட்டை அமைந்துள்ளது. இந்த வனகுட்டையில் தண்ணீர் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் குட்டியுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. சில நேரங்களில் யானைகள் குட்டையில் குளித்து கும்மாளமிட்டு வருகிறது.

    எனவே வனப்பகுதிக்குள் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

    ×