என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    கோபி,ஆக.26-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுச்சூழல் அணி யின் மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தலைமை தாங்கினார் .வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. கே.செல்வன் முன்னிலை வகித்தார்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ- மாணவி களுக்கு மரக்கன்று களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில்வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், தி.மு.க. சுற்று ச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், பழ செல்வக்குமார், நாராயணமூர்த்தி,, உசிலம்பட்டி அருண், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவகுமார், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் , திமுக. சுற்றுச்சூழல் அணி யின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பவானி நகர் அந்தியூர் பிரிவு ரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பட்டு ஜமக்காளம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பின்னர் அவர் பொது மக்களிடம் வாகனத்தில் அமர்ந்தபடி மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பவானி, ஆக. 26-

    ஈரோடு மாவட்டத்திற்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அரசின் முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கோபிசெட்டி பாளையம் வருகை தந்தார்.

    கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் வாகனத்தில் அத்தாணி, ஆப்பக்கூடல், ஜம்பை வழியாக பவானி நகருக்கு வருகை தந்தார்.

    பவானி நகர் அந்தியூர் பிரிவு ரோட்டில் நகரச் செயலாளர் நாகராசன் தலைமையிலும், பவானி நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ முன்னிலையில் பட்டு ஜமக்காளம் வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் பொது மக்களிடம் வாகனத்தில் அமர்ந்தபடி மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

    அந்தியூர்:

    தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை யொட்டி அவர் பூரண நலம் பெற வேண்டி அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஈ.சுதாகர் தலைமையில் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக தட்டை பெற்றுக் கொண்டார்.

    முன்னதாக நகரப் பொரு ளாளர் விஜயகுமார் அனை வரையும் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு என்பது தமிழர்களாகி நமது உயிரோடு கலந்துஇருக்க கூடிய ஊர்.
    • யானைப் போர்களை நினைவூட்டும் கோட்டை கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி இந்த பகுதி.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை சரளைப்பகுதியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.167.50 கோடி மதிப்பில் 63 ஆயிரத்து 858 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 திட்ட பணிகளையும், ரூ.183.70 கோடி மதிப்பில் 1,761 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    3 நாள் பயணமாகமேற்கு மண்டலத்துக்கு வந்து இருக்க கூடிய நான் இன்று ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ளேன். ஈரோடு என்பது தமிழர்களாகி நமது உயிரோடு கலந்து இருக்க கூடிய ஊர். எனவே நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.

    நேற்று நான் கள்ளிப்பட்டியில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்தேன். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தற்போது இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். பெருந்துறை என்பது பல்வேறு வரலாற்று பெருமைகளை கொண்ட ஊர். பெருந்துறை அருகே திங்களூரில் பாண்டியர் ஆட்சிக்காலத்தில் தமிழ்சங்கம் இருந்ததாக ஒரு செப்பேடு சொல்கிறது.

    சேரனை சோழன் வென்ற இடம் இந்த பெருந்துறை. சிறை வைக்கப்பட்ட சேரனை மீட்க புலவர் பாடியது தான் களவழி நாற்பது என்ற நற்றமிழ் நூல். யானைப் போர்களை நினைவூட்டும் கோட்டை கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி இந்த பகுதி.

    இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பகுதியில் இந்த அரசு விழா மிக பிரமாண்டமாக நமது அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

    முத்துசாமி அவர்கள் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அமைச்சரவையில் பணியாற்றியவர். நமது அருமை சகோதரர் முத்துசாமியை போல அமைதியாக பணியாற்ற யாராலும் முடியாது. சிலர் செய்யும் பணி அதிக பரபரப்பாக இருக்கும், ஆர்ப்பாட்டமாக இருக்கும். என்னை போல பணியாற்ற முடியுமா என்று கேட்பதை போல இருக்கும். ஆனால் சிலர் செய்யும் பணி அமைதியாக அடக்கமாக ஆர்பாட்டமில்லாமல் இருக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமானவராக முத்துசாமி விளங்கிக் கொண்டு இருக்கிறார்.

    இன்றைய இளைய தலைமுறையினர் அவரிடமிருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது இதே ஈரோட்டில் இதே இடத்தில் நடந்த மண்டல மாநாடு. அந்த மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி காட்டியவர் முத்துசாமி அவர்கள். அவருடைய சீரிய முயற்சியால் இந்த அரசு விழாவும் அந்த மாநாட்டை தான் தற்போது எனக்கு நினைவு படுத்தி கொண்டு இருக்கிறது. அவ்வளவு பெரிய எழுச்சி. இதற்கு காரணமாக விளங்கக்கூடிய நமது அமைச்சர் முத்துசாமி அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும், அவருக்கு துணை நின்று பணியாற்றி இருக்கக்கூடிய அனைத்து அதிகாரிகள், அரசு அலுவலர்கள் அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்டப்பணிகள் ஈரோடு மாவட்டத்துக்கு செய்யப்பட்டு உள்ளது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் 761 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 20 ஆண்டு கோரிக்கையான ஈரோடு சிக்கைய நாயக்க கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 2 பேருந்து நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கி இருக்கிறது. அந்தியூர், பர்கூர் ஊராட்சி மலை பகுதி கிராமங்களில் சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை, வெள்ளிதிருப்பூர் ஊராட்சியில் இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் மீண்டும் உருவாக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. பெருந்துறை பகுதிக்கு 762 கோடி மதிப்பில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் கிடந்தது. அதனையும் நாம் செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தான் இந்த பிரமாண்டமான இந்த அரசு விழா இப்போது நடைபெற்று வருகிறது.

    1561 புதிய திட்டப்பணிகளுக்கு இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இதனுடைய மொத்த மதிப்பு 184 கோடி ரூபாய். 135 முடிவுற்ற பணிகளை நான் இந்த விழாவில் தொடங்கி வைத்து இருக்கிறேன். இதன் மொத்த மதிப்பு 262 கோடி ரூபாய். 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 167 கோடியே 50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இந்த விழாவில் வழங்கப்பட இருக்கிறது.

    மூன்றும் இணைந்த முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சியில் உள்ள மடம், செல்வாறை, கெஜலப்பட்டி, கெம்பத்தாம்பாளையம் மற்றும் தேவர் மலை பகுதியில் வாழக்கூடிய மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு நபார்டு கனிமம் மற்றும் சுரங்கங்கள் திட்டத்திற்கு தொலை தூர கல்வி திட்டம் மற்றும் தொலைதூர சேவையினை இணைய தளம் வழியாக வழங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை, திருச்சி, தஞ்சை உள்பட 5 டெல்டா மாவட்டங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வேளாண் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வேளாண் உற்பத்தி பொருட்களை பாதுகாக்க தாளவாடி, நல்லாம்பட்டியில் 2 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். 10 கோடி மதிப்பில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். தாளவாடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எக்ஸ்ரே கருவி வழங்கப்படும்.

    தமிழக அரசு அனைத்து வளர்ச்சி பணிகளையும் துரிதமாக செயல்படுத்தி வருகிறது.

    அத்திகடவு அவினாசி திட்டம் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறும். அதை நானே இங்கு நேரில் வந்து தொடங்கி வைப்பேன். அரசு விழா என்பது பொழுது போக்கிற்காக நடைபெறும் விழா அல்ல. அதை போன்று எங்களது பெருமையை கூறும் விழா அல்ல. மக்களுக்காக நாங்கள் என்ன செய்தோம். மக்களுக்காக நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை கூறும் விழா. என்னை பற்றி புகழ் பாடும் விழா அல்ல. எனக்கு இருக்கிற புகழே போதும்.

    நீ உன் அப்பா போன்று இருக்கிறாய் என்று அண்ணா கூறியதைவிட எனக்கு பெரிய புகழ் தேவையில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    நான் இந்த பயணத்தை மேற்கொள்ளும் முன்பு எனக்கு 2 வெற்றி செய்திகள் கிடைத்தன. தமிழகத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நெல் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இது மக்களை காக்கும் அரசாக மட்டும் இல்லாமல் மண்ணை காக்கும் அரசாக உள்ளது. கடந்த ஆண்டு 1.04 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 1.22 கோடி மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது 18 லட்சம் டன் அதிகமாகும்.

    நெல் உற்பத்தியில் பாசன பரப்பு அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் முதல் முதலில் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது நமது அரசு தான். டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஏதுவாக முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நெல் சாகுபடி அதிகரிப்பு தமிழ்நாட்டில் வளத்தை காட்டுகிறது.

    இன்னொரு முக்கிய வெற்றி செய்தி என்னவென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவந்தது. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இந்த அரசு சமூக நீதியை பாதுகாக்கும் அரசாக உள்ளது.

    திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கு வழிகாட்டும் அரசாக செயல்பட்டு வருகிறது.

    மாநில சுயாட்சி அதிகாரம் திராவிட மாடல் ஆட்சியாக உள்ளது. நமது ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் வளர்ச்சி அடைந்து உள்ளனர். நான் உங்களில் ஒருவனா உழைத்துக் கொண்டு இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். உங்கள் அன்போடும் ஆதரவோடும் இலக்கை நோக்கி செல்வேன். உங்கள் ஆதரவுடன் நான் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் இருந்து சேனடோரியம், சீனாபுரம் வழியாக கிரே நகர் பகுதிக்கு சென்றார்.
    • அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு சென்றார். அவருக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபி செட்டிபாளையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

    பின்னர் கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதைத் தொடர்ந்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு ஈரோட்டில் உள்ள காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    முன்னதாக ஈரோட்டுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்திகடவு-அவினாசி திட்ட பணிகளை பார்வையிடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் இன்று காலை பெருந்துறை பகுதிக்கு புறப்பட்டார். முதல்-அமைச்சரை வரவேற்று வழி நெடுகிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. சாலையின் இருபுறமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

    அவர்களை பார்த்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாக கை அசைத்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் இருந்து சேனடோரியம், சீனாபுரம் வழியாக கிரே நகர் பகுதிக்கு சென்றார். அங்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தார். விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை, சேனடோரியம் பை-பாஸ் ரோடு வழியாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை சரளையில் நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா மேடைக்கு சென்றார்.

    முதல்-அமைச்சரை பார்த்ததும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகம் மிகுதியால் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அதனால் அந்த இடமே அதிர்ந்தது.

    அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.167.50 கோடி மதிப்பில் 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார் பகுதியில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி, அந்தியூர் அருகே உள்ள தேவர் மலையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 கூடுதல் வகுப்பறை, பெருந்துறை அருகே உள்ள கைக்கோளப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 உயர்நிலைப்பள்ளி கட்டும் பணி.

    சென்னிமலை ஆரம்ப சுகாதார வளாகத்தில் சித்தா கட்டிடம் கட்டும் பணி, சத்தியமங்கலம் தாலுகாவில் அரசு அண்ணா மருத்துவமனை, கொமாரபாளையத்தில் சித்தா கட்டிடம் கட்டும் பணி, எழு மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இந்திய சித்த மருத்துவ சேவை, யோகா மருத்துவத்துக்கான கூடுதல் கட்டிடம் கட்டும் பணி உள்பட ரூ.183.70 கோடி மதிப்பில் 1,761 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதேபோல் ஈரோட்டில் கட்டப்பட்டு உள்ள அப்துல்கனி ஜவுளி வணிக வளாகம், ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் கட்டப்பட்டு உள்ள புதிய வணிக வளாகம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிகவியல் பூங்கா.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர் வினியோக முறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழா சிறப்புரையாற்றினார்.

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோட்டில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் கோவை செல்கிறார். பின்னர் மாலையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் இரவு 8.35 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

    • கருணாநிதி சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.

    மேலும், சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளையும் வழங்கி உரையாற்றினார்.

    அப்போது, கருணாநிதியின் மகனாக அல்லாமல் திமுகவின் நேர்மையான தொண்டனாக சிலையை திறந்து வைப்பதாகவும், 4 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் நான் திறந்து வைத்த மூன்றாவது வெண்கலச் சிலை இது என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதியளித்தார்.

    • பர்கூர் மலைப்பகுதியில் மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பிரிவுகளாக உள்ளது.
    • இங்கு விளையக்கூடிய பொருட்களை வாங்க அந்தியூர் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பர்கூர் ஊராட்சிக்கு 33 குக்கிராமங்கள் உள்ளது. மேலும் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு இருந்து வருவதால் அப்பகுதி பசுமையாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி அளிக்கின்றது.

    மேலும் பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்கரை பகுதி மிகவும் உயரமான பகுதியாக இருப்பதனால் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு இணையாக இந்த பகுதியில் சில்லென ரம்மியமான காற்று அடிப்பதால் எப்பொழுதும் ஊட்டியில் இருக்கின்ற சீதோஷ்ண நிலை காணப்படும்.

    இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் தங்கும் விடுதிகள் கட்டப்ப ட்டு உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தியூர், ஆப்பக்கூடல், பவானி, கோபி உள்ளிட்ட பகுதியிலி ருந்து அதிகளவில் பர்கூர் மலை பகுதிக்கு வந்து தங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது.

    இந்த பகுதிகளில் இயற்கையான காற்றும், மூலிகை கலந்த இயற்கை சூழ்நிலையை சுவாசிக்க முடிகிறது என்பதால் இங்கு வந்து தங்குவதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    நகர்ப்புறங்களில் வாகனங்களின் புகை மற்றும் ஹாரன் சத்தம் உள்ளிட்டவைகளால் உடலுக்கும் அதிகளவில் மன அழுத்தத்தை கொடுப்ப தனால் இங்கு வந்து வாரத்தில் 2 நாட்கள் தங்கினால் நல்ல நிலையில் மன அமைதி கிடைப்ப தாகவும் தெரிவித்தனர்.

    பர்கூர் மலைப்பகுதியில் விளையக்கூடிய தானிய வகைகளான ராகி கம்பு, பச்சைபயிறு, தட்டை ப்பயிறு, பலாப்பழங்கள் மிகவும் சுவையாகவும் இயற்கை உரங்களை பயன் படுத்தி விளைவதனால் இந்த பொருட்கள் மிகவும் சுவையாக கிடைக்கிறது.

    இங்கு விளையக்கூடிய பொருட்களை வாங்க அந்தியூர் சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    பர்கூர் மலைப்பகுதியில் மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பிரிவுகளாக உள்ளது. மேற்கு மலை பகுதியில் மணியாச்சிபள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் மழைக்காலங்களில் பெய்யக்கூடிய நீர்பாலாற்றில் கலந்து மேட்டூர் அணையை சென்று அடைகின்றது.

    இந்த பகுதி எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும். யானை, மான், உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த பகுதியில் தண்ணீர் குடிப்பதற்கும், மூங்கில் தூர்களை உடைத்து சாப்பிட யானை கூட்டங்கள் அதிக அளவில் இந்த பகுதியில் முகாமிட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேற்கு மலைப்பகுதியில் தாமரைக்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் தம்பிரெட்டி பகுதியில் மிகவும் பிரசித்து பெற்ற மஞ்சு மாதேஸ்வரன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தண்ணீருக்கு நடுவில் பாறையில் சாமி சிலைகள் அமைந்துள்ளது. தற்போது பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்து வருதால் குட்டைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் தண்ணீரில் நீந்தி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • செல்போன் வெளிச்சத்தில் கோழி கூண்டுக்குள் பார்த்தபோது அங்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் 2 பாம்புகளையும் பிடித்தார். அது மஞ்சள் சாரை, கருப்பு சாரை என தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நஞ்சை ஊத்துக்குளி அடுத்த கோவிந்த நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வீட்டின் பின்புறம் கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இதற்காக பெரிய அளவில் கூண்டு கட்டப்பட்டிருந்தது. தினமும் இரவில் கூண்டிற்கு சென்று கோவிந்தராஜ் கோழி முட்டைகளை எடுப்பது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு கோவிந்தராஜ் வழக்கம் போல் கோழி கூண்டிற்கு சென்று முட்டையை எடுக்க சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

    கோழி கூண்டு கதவை திறந்த போது கோழி இறக்கையை அடித்துக்கொண்டு அலறியது. பின்னர் சிறிது நேரத்தில் ரத்தம் வந்து இறந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் செல்போன் வெளிச்சத்தில் கோழி கூண்டுக்குள் பார்த்தபோது அங்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோழி கூண்டுக்குள் புகுந்த பாம்பு முட்டையை உடைத்து, கோழியையும் கடித்து கொன்று உள்ளது.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கோவிந்தராஜ் வீட்டுக்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றார்.

    அது 6 அடி நீளம் உள்ள கோதுமை நாகம் என தெரிய வந்தது. பின்னர் பாம்பை அவர் லாபகரமாக பிடித்து அதை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    இதேப்போல் ஈரோடு கொல்லம்பாளையம் அருகே இரும்பு கடை வியாபாரி ஒருவர் வீட்டில் தேங்காய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன் இடையே 2 பாம்புகள் இருப்பதை கண்ட அவர் இது குறித்து யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் 2 பாம்புகளையும் பிடித்தார். அது மஞ்சள் சாரை, கருப்பு சாரை என தெரிய வந்தது.

    இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறியதாவது: தற்போது ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பாம்புகள் தங்கி இருக்கும் பொந்துகளில் மழை நீர் புகுந்து விடுகிறது.

    இதன் காரணமாக பாம்புகள் அங்கிருந்து வெளியேறி வீடுகளை நோக்கி படை யெடுக்க தொடங்கியுள்ளது.

    மேலும் வாய்க்கால் கரை பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் பாம்புகள் அங்கிருந்து வெளியேறி வீடுகளை நோக்கி வர தொடங்கி யுள்ளது. பொதுமக்கள் மழைக்காலம் என்பதால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

    வீட்டில் பழைய பொருட்களை ஒரே இடத்தில் அடுக்கி வைக்கக் கூடாது. செருப்பு ஸ்டாண்ட், மீட்டர் பாக்ஸ் போன்ற பகுதிகளை கவனமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக மோட்டார் சைக்கிளை இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்குள் பாம்பு செல்ல வாய்ப்புள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பாம்புகள் வீட்டுக்கு வந்துள்ளன. பெரும்பாலும் கொம்பேறி மூக்கன், தண்ணீர் சாரை, கட்டு விரியன், கண்ணாடி விரியன், கோதுமை நாகப் பாம்புகள் அதிக அளவில் வருகின்றன.

    மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்த போது பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.
    • இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள் (60).

    சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்ததால் வீட்டின் வெளியே கிடந்த பழைய பொருட்களை மழையில் நனையாமல் இருப்பதற்காக கண்ணம்மாள் வீட்டுக்குள் எடுத்து வைத்தார்.

    அப்போது அதன் இடையில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் கண்ணம்மாள் மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார்.
    • கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அரசு பஸ் டிப்போவை சேர்ந்த 43 எண் வழித்தட டவுண் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணியளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் போது ஊஞ்சலூர் அருகில் மணிமுத்தூர் பஸ் நிறுத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி செல்வதற்கு பஸ்சை நிறுத்தி உள்ளனர்.

    பஸ்ஸை ஓட்டி வந்த ஊஞ்சலூரை சேர்ந்த சங்கர் என்ற டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்று விட்டார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் ஊஞ்சலூர் வரை நடந்தே சென்று பஸ் திரும்பி வரும் வரை காத்து இருந்தனர்.

    கொடுமுடி சென்ற பஸ் மீண்டும் திரும்ப வந்தபோது பஸ்சை வழிமறித்து டிரைவர் சங்கரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்ததால் பஸ்சை பெண்கள் விட்டு விட்டனர்.

    இது போன்ற ஊழியர்கள் மீது உடனடியாக நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து கொடுமுடி கிளை மேலாளர் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 45 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 311 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.
    • தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

    சிவகிரி, ஆக. 25-

    சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 48).

    இவர் தனது மாருதி வேனில் மாலை 4 மணிக்கு சிவகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தன் மகன் ஹரிஹரன் (வயது 16). என்பவரை அழைத்து வர பள்ளி நுழைவு வாயில் முன் தனது மாருதி வேனை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.

    பின்னர் பள்ளி முடிந்து வந்த தன் மகனை அழைத்து கொண்டு மீண்டும் மாருதி வேனில் ஏறி வேனை இயக்க முயன்றார். அப்போது திடீரென வேனில் இருந்து கரும்பு புகை ஏற்பட்டு தீ பற்றியது.

    உடனே சுதாரித்து கொண்ட மெய்யப்பன் தன் மகனை வேகமாக கீழே இறக்கி விட்டார். மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளியில் இருந்து வெளிவராமல் இருக்க ஓடி சென்று தடுத்து நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த சமூக ஆர்வலர் பாப்புலர்பழனிச்சாமி என்பவரின் தண்ணீர் வாகனத்தில் இருந்த தண்ணீரை கொண்டு மாருதி வேனில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×