என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கருங்கல்பாளையம் சங்கு நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தி வருபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    அதன்படி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீ ர்செல்வம் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கருங்கல்பாளையம் சங்கு நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வட மாநிலத்தவர்களுக்கு அதிக விலையில் அரிசியை விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள், 1550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு 152 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தமாக 6,859 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 894-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 152 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 22 காசுக்கும், சராசரி விலையாக 78 ரூபாய் 21 காசுக்கும்,

    இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 58 ரூபாய் 89 காசுக்கும், அதிகபட்ச விலையாக 76 ரூபாய் 77 காசுக்கும், சராசரி விலையாக 73 ரூபாய் 27 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 6,859 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 894-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருகிறது.
    • அணையில் இருந்து மொத்தம் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பில்லுர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வந்த உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் 102 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்புகருதி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம்102 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 5400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில்இருந்து வாய்க்காலில் 1800 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை800 கனஅடியும், பவானி ஆற்றில் 2100 கனஅடியும் என மொத்தம் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.
    • கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சேசன் நகர் பகுதியைச் சேர்ந்த நாகமணி (40 ) என்பவர் பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்தனர்.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குநர் தேவேந்திர குமார்மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் பசு மாடு இறந்த 3 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கினார்.

    பின்னர் கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் கர்நாடக வனத்துறையுடன் இணைந்து புலி விவசாய தோட்டித்தில் புகாதவாறு கண்காணித்து புலியை அடந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கால்நடைகளை புலி நடமாட்டம் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுருத்தினர்.

    • ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
    • இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது.

    அம்மாப்பேட்டை:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.

    இதனால் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

    இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா மாநில ங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை க்கு சுமார் 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு மேல் உள்ளதால் அணைக்கு வரும் தணணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.

    இதனால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி துறை மற்றும் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக திறந்து விடப்படும் உபரி நீர் செக்கானூர் கதவணை, நெரிஞ்சிப்பேட்டை கதவணை, கோனே–ரிப்பட்டி உள்ளிட்ட கதவணைகளில் அப்படியே வெளி யேற்றுவார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு நெரிஞ்சிப்பேட்டை தேர்வீதி,பெருமாள் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் திடீரென வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி காவிரி ஆற்றை பார்த்தனர்.

    அப்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது நெரிஞ்சிப்பேட்டை கதவணை திறப்பது வழக்கம். ஆனால் கதவணையில் தண்ணீர் திறக்கப்படாதது தெரியவந்தது.

    இது குறித்து உடனடியாக அந்த பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தாசில்தார் கதவணை மின்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பின் கதவுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஊருக்குள் புகந்த தண்ணீர் வடிய தொடங்கியது . இதனால் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறும் போது, மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கூட தண்ணீர் அதே மட்டத்தில் தான் செல்லும். ஆனால் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் பொழுது வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.

    உடனடியாக நெரிஞ்சி ப்பேட்டை கதவணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்படாதால் தான் தண்ணீர் ஊருக்குள் போகிறது என்று அறிந்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கூறினோம்.

    உடனடியாக அதிகாரிகள் கதவுகளை திறந்ததால் ஊருக்குள் போகும் தண்ணீர் வடிய தொடங்கியது. காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதையொட்டி காரையோர பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஈரோடு அக்ரகாரம் பேரேஜ், கருங்கல் பாளையம், வெண்டி–பாளையம், கொடிமுடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
    • யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, மான், கரடி, யானை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வன வில ங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் வரதப்பன் (47). இவர் தனது 5 ஏக்கர் தோட்டத்தில் நேந்திரம்வாழை சாகுபடி செய்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 10 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்த வாழையை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதைப்பார்த்த விவசாயி வரதப்பன் பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டு யானைகளை துரத்தினர்.

    ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் வாழையை தொடர்ந்து சேதபடுத்தியது. அதிகாலை 6 மணியளவில் யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றது. யானைகளால் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரம் சேதமடைந்தது.

    இதனையடுத்து சேதம டைந்த விவசாய ப்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமா கவும் அகழி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மழை காரணமாக ஈரோடு ரெயில்வே நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.
    • மழை காரணமாக ஈரோடு பவானி ரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தரைப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    இந்நிலையில் நேற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.

    இந்த மழை காரணமாக ஈரோடு ரெயில்வே நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஈரோட்டில் இருந்து வெளியூர் செல்ல வந்த பயணிகளும், வெளியூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்த பயணிகளும் கடும் அவதி அடைந்தனர்.

    பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. பல்வேறு இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. இதனால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த மழை காரணமாக சூளை பாரதி நகரில் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இரவில் சென்று விட்டனர். இன்று காலை தண்ணீர் வடிந்ததும் மீண்டும் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

    மழை காரணமாக ஈரோடு பவானி ரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் தரைப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இந்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் சேறும் சகதியுகமாக காட்சியளித்தது.

    வழக்கம்போல் வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் ஈரோட்டில் 2 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநகரப் பகுதி மழை நீரால் தத்தளித்தது.

    இதேப்போல் பவானி, பவானிசாகர், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், குண்டேரி பள்ளம், பெருந்துறை, நம்பியூர், சென்னிமலை, கொடிவேரி பகுதிகளிலும் கனமழை பெய்தது. மேலும் மழையால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடை இன்று காலை வரை சரியாகவில்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானி-64, பவானிசாகர்-34.20, மொடக்குறிச்சி-31, கவுந்தப்பாடி-26.4, வரட்டுபள்ளம்-20.4, குண்டேரி பள்ளம்-14, பெருந்துறை-13, தாளவாடி-11.20, அம்மாபேட்டை-11, கொடுமுடி-8, நம்பியூர், சென்னிமலை, கொடிவேரி-7.

    மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 396 மி.மீ மழை கொட்டியது.

    • பஸ்சில் தினமும் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வந்தனர்.
    • கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து உள்ளார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் கோபி செட்டிபாளையத்தில் இருந்து நம்பியூர் செல்லும் 2ம் நெம்பர் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த பஸ்சில் தினமும் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வந்தனர். அப்போது மாணவிகளிடம் கண்டக்டர் சரவணன் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தார்.

    இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் ஏற்கனவே தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பிலும் கண்டக்டர் சரவணனை கண்டித்துள்ளனர்.

    ஆனாலும் கண்டக்டர் சரவணன் இதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் மாணவிகளிடம் பெற்றோரும் கண்டக்டர் சரவணனை எச்சரித்து உள்ளனர்.

    இதை காதில் வாங்காமல் தொடர்ந்து கண்டக்டர் சரவணன் மாணவிகளின் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையும் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து நம்பியூர் நோக்கி 2-ம் நெம்பர் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் டிரைவராக கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரும், கண்டக்டராக சரவணனும் பணியில் இருந்தனர்.

    அப்போது குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அந்த பஸ்சில் ஏறி தங்களது வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போதும் பணியில் இருந்த கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து உள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புதுசூரிபாளையம் என்ற பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது பஸ் வந்ததும் அவர்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

    மேலும் அவர்கள் கண்டக்டர் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் நடத்த விபரங்களை கேட்டனர். பின்னர் கண்டக்டர் சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    போலீசாரின் விசாரணையில் கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    பின்னர் கோபி செட்டிபாளையம் 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோபி செட்டிபாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    அரசு பஸ் கண்டக்டர் சரவணன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே துறை ரீதியான நடவடிக்கையாக அவரை சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • ஈஸ்வரன் கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் ஈஸ்வரனை கடத்திய கும்பல் குறித்து அடையாளம் தெரியவந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல்- 2021-ம் ஆண்டு வரை பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஈஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் பவானிசாகர் அருகே உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கிருந்து அவர் மீண்டும் வீடு திரும்புவதற்காக சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு பகுதியில் சென்றார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. ஈஸ்வரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளை திடீரென வழிமறித்தபடி அந்த கார் வந்து நின்றது.

    அந்த காரில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் வேகமாக இறங்கி ஈஸ்வரன் கண்ணில் ஒரு துணியால் கட்டி அவரை காரில் கடத்தி சென்றது. இதையடுத்து மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற அந்த கும்பல் ஈஸ்வரனை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி வேண்டும் என கேட்டு அவரை அந்த கும்பல் உருட்டு கட்டையால் தாக்கியது.

    இதையடுத்து அவர் தனது வீட்டில் ரூ.1½ கோடி பணம் உள்ளது அதைப்பெற்று தன்னை விடுக்குமாறு கேட்டுள்ளார். நேற்று அதிகாலை அந்த கும்பல் ஈஸ்வரனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளது. வீட்டில் இருந்த ரூ.1½ கோடியை ஈஸ்வரன் அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதையடுத்து ஈஸ்வரன் சார்பில் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஈஸ்வரன் கடத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஈஸ்வரனை கடத்திய கும்பல் குறித்து அடையாளம் தெரியவந்தது.

    அதன்படி 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த மிலிட்டரி சரவணன் என்பவர் இருந்துள்ளார். சரவணன் தான் ஈஸ்வரனை கடத்தியதில் மூளையாக செயல்பட்டுள்ளார்.

    சரவணன் திட்டப்படி சம்பவத்தன்று அவருடன் 5 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து ஈஸ்வரனை கடத்தி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது சரவணன் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகிவிட்டது. இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் சரவணன் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • தறிப்பட்டறையின் சிமெண்ட் ஓடு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆயிஷா தலை மீது விழுந்தது.
    • இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜூலைப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (35).இவரது மனைவி ரேஷ்மா. இவர்களுக்கு 4 வயதில் ஆயிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கணவன் மனைவி இருவரும் ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரிய வலசு அடுத்த சாணார்காடு பகுதியில் தங்கி அங்குள்ள தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் வேலைக்கு செல்லும் போது தங்களது 4 வயது பெண் குழந்தையையும் அழைத்து செல்வது வழக்கம்.

    நேற்று இரவும் அப்துல் ரகுமான், ரேஷ்மா இருவரும் தறிபட்டறை வேலைக்கு தங்களது குழந்தை ஆயிஷாவையும் உடன் அழைத்து சென்றனர். தறிப்பட்டறையில் ஒரு பகுதியில் குழந்தையை தூங்க வைத்துள்ளார்கள். நேற்று இரவு மழை பெய்து கொண்டிருந்தது.

    அப்போது தறிப்பட்டறை அருகில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து கல், தறிப்பட்டறையின் சிமெண்ட் ஓட்டில் மேல் விழுந்தது. அப்போது அந்த சிமெண்ட் ஓடு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஆயிஷா தலை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை உயிருக்கு போராடியது.

    உடனடியாக குழந்தையை அவரது பெற்றோர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது.
    • இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, விளாமுண்டி, ஆசனூர், தலைமலை கேர்மாளம், கடம்பூர், பங்களாபுதூர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் வெளியேறி வருகிறது.

    மேலும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும் கால்நடைகளை வேட்டையாடியும் வருகிறது.

    இதே போல் கடந்த மாதம் பவானிசாகர் அருகே புதுபீர் கடவு பீட் பகுதியில் மீண்டும் ஒரு சிறுத்தை வந்தது. மேலும் ஊருக்குள் புகுந்து அங்கு பட்டியில் உள்ள கால்நடைகளை வேட்டை யாடி வந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டு வைத்து பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட சிறுத்தையை மங்களபட்டி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

    இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது. தொடர்ந்து அந்த சிறுத்தை ஒரு வீட்டின் முன்பு தூங்கி கொண்டு இருந்த நாயை கவ்வி பிடித்து சென்று அருகே உள்ள மரக்கிளையில் அமர்ந்து கொன்று தின்றது.

    இதையடுத்து மீதியான இறைச்சியை மரக்கிளை யிலேயே விட்டு விட்டு சென்று விட்டது.

    இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது நாயை சிறுத்தை அடித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நட மாட்டம் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, புது பீர் கடவு பீட் பகுதியில் சிறுத்தை நட மாட்டம் உள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதி யில் ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதை வனத்துறையினர் பிடித்த னர். இதனால் நிம்மதியாக இருந்தோம்.

    ஆனால் மீண்டும் இந்த பகுதியில் சிறுத்தை சுற்றி திரிந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைைய கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார்.
    • படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    ஈரோடு, ஆக. 26-

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை சின்ன பிடாரியூரைச் சேர்ந்தவர் கதிரேசன் (38). இவரது மனைவி ரமாதேவி (34). இவர்களுக்கு 11 மற்றும் 9 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கதிரேசன் சென்னிமலை பெரியார் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். ரமாதேவி அவருக்கு உதவியாக ஜவுளி கடையை கவனித்து வந்தார். கதிரேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் வீட்டுக்கு சென்ற கதிரேசன் மாலை 5 மணி ஆகியும் ஜவுளி கடைக்கு வரவில்லை.

    இதையடுத்து ரமாதேவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதிரேசன் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது ரமாதேவி இனிமேல் குடித்துவிட்டு ஜவுளி கடைக்கு வரவேண்டாம் என கூறியதாகத் தெரிகிறது.

    அதைக்கேட்ட கதிரேசன் உடனடியாக படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

    உடனடியாக ரமாதேவி கதிரேசனின் சகோதரர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து படுக்கையறை ஜன்னலை உடைத்து பார்த்தபோது படுக்கையறையில் உள்ள தொட்டில் மாட்டும் கொக்கியில் கதிரேசன் வயரால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று கதிரேசனை மீட்டுப் பார்த்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரமாதேவி அளித்த புகாரின்பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×