search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "near Bhavanisagar"

    • மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முடுக்கன் துறை சந்தை பகுதியில் சேர்ந்தவர் கோதண்ட மூர்த்தி (வயது 48). இவரது மனைவி வனிதா (40). இவ ர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.

    இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ள னர். கோதண்ட மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சக்தியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்திய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோத ண்டமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி வனிதா பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது.
    • இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, விளாமுண்டி, ஆசனூர், தலைமலை கேர்மாளம், கடம்பூர், பங்களாபுதூர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் வெளியேறி வருகிறது.

    மேலும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும் கால்நடைகளை வேட்டையாடியும் வருகிறது.

    இதே போல் கடந்த மாதம் பவானிசாகர் அருகே புதுபீர் கடவு பீட் பகுதியில் மீண்டும் ஒரு சிறுத்தை வந்தது. மேலும் ஊருக்குள் புகுந்து அங்கு பட்டியில் உள்ள கால்நடைகளை வேட்டை யாடி வந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டு வைத்து பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட சிறுத்தையை மங்களபட்டி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

    இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது. தொடர்ந்து அந்த சிறுத்தை ஒரு வீட்டின் முன்பு தூங்கி கொண்டு இருந்த நாயை கவ்வி பிடித்து சென்று அருகே உள்ள மரக்கிளையில் அமர்ந்து கொன்று தின்றது.

    இதையடுத்து மீதியான இறைச்சியை மரக்கிளை யிலேயே விட்டு விட்டு சென்று விட்டது.

    இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது நாயை சிறுத்தை அடித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நட மாட்டம் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, புது பீர் கடவு பீட் பகுதியில் சிறுத்தை நட மாட்டம் உள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதி யில் ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதை வனத்துறையினர் பிடித்த னர். இதனால் நிம்மதியாக இருந்தோம்.

    ஆனால் மீண்டும் இந்த பகுதியில் சிறுத்தை சுற்றி திரிந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைைய கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரி க்கை விடுத்துள்ளனர்.

    ×