search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to 5400 cubic feet"

    • நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருகிறது.
    • அணையில் இருந்து மொத்தம் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம்:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பில்லுர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வந்த உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் 102 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்புகருதி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம்102 அடியாக இருந்தது.

    அணைக்கு வினாடிக்கு 5400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில்இருந்து வாய்க்காலில் 1800 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 300 அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை800 கனஅடியும், பவானி ஆற்றில் 2100 கனஅடியும் என மொத்தம் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ×