என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது களம் இன்னும் வேகமாக இருக்கும்.
    • நாங்கள் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிழக்கு தொகுதி தேர்தல் பணி களத்தில் அ.தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு தேர்தல் களம் கண்டவர்கள். எனவே தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கு அயராது பணிகளை செய்து வருகிறோம்.

    எனவே எங்களது களப்பணி என்பது வரலாற்றில் இல்லாத வகையில் அமைய உள்ளது. அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை அழைத்துப் பேசி 2 முறை வழங்கியுள்ளார். மேலும் வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் இந்த தேர்தல் செங்கோட்டை வியக்கத்தக்க அளவிற்கு எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. இந்த குரல் டெல்லி செங்கோட்டைக்கு ஒலிக்க இருக்கிறது.

    அ.தி.மு.க. எத்தனை அணிகளாக பிரிந்து இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்திருப்பதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவர்கள் (தி.மு.க) மாடியில் இருந்து மக்களை பார்கிறார்கள், அ.தி.மு.க.வினர் மக்களோடு இருந்து மக்களை பார்கிறோம். வெற்றி என்பது எங்கள் லட்சியத்தின் இலக்காக உள்ளது.

    ஒவ்வொரு இயக்கத்தினரும் தங்களுக்கான கொள்கை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் ஆட்சி மன்ற குழு தலைநகரில் தான் நடைபெறும். பிரச்சாரத்திற்கு தடைகள் இல்லை. அ.தி.மு.க மெகா கூட்டணியுடன் இணைந்து பிரச்சார பணிகளை மேற்கொள்ள உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது களம் இன்னும் வேகமாக இருக்கும். ஆதரவு கேட்ட கட்சியின் நிலைப்பாடு குறித்து 2, 3 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். மக்களை பொறுத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்கள் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்டுப்பாட்டினை இழந்த ஜீப் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதி நின்றது.
    • இதில் ஜீப்பின் வலதுபுறம் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் முருகைய்யா.

    நேற்று இரவு ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு செல்வதற்காக போலீஸ் ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்.

    மேட்டூர் சாலை முனிசிபல்காலனி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது குறுக்கே மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் வந்ததால் அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ஜீப்பை திருப்பி உள்ளார்.

    அப்போது கட்டுப்பாட்டினை இழந்த ஜீப் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடர் மீது மோதி நின்றது. இதில் ஜீப்பின் வலதுபுறம் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து கிரேன் கொண்டு வரப்பட்டு ஜீப் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பவானிசாகர் அடுத்த பசுவபாளையம் அருகே வெள்ளை நிறப்பை உடன் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (60) என்பதும்,

    அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து அவரிடம் இருந்து 670 கிராம் புகையிலை பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ 2 ஆயிரம் இருக்கும்.

    மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது திருக்குமார் என்ற நபர் மூலம் பான் மசாலா, புகையிலை பொருட்கள் வாங்கியதாக கூறினார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் திருக்குமாரை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதேப்போல் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் சூரம்பட்டி போலீசாரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • எம்.ஜி.ஆர். தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் நாம் வெற்றி பெறுவோம்.
    • 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம்.

    ஈரோடு:

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா ஏன் உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த இடைத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    எம்.ஜி.ஆர். தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் நாம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி காட்டும். அ.தி.மு.க. கூட்டணியில் யார்? யார் ? இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார். 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம்.

    இந்த தேர்தலில் சரித்திர வெற்றி பெறுவோம். இதனை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களது வேகம், விவேகம் மக்களை சந்திக்கும் விதம் போக போக உங்களுக்கே தெரியும். இன்று முதல் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் மனநிலை குறித்தும் தெரிந்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உங்களுக்கு ஆதரவு அளிக்குமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். இதேப்போல் இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா என்ற கேள்விக்கும் கேள்விக்கும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    • வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
    • பண பரிவர்த்தனைக்கு பிரத்யேக கவுண்டர்களை திறப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பின்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் செலவினங்கள் குறித்த தொகுப்பில் வங்கி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகளான தேர்தல் நோக்கத்திற்காக வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகள் உடனடி சேவையை வழங்கவும்,

    பண பரிவர்த்தனைக்கு பிரத்யேக கவுண்டர்களை திறப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    வங்கிகளால் அவுட்சோ ர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள் ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்கு செல்லும் போது வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள்,

    ஆவணங்கள் எடுத்துச் செல்லவும், அவுட்சோர்சிங் பணியாள ர்கள் அந்தந்த ஏெஜன்சி களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும்,

    பணமதிப்பு விபரங்கள் அடங்கிய தொகுப்பினையும் எடுத்துச்செல்லவும் தேர்தல் நடைமுறை விதிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ள நேரத்தில் வழக்கத்திற்கு மாறான, சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக நடைபெற்றாலோ,

    பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பணப்பரி மாற்றம் நடைபெற்றாலோ, வேட்பாளர்கள் அல்லது அவர்களது மனைவி அல்லது அவரை சார்ந்த வர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கு அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல் போன்ற பண பரிவர்த்தனைகள் இருந்தாலோ,

    வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் படுவ தற்கான சந்தேகத் திற்கிட மான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டா லோ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க அனைத்து வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேலான பணப்பரி வர்த்தனை மேற்கொள்ள ப்படும் போது வருமான வரித்துறை தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்), தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார் (தாசில்தார், பேரிடர் மேலாண்மை), வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சத்தியமங்கலத்தில் உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • அப்போது அந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரசத்ததுடன் பவானி ஆற்றில் விழுந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பவானி ஆறு செல்கிறது. இந்த பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கருங்கற்கள், செங்கல் கொண்டு கட்டப்பட்ட பழமையான பாலம் உள்ளது.

    இது பழமையான பாலம் என்பதால் ஒரு சில இடங்களில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகே பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது.

    இந்த புதிய பாலம் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் பழைய பாலம் வழியாக ஒரு சில வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.

    இந்த நிலையில் பழைய பாலம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் தற்போது அந்த பகுதியில் வாகனம் அதிகளவில் சென்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து பழைமையான பாலத்தை இடித்து விட்டு ரூ.11 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணி கடந்த 1 வாரமாக தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பழைய பாலம் இடிக்கும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடந்து வந்தது.

    இந்த பாலத்தை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பணியாளர்கள் இடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரசத்ததுடன் பவானி ஆற்றில் விழுந்தது.

    இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு பாலம் இடிக்கும் பணி நடப்பதை பார்த்து நிம்மதி அடைந்தனர்.

    இதை தொடர்ந்து அவர்கள் பாலம் இடிக்கும் பணியை வேடிக்கை பார்த்து விட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, பழமையான பாலம் இடிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முழுவதுமாக இடித்த பின்பு அதே பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்க ப்படும் என தெரிவித்தனர்.

    • மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி தைப்பூச விழாவை தொடங்கி வைத்தனர்.
    • இதனைத்தொடர்ந்து தேரோட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி காலை 6.20 மணிக்கு நடக்கிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மேல் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர்க்கு தை பூச விழா வருடந்தோறும் மிக சிறப்பாக 15 நாட்கள் நடக்கும்.

    இந்த ஆண்டு விழாவை சம்பரதாய முறைப்படி செங்குந்த முதலியார் சமூகதத்தினை சேர்ந்த நாட்டமை, பெரிய தனகாரர்கள், பெரியவர்கள் முன் நின்று மலை மேல் உயரத்தில் உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியை ஏற்றி தைப்பூச விழாவை தொடங்கி வைத்தனர்.

    சென்னிமலை மலை மீது நடக்கும் கொடியேற்ற த்திற்காக சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலலாச–நாதர் கோவிலில் இருந்து சாமி புறப்பாடு மற்றும் தீர்த்தக்கு டங்களுடன் காலை 7 மணிக்கு தொடங்கியது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சாமி மலை மீது படி வழியாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு விநாயகர்வழிபாடு, முளைப்பாரி பூஜைகள், காப்புகட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது. அதை தொடர்ந்து மயூரயாகம் நடந்தது.

    அதன் பின்பு முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும், மூலவர்க்கும் பல்வேறு நெய்வேத்திய பொருட்கள் மற்றும் பவானி கூடுதுறையில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.

    தலைமை குருக்கள் ஸ்ரீ ல ஸ்ரீ ராமநாதசிவம், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்து சாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதன் பின்பு மதியம் சேவல் கொடியை தாங்கி உரிய மேளதாளம் முழங்க கோவிலை வலம் வந்து முருகன் சன்னதி கொடி மரத்தில் சேவல் கொடியையும், சிவன் ஆலயம் முன்பு நந்தி கொடியையும் ஏற்றினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கொடியேற்ற விழாவில் முன்னாள் கோ–-ஆப்டெக்ஸ் இயக்குனர் மெய்யப்பன், எஸ்.ஏ.பி. டெக்ஸ் தலைவர் காவேரி ரங்கன், மெட்றோ சரவணன், எஸ்.ஏ.பி. டெக்ஸ் மேலாளர் சண்முகம், இந்திரா டெக்ஸ் மேலாளர் சுகுமார் ரவி, காங்காதரன், லேத் செந்தில், உள்பட ஊர் பொது மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து தேரோட்டம் வருகின்ற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி காலை 6.20 மணிக்கு நடக்கிறது. தை பூச விழாவின் முக்கிய விழாவான மகா தரிசனம் 9-ந் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    அன்று சென்னிமலை நகரில் நடராஜப் பெருமா னும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கும்.

    இதில் முருகப் பெருமானை தரிசனம் செய்ய சென்னிமலை நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

    • பெண்கள் காலிக்குடங்களுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தங்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க கோரி வார்டு கவுன்சிலர் சரஸ்வதி விசுவநாதன் தலைமையில் பெண்கள் காலிக்குடங்க ளுடன் இன்று காலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர்.

    இது குறித்து தகவலறித்த அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மற்றும் அந்தியூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் முற்றுகை யிட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் தட்டுப்பாடுயின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மோட்டார் கொட்டகையில் இரவில் முருகவேல் தூங்குவது வழக்கம்.
    • திடீரென முருகவேல் வலது கையில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.

    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் புதுநகர், மாசியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல் (48). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் வேலை சம்மந்தமாக ஒவ்வொரு ஊராக சென்று வருவது வழக்கம்.

    அதன்படி தற்போது முருகவேல் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரங்காட்டூர், சிலுவம்பாளையம் பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

    அங்குள்ள மோட்டார் கொட்டகையில் இரவில் முருகவேல் தூங்குவது வழக்கம். அதேபோல் சம்பவத்தன்றும் இரவில் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகவேல் வலது கையில் பாம்பு ஒன்று கடித்து விட்டது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள் முருகவேலை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற இருந்த முருகவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 238 வாக்குசாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை இன்று கணினி வழியில் தொடங்கி வைத்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் வாக்குச் சாவடிகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திரங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்) தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கணினி நிர்வாளர் வெங்கடேஷன் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்.
    • வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் சில தினங்களில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இதேபோல் தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுகிறது.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். எனவே ஓ.பி.எஸ். அணி சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. எனவே மாவட்ட செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் சில தினங்களில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார். தற்போது பூத் கமிட்டி அமைத்து அது தொடர்பான அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க இரு அணிகளும் நேருக்கு நேராக ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்குவதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வேட்புமனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது.
    • 10-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

    வேட்புமனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 10-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகிற 3-ந் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். அவர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மனுத்தாக்கல் செய்கிறார்.

    ×