என் மலர்
ஈரோடு
- இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவானது.
- 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகளும் பதிவானது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது.
தொடர்ந்து, பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகளும், 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகளும் பதிவானது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இதற்கிடையே, இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 64.02 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
- வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
- வாக்குப்பதிவு முடிய இன்னும் 2 மணி நேரமே உள்ளதால் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது.
தொடர்ந்து, பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 53.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு முடிய இன்னும் 2 மணி நேரமே உள்ளதால் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
- வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
- காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85 சதவீத வாக்குகள் பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவானது.
தற்போது பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
- எனது வாக்கை எப்படி செலுத்த முடியும் என முறையிட்டார்.
- தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஈரோடு வளையக்கார வீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த வாக்குச்சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடி மையம் என்பதால் இங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரிதா பேகம் என்பவர் தனது கணவருடன் வாக்கு செலுத்த வந்துள்ளார்.
அவர் வரிசையில் நின்று வாக்களிக்கும் அறைக்குள் சென்றார். அப்போது அவரது ஆவணங்களை அலுவலர்கள் சரி பார்த்தபோது உங்களது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் நான் இப்போதுதான் வருகிறேன்.
எனது வாக்கை எப்படி செலுத்த முடியும் என முறையிட்டார். இருப்பினும் அவரது வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவரது கணவர் மட்டும் வாக்கு செலுத்தினார். இது குறித்து பரிதாமேகம் கூறும்போது, வாக்கு செலுத்த சென்ற போது தனது வாக்கு ஏற்கனவே செலுத்தியதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. தனது வாக்கை செலுத்தியவரின் கையெழுத்தை காட்ட சொல்லியும் காட்டவில்லை. என்னிடம் பூத் சிலிப் உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. இருப்பினும் எனது ஓட்டு எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து தீவிர விசாரித்து தனது மனைவிக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது கணவர் கோரிக்கை விடுத்தார். பின்னர் பரிதாபேகம் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என அ.தி.மு.க. அன்றே கூறியது.. என்று பரிதாபேகம் அளித்த பேட்டியின் வீடியோவை பகிர்ந்து அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது.
- காலை முதலே வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மாநகராட்சி பகுதியை உள்ளடக்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பல தரப்பினர் வசித்து வந்தாலும் இங்கு வட மாநிலத்தவர்களுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். எலெக்ட்ரிக் கடை, செல்போன் கடை ஆகியவற்றில் வேலை செய்து வருகின்றனர். சிலர் சொந்தமாக கார்மெண்ட்ஸ், ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வட மாநிலத்தவர்களுக்கு ஓட்டுரிமை உள்ளது. ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், கோட்டை வீதி, புது மஜீத் வீதி போன்ற பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்று காலை முதலே வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
- காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
- இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. இத்தேர்தலில் தி.மு.க.வின் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தனது வாக்கினை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் ஜனநாயக கடமையாற்றினார்.
இதனிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 8-ந்தேதி எண்ணப்படுகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார். ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
இவரைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். சூரம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று சந்திரகுமார் ஜனநாயக கடமை ஆற்றினார்.
இதையடுத்து தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைவரும் வணக்கம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக, உதய சூரியன் சின்னத்தின் வேட்பாளராக, தமிழக முதலமைச்சர், கழக தலைவரின் ஆசியோடும், துணை முதலமைச்சர் கழகத்தின் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துகளோடு, ஈரோடு மாவட்டத்தின் அமைச்சர் முத்துசாமியின் வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலை சந்தித்து உள்ளேன்.
இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரையிலும் தி.மு.க.வின் உதய சூரியன் சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கப்போவது கடந்த 4 ஆண்டு திராவிட மாடல் அரசின் மக்களின் நல திட்டங்களே.
தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடந்துகொண்டிருக்கும் நிலையில் நான் எனது வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்துள்ளேன்.
இந்த தேர்தலில் கிழக்கு தொகுதி மக்கள் அனைவரும் வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.
- மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்பட எதிர்க்கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தன.
கடந்த 21-ந் தேதி முதல் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் மக்களோடு மக்களாக நின்று ஜனநாயக கடமையாற்றினார்.
இந்த தொகுதியில் மொத்தம் 9 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வாக்குப்பதிவு மாலை 6.00 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி தொகுதி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- இடைத்தேர்தலில் மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த மாதம் 7-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மொத்தம் 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.அதன்படி, அந்தத் தொகுதியில் உள்ள அரசின் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் அலுவலகங்கள் அனைத்தும் நாளை மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமை உள்ள அனைவரும் அவசியம் வாக்களிக்க வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
- நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 576 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்கும் வகையில் 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்ட 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 47 பேரும் என மொத்தம் 256 வாக்காளர்கள் தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பம் கொடுத்திருந்தனர்.
இதில் 246 பேர் தபால் வாக்குகள் செலுத்தியுள்ளனர். 46 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு கட்டுப்பாடு கருவிகள், ஒரு வி.வி.பேட் என 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
நேற்று மாலையுடன் இறுதி கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது. இதனையடுத்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வெளியூரைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேறினர்.
நேற்று இரவில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள விடுதிகள், கல்யாண மண்டபம், சமுதாயக்கூடத்தில் யாராவது வெளிநபர்கள் தங்கி உள்ளார்களா? என போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
நாளை வாக்குப்பதிவை முன்னிட்டு 237 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை, குடிநீர் வசதி, சாமியான பந்தல் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வசதியாக சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 8 முதல் 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல அலுவலர் வீதம் மொத்தம் 24 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு சி.என்.சி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இன்று காலை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் அந்தந்த மண்டல அலுவலர்கள் அவர்களுக்கு கீழ் பணி செய்யும் அலுவலர்கள், அவர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்கள், ஒவ்வொரு லாரியிலும் ஒரு துப்பாக்கி ஏந்திய போலீசார், டிரைவர், சாதாரண போலீசார், ஒரு அலுவலர் ஆகியோர் வாகனங்களிலிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
மாநகராட்சி அலுவலகத்தில் பழைய கட்டிடத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுத்து வரப்பட்டு வாகனங்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது.
இந்த பணியை ஈரோடு தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.
தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 97 வகையான பொருட்களுக்கும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. மண்டல அலுவலர்கள் தாங்கள் கொண்டு செல்லும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி முதன்மை அலுவலர் தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து வேனில் வந்த போலீசார் வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட போலீசார் துணை ராணுவத்தினர் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களில் தங்களது பாதுகாப்பு பணியை தொடங்கினர்.
இதேப்போல் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இன்று இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்பது குறித்த ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
அவர்கள் வாக்குச்சாவடி மையங்களிலேயே தங்கி இருந்து தங்களது பணிகளை செய்து வருகின்றனர். நாளை காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன் பின்னர் காலை 7 மணி முதல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலை 6 மணி உடன் தேர்தல் நிறைவடைந்ததும் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொரியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.
- நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டார். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதன்முதலாக பெரியாரை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா. கடவுள் இல்லை என்ற கொள்கையை கைவிட்டு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னவர். காங்கிரசார் வாக்கிற்கு பணம் கொடுத்த போது, தங்கத்தை யாராவது தவிட்டிற்கு விற்பார்களா என்று கேட்டவர் அண்ணா.
அவருடைய பேரைச் சொல்லி கட்சி நடத்துபவர்கள், வாக்கினை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவதூறு, அசிங்கம், பழிவாங்கல், அடக்குமுறை இல்லாத நல்லாட்சி கொடுத்தவர் அண்ணா.
அவர் அரசியல் தளத்திற்கு வந்த பிறகுதான், தமிழர்களின் இலக்கியம், வரலாறு அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. பணத்தை முன் நிறுத்தி அவர்கள் நிற்கும் போது நாங்கள் இனத்தை முன் நிறுத்தி நிற்கிறோம்.
நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள். மக்களை வைத்து பிழைக்க நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு உழைக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து தோல்வி வந்தாலும், உங்களை நம்பி நிற்கிறோம்.
ஆதிக்குடி மக்களுக்கு சாதிச்சான்று கிடைக்க வில்லை. சமூகநீதி பேசிய திராவிடர்கள் எங்கே போனார்கள்? சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து இடப்பகிர்வை கொடுக்க இவர்கள் மறுக்கின்றனர்.
சாதி வாரிக்கணக்கெடுப்பு எடுத்தால் நரிகளின் வேஷம் கலைந்து விடும். இதை யெல்லாம் தெரிந்தும் வாக்கினை விலைக்கு விற்கலாமா? இங்கு அரசு வழங்கும் கல்வி, மருத்துவம் எதுவும் தரமில்லை.
இந்த அரசாங்கம் மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து விட்டு தண்ணீரை விலைக்கு விற்கிறது. சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நாட்டிற்கு எதற்கு 5000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க வேண்டும். இத்தனை நாட்களாக நீங்கள் தலைவர்களை தேர்வு செய்யவில்லை. தரகர்களைத் தேர்வு செய்து வந்துள்ளீர்கள்.
சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சி, பணம் ஆகியவற்றைக் கொண்டு வாக்காளர்களை மயக்குகின்றனர். முதல்வர், துணை முதல்வர் உங்களை வந்து பார்க்கவில்லை. அவ்வளவுதான் உங்கள் மதிப்பு. உங்களுக்காக பேச எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இதற்கு முன்பு நடந்த இரு தேர்தல்களிலும், எந்த கூட்டணியும் இல்லாது, மக்களை நம்பி போட்டியிட்டோம்.
மதுக்கடைகளுக்கு விடுமுறை என்றால் முன் கூட்டியே மதுவை வாங்கி வைக்க சிந்தனை செய்யும் நீங்கள், எதிர்கால சந்ததிக்கு குடிநீர், காற்று, கல்வி, உணவு போன்றவை இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
தொடர்ந்து பலமுறை இந்த கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி விட்டீர்கள். வாக்கிற்கு பணம் கொடுத்தால் போதும் என்பதுதான் அவர்கள் நம்மீது வைத்திருக்கும் மதிப்பு.
ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை யில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இதை சொல்வதற்கு 40 எம்பிக்கள் எதற்காக? அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
எனது வருவாயைப் பெற்று, எனக்கு நிதியைத்தர மறுக்கிறாய் என இந்த ஆட்சியாளர்கள் வரிகொடா இயக்கத்தை நடத்த முடியாதா? இவர்கள் அந்த முடிவை எடுக்க மாட்டார்கள்.
ஆளுநர் நியமனம் செய்யும் துணைவேந்தர்க ளுக்கு ஆளுநர் ஊதியம் வழங்கட்டும். தமிழக அரசு நியமனம் செய்யும் துணை வேந்தர்களுக்கு மட்டும் தான் நாங்கள் சம்பளம் கொடுப்போம் என்று தமிழக அரசு சொல்ல முடியாதா? இவர்கள் கரை படிந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதால் இவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அதிமுக, பாஜகவினரிடம் சென்று, 'நீங்கள் வாக்கு செலுத்தி சீமானை வளரவிட்டீர்கள் என்றால், அடுத்து உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்' என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
பெரியாரை விமர்சித்த சீமானுக்கு அதிக வாக்கு விழக்கூடாது என்பதால் நோட்டாவிற்கு போடுங்கள் என்று பிரசாரம் செய்கின்றனர்.
பெரியார் என்ன செய்தார் என்று பேச ஒருவருக்கும் தைரியம் இல்லை. காசு கொடுத்து வாக்கினை வாங்குவதுதான் திராவிட மாடல். இப்போது நோட்டாவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லும் திமுக, 234 தொகுதிகளில் நான் போட்டியிடும் போதும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு சொல்வார்களா?
2026 பொதுத்தேர்தலில் நான் தனித்து போட்டியிடுவேன். ஆண்கள், பெண்களுக்கு நான் சம வாய்ப்பு கொடுப்பேன். உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதி வீட்டில் வெளிச்சம் வரும். உன் வீட்டுக்கு வெளிச்சம் வராது. பழைய சின்னங்களை தூக்கி வீசி நாம் தமிழரை ஆதரியுங்கள். நாட்டை நாசமாக்கியவர்கள் மீது, உங்கள் கோபத்தை வெளிப்படுத்த, எங்களுக்கு வாக்கு செலுத்தி வெளிப்படுத்துங்கள்.
வாக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல், லஞ்சத்திற்கு விதை ஊன்றப்படுகிறது. ஒரு முதலாளி 100 கோடி ரூபாய் முதலீடு செய்வது மக்கள் சேவை செய்ய வருவார்களா?
நாங்கள் தெரு தெருவாக வந்து மக்களை சந்திக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் ஏன் வந்து மக்களைச் சந்திக்கவில்லை. ஆட்சியின் சாதனையை சொல்ல ஒன்றுமில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம் இருக்கிறது.
வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர். பிரச்சாரத்திற்கு வராமல் வெற்றி பெறுவோம் என்று திமிருடன் இருக்கும் தி.மு.க. வை ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள்.
குடும்பத்தலைவிக்கு ஆயிரம் உதவித்தொகை கொடுத்து, அதனை டாஸ்மாக் மூலம் திரும்ப வாங்கிக் கொள்கின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்கு கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை என்று பெயர் வைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்து இதற்கு பணம் கொடுக்கின்றனரா?
மகளிரை, மாணவியரை கையேந்த வைக்கத்தான் இவர்கள் திட்டம் போடுகி ன்றனர். பிச்சை எடுக்கும் திட்டத்திற்கு மட்டும் தமிழ் மகள் என்று ஏன் பெயர் வைக்கின்றீர்கள். திராவிட மகள் என்று வைக்க வேண்டியது தானே. ஒருநாள் திராவிட மாடலை, ஈயம், பித்தளை, பேரிச்சம் பழத்திற்கு போடும் நிலை யை வர வைப்பேன்.
இந்த தேர்தல் கட்சி களுக்கான போட்டி யிட்டிலை. கருத்தியலுக்கான போட்டி. திராவிடக் கோட்பாட்டிற்கும், தமிழ் தேசிய கருத்துகள் மோதுகின்றன.
உன் இனத்தை, வளத்தை பாதுகாக்க, தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். ஈரோடு கிழக்கில் நாம் தமிழருக்கு கிடைக்கும் வெற்றி மாற்றத்திற்கான, நல்ல அரசியலுக்கான மகத்தான தொடக்கமாக இருக்கட்டும். ஒற்றை விரலால் ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






