என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பெருந்துறை மளிகை கடையில் பணம் திருடியதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.
    • பெருந்துறை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). இவர் விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு சந்திப்பு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் கள்ளன்காடு வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (25). தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    அருண் சம்பவத்தன்று பெருந்துறையில் நடன பயிற்சி மையம் நடத்தி வரும் தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இரவு நண்பருடன் நடன பயிற்சி மையத்தில் தங்கி உள்ளார். மோட்டார் சைக்கிளை பயிற்சி மையத்தின் வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    பின்னர் காலை எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அருண் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் காஞ்சிகோவில் பிரிவில் பெருந்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிள் எண்ணை பார்த்த போது அது தொலைந்து போன அருணின் மோட்டார் சைக்கிள் எண் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (34), கோவிந்தராஜ் (22), பூபதி (20) ஆகியோர் என்பதும், பெருந்துறை மளிகை கடையில் பணம் திருடியதும், மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதனையடுத்து பெருந்துறை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை சிப்காட்டில் ஆடைகள் தயாரிப்பு மில் ஒன்றின் கட்டிட வேலை நடந்து வருகிறது. அங்கிருந்து கழிவு நீர் வெளியேறி ஓடைகாட்டூர் குளத்துக்கு சென்றது.

    பின்னர் அங்கிருந்து பாலத்தொழுவு கிராமம் குளத்துக்கு பாய்ந்தது. பால த்தொழுவு குளத்தில் அத்தி க்கடவு -அவிநாசி திட்டத்தில் நீர் நிரப்பப்பட உள்ளது.

    இந்நிலையில் குளத்தில் கலந்த கழிவுநீர் மாதிரியை பாட்டிலில் எடுத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தாங்கள் கொண்டு சென்ற குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பழனிச்சாமி மாவட்ட பொறியாளர் பணி நிமித்தமாக சத்தியமங்கலம் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் தரத்தை சோதித்து தருவதாக கூறினார்.

    மேலும் வாரியத்தின் மூலமும் மக்கள் எடுத்த இட த்தில் மாதிரி நீரை சேகரித்து சோதனை செய்வ தாக கூறியுள்ளார். அதை ஏற்காத மக்கள் உடனடியாக தண்ணீரின் தரத்தை சோதி க்குமாறு கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலை பொறி யாளர் ஆறுமுகம் அலு வலகத்திற்கு வந்தார். சிப்கா ட்டில் தனியார் மில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் ஆய்வுக்கு தண்ணீர் எடுத்து ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தருவதாக கூறி னார்.

    மேலும் மக்கள் கொடுத்த மனு வுக்கு ஒப்புகை சீட்டு வழங்கி னார். இதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    • கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
    • இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் ஆலு குழி காசியூர் நரியன் தோட் டத்தைச் சேர்ந்தவர் கருப்ப ணகவுண்டர் (வயது 76). இவருக்கு சுப்பாயாள் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் விவசாய வேலை செய்து வருகிறார்.மேலும் சொந்தமாக 2 மாடு களை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று கருப்பணகவுண்டர் மாடுகளை மேய்த்து விட்டு பின்னர் மாட்டு தொழு வத்திற்கு வரும்போது மாட்டின் கயிறு கருப்பண கவுண்டரின் காலில் சுற்றி எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை கோ பியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகி ச்சைக்காக அைழத்து சென்றனர். பின்னர் அங்கு முத லுதவி பெற்று மேல்சிகி ச்சைக்காக ஈரோடு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை க்கு கொண்டு சென்றனர்.

    இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கரு ப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவ ரது மகன் மாரிமுத்து (43) கடத்தூர் காவல் நிலைய த்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிலைய வெளி பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.
    • இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோட்டின் மையப்பகுதி யில் பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலை யத்தில் இருந்து சேலம், நாமக்கல், கோவை, மேட்டூர், கரூர், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தின மும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகிறது. அதே போல் மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், செ ன்னை, உள்பட தமிழ கத்தின் பல்வேறு பகுதி களுக்கும் தொலை தூர பஸ்களும் செல்கிறது.

    இதே போல் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், கொடுமுடி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தொலை தூர பஸ்களும், சென்னிமலை மற்றும் பவானி, பெருந்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட குமாரபாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, சேலம் மாவட்டம் சங்ககிரி உள்பட பல ஊர்களுக்கு நகர பஸ்களும் சென்று வரு கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஈரோடு பஸ் நிலையத்துக்கு அதிகளவில் பஸ்கள் வரு கிறது.

    இதே போல் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்கள் வந்து செல்கிறது. மாவட்டத்தில் நகர பஸ்களை வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் என பலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் அதிகளில் நகர பஸ்களில் பயணம் செய்து வரு கிறார்கள்.

    இதே போல் மற்ற பகுதிகளில் இருந்து பொது மக்கள் டவுன் பஸ்களில் பஸ் நிலையம் வந்து அங்கு இருந்து வெளியூர்களுக்கு செல்கிறார்ஙகள்.

    இதனால் பஸ் நிலையத் துக்கு பொதுமக்கள் அதிக ளவில் வந்து செல்கிறார்கள். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

    வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் டவுன் பஸ்க ளில் பஸ் நிலை யம் வந்து தாங்கள் செல்லும் பஸ்களில் மாறி செல்வது வழக்கம்.

    இதை யொட்டி அரசு மற்றும் தனி யார் டவுன் பஸ்கள் மக்களின் பயன்பாட்டு க்காக அதிகளவில் பஸ் நிலை யத்தில் இருந்து பல பகுதிகளு க்கு செல்கிறது. பெரும்பாலான டவுன் பஸ்கள் பஸ் நிலைத்து க்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.

    இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு பஸ் நிலையத்துக்கு வரும் ஒரு சில டவுன் பஸ்கள் பஸ் நிலை யத்துக்கு செல்லாமல் வெளி பகுதிகளில் பயணி களை இறக்கி விடுவதாக பொது மக்கள் புகார் கூறி னர்.

    பஸ் நிலையத்துக்கு வரும் ஒரு சில டவுன் பஸ்கள் நாச்சியப்பா வீதி நகராட்சி திருமண மண்டம் அருகே மற்றும் பஸ் நிலைய வெளி பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் குழந்தைகளு டன் வெளியூருக்கு செல்லும் பெண்கள் தாங்கள் கொண்டு வரும் பேக்குகள் மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு டவுன் பஸ்களில் வருபவர்கள் பஸ் நிலையம் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் சிலர் பஸ் நிலையம் வந்து அவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பஸ்களில் மாறி செல்கிறார்கள். அப்படி வரும் மாணவர்கள் புத்தக பைகளை தூக்கி கொண்டு செல்லவும் சிரமம் அடைகி றார்கள்.

    அதே போல் பஸ் நிலை யத்துக்கள் அந்தந்த பஸ் நிற்கும் இடங்களில் பஸ்சு க்காக பலர் நிற்கிறார்கள். பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்வதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் பலர் ஏமாற்றம் அடைந்து வரு கிறார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு வரும் பஸ்களில் ஏறி செல்லும் நிலை உளளது.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலைய பகுதிகளில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரி சலும் ஏற்படுகிறது. இதனால் ரோட்டை கடந்து செல்லும் பெண் பயணிகள் மற்றும் முதியவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் வயதான மூதாட்டி வெளி பகுதியில் இருந்து பஸ் நிலையத்துக்கு தட்டுதடுமாறி செல்லும் நிலை உள்ளது. இதே போல் இறக்கி விடும் பகுதியில் இருந்து பஸ் நிலையம் நடந்து செல்வதால் விபத்து அபாயமும் உள்ளது.

    எனவே அனைத்து பஸ் களும் பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கி விட வேண்டும் என பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளும் கண்காணி த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஈரோடு டவுண், கோபி போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் குற்ற சம்பவ ங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அம்மாபேட்டை, பெருந்துறை சுற்றுவ ட்டாரப் பகுதிகளில் அனு மதியின்றி மது விற்று கொண்டிருந்த பெரியசேமூர் கன்னிமார் நகரை சேர்ந்த மது மகன் சந்திரசேகர் (வயது 44), சிவகங்கை மாவ ட்டம் காளையார் கோவி லை சேர்ந்த எடிவக்கண்ணு மகன் முத்துவேல்,

    அந்தியூர் கொமரயனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (40), மதுரை மாவட்டம் உசிலம்ப ட்டியை சேர்ந்த ராசு மகன் பூம்பாண்டி (42) சத்தி பு.புளியம்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் உதயகுமார் (34) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டி ல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.53 அடியாக சரிந்துள்ளது.
    • அணையில் இருந்து 3,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாத தால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள து. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.53 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு ள்ளது. தடப்பள்ளி-அரக்க ன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.07 அடியாக உள்ளது.

    வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.49 அடியாக உள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் 28 நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விவசாயிகளிடம் அவர்களது குறைகளை குறித்து கேட்டிருந்தனர்.

    ஈரோடு:

    நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 28 நேரடி கொள்முதல் நிலையங்களில் சரக துணை கண்காணிப்பா ளர் சுரேஷ் குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமை யில், போலீசார் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் முறையீடு நடைபெறுகிறதா? என்பது குறித்து விசாரணை மேற் கொண்டனர்.

    அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் வந்த விவசாயிகளிடம் அவர்களது குறைகளை குறித்து கேட்டிருந்தனர்.

    மேலும் நெல் கொள்முதல் நிலை யங்களில் பணி யாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை யும் வழங்கினர்.

    • ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தாரை பணியிட நீக்கம் செய்ததை கண்டித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை ஊழியர்கள் காத்திரு ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்த லைவர் தினகரன் முன்னி லை வகித்தார்.

    ஆர்ப்பாட்ட த்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவுப்படி ஆக்கிரமிப்பு களை அகற்றிய கள்ளக்கு றிச்சி மாவட்ட தாசில்தாரின் பணி இடைநீக்கத்தை திரும்ப பெற கோரியும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வருவாய்த்துறை ஊழியர்களை தரக்குறை வாக பேசுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தி ருந்த வருவாய்துறை ஊழிய ர்கள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தையொட்டி சூரம்பட்டி போலீசார் பலத்த பாதுகா ப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • செல்லியாண்டிம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
    • கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக செல்லியண்டியம்மன்- மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் கும்பா பிஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் முடி ந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசின் விதிமுறைகள் படி 3 ஆண்டுகள் கும்பாபிஷேக பணிகள் நிறுத்தி வைக்க ப்பட்டிருந்தது.

    கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் முடிந்த நிலையில் செல்லி யாண்டி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தமிழக அரசிடம் கும்பாபிஷேகம் நடத்திட கோரிக்கை வைத்தி ருந்தனர்.

    தமிழக அரசின் உத்தரவுப்படி இந்து அறநிலைத்துறை மூலம் செல்லியாண்டிம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

    இதனைத்தொ டர்ந்து கோவில் வளாகத்தில் பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன், கும்பாபிஷேக திருப்பணி விழா குழு தலை வர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழை ப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்ப ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்,

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லியாண்டி அம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா மிக சிறப்பான முறை யில் நடத்துவது பற்றியும், பாலாலயம் நடத்துவது குறித்து செல்லாண்டி அம்மனிடம் வாக்கு கேட்டு அதில் அடுத்த மாதம் 11-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று பாலாலயம் நடத்த உறுதி அளித்ததை அடுத்து கோபுர கலசத்திற்கு மட்டும் பாலாலயம் செய்து கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள பட உள்ளது.

    பின்னர் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தரை தளம் கருங்கற்கலில் அமை த்தல், கோபுரம் வர்ணம் தீட்டி புதுப்பித்தல், பரா மரிப்பு பணி மேற்கொ ள்ளுதல் குறித்து ஆலோ சனை வழங்கினார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பவானி நகர த்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க., ப.ம.கா., பா.ஜனதா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள், 36 சமூக கட்டளைதார்கள், கோவில் நிர்வாகத்தினர், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கவுன்சிலர் சரவணன் நன்றி கூறினார்.

    • சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவா (43). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி தமிழ்செ ல்வி.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மா தங்களுக்கு முன்னர் சிவாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பண த்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சிவா மதுவுக்கு அடிமையாகி தொழிலையும் சரி வர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று காலை தங்களது உறவினர் ஒருவரை பார்க்க தமிழ் செல்வி வெளியே சென்றுவிட்டார். மகளும் பள்ளிக்கு சென்றுவி ட்டார்.

    தொடர்ந்து சிவாவின் மகன் மாலையில் வீட்டுக்கு வந்தபோ து வீட்டின் உள் அறையில் சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியு டன் மீட்டு அந்தியூர் அரசு மரு த்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிகாந் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் சிவப்பிரகாஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் காஞ் சிகோவில் கொண்டையன் காட்டு வலசுபகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காஞ்சிக்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சேலம் மாவட்டம் ராமகிருஷ்ணா காலனியை சேர்ந்த முனுசாமி மகன் மணி (வயது 42), காஞ்சிகோவில் பகுதியை சேர்ந்த பூபதி மகன் ஜெ கதீஷ் (29),

    பெத்தம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் ரவி (53), காஞ்சிக்கோவில் தெற்கு ரத வீதியை சேர்ந்த தண்டபாணி மகன் ராமராஜ் (32), வெங்கட்ராமர் தெருவை சேர்ந்த காவிரி மகன் சுந்தரம் (28) ஆகியோரை மடக்கி பிடித்தார்.

    பின்னர் அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.1,650 போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×