search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citizens besieged"

    • மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை சிப்காட்டில் ஆடைகள் தயாரிப்பு மில் ஒன்றின் கட்டிட வேலை நடந்து வருகிறது. அங்கிருந்து கழிவு நீர் வெளியேறி ஓடைகாட்டூர் குளத்துக்கு சென்றது.

    பின்னர் அங்கிருந்து பாலத்தொழுவு கிராமம் குளத்துக்கு பாய்ந்தது. பால த்தொழுவு குளத்தில் அத்தி க்கடவு -அவிநாசி திட்டத்தில் நீர் நிரப்பப்பட உள்ளது.

    இந்நிலையில் குளத்தில் கலந்த கழிவுநீர் மாதிரியை பாட்டிலில் எடுத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தாங்கள் கொண்டு சென்ற குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பழனிச்சாமி மாவட்ட பொறியாளர் பணி நிமித்தமாக சத்தியமங்கலம் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் தரத்தை சோதித்து தருவதாக கூறினார்.

    மேலும் வாரியத்தின் மூலமும் மக்கள் எடுத்த இட த்தில் மாதிரி நீரை சேகரித்து சோதனை செய்வ தாக கூறியுள்ளார். அதை ஏற்காத மக்கள் உடனடியாக தண்ணீரின் தரத்தை சோதி க்குமாறு கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலை பொறி யாளர் ஆறுமுகம் அலு வலகத்திற்கு வந்தார். சிப்கா ட்டில் தனியார் மில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் ஆய்வுக்கு தண்ணீர் எடுத்து ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தருவதாக கூறி னார்.

    மேலும் மக்கள் கொடுத்த மனு வுக்கு ஒப்புகை சீட்டு வழங்கி னார். இதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    • சுதந்திரபுரம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரை 4 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றி தர வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பா ளையம் ஊராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதற்கு ஊராட்சி தலைவராக விமலா(அ .தி.மு.க), துணைத்தலைவராக வினோத்குமார்(திமுக), வார்டு உறுப்பினராக ரதிமனோகர் (தி.மு.க), ஒன்றிய கவுன்சிலராக ரவிக்குமார்(தி.மு.க) ஆகியோர் உள்ளனர்.

    இதில் 10-வது வார்டுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்துதல், குப்பை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் முறையாக செய்து தரவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி தலைவர் விமலா, ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் ஆகியோரை முற்றுகையிட்டனர்.

    இதற்கிடையே அந்த பகுதியில் புதிதாக சாலை பணி தொடங்க வந்த எம்.எல்.ஏ., ஏ.கே.செல்வராஜ் இது பற்றி அறிந்ததும் உடனடியாக சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் குப்பை எடுக்க வருபவர்கள் வீட்டுக்கு ரூ.100 கேட்டு வருவதாகவும், 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் குடிநீரை 4 நாட்களுக்கு ஒரு முறையாக மாற்றி தர வேண்டும்.

    மேலும் கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை அப்புறப்படுத்ததால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகமாகி வருகிறது. இதற்கு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என தெரி வித்தனர்.இதையடுத்து ஏ. கே செல்வராஜ் எம்.எல்.ஏ., கூறும் போது உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உரிய அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    ×