search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை சிப்காட்டில் ஆடைகள் தயாரிப்பு மில் ஒன்றின் கட்டிட வேலை நடந்து வருகிறது. அங்கிருந்து கழிவு நீர் வெளியேறி ஓடைகாட்டூர் குளத்துக்கு சென்றது.

    பின்னர் அங்கிருந்து பாலத்தொழுவு கிராமம் குளத்துக்கு பாய்ந்தது. பால த்தொழுவு குளத்தில் அத்தி க்கடவு -அவிநாசி திட்டத்தில் நீர் நிரப்பப்பட உள்ளது.

    இந்நிலையில் குளத்தில் கலந்த கழிவுநீர் மாதிரியை பாட்டிலில் எடுத்துக்கொண்டு அப்பகுதி மக்கள் சிப்காட்டில் உள்ள மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    தாங்கள் கொண்டு சென்ற குளத்தின் நீர் தரத்தை பரிசோதிக்க வலியுறுத்தினார்கள். இதையடுத்து அங்கிருந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பழனிச்சாமி மாவட்ட பொறியாளர் பணி நிமித்தமாக சத்தியமங்கலம் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் தரத்தை சோதித்து தருவதாக கூறினார்.

    மேலும் வாரியத்தின் மூலமும் மக்கள் எடுத்த இட த்தில் மாதிரி நீரை சேகரித்து சோதனை செய்வ தாக கூறியுள்ளார். அதை ஏற்காத மக்கள் உடனடியாக தண்ணீரின் தரத்தை சோதி க்குமாறு கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் மாலை பொறி யாளர் ஆறுமுகம் அலு வலகத்திற்கு வந்தார். சிப்கா ட்டில் தனியார் மில் கட்டிட வேலை நடக்கும் இடத்தில் ஆய்வுக்கு தண்ணீர் எடுத்து ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தருவதாக கூறி னார்.

    மேலும் மக்கள் கொடுத்த மனு வுக்கு ஒப்புகை சீட்டு வழங்கி னார். இதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    Next Story
    ×