search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Criminal investigation"

    • ஈரோடு மாவட்டத்தில் 28 நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • விவசாயிகளிடம் அவர்களது குறைகளை குறித்து கேட்டிருந்தனர்.

    ஈரோடு:

    நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 28 நேரடி கொள்முதல் நிலையங்களில் சரக துணை கண்காணிப்பா ளர் சுரேஷ் குமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமை யில், போலீசார் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    நெல் கொள்முதல் நிலையங்களில் முறையீடு நடைபெறுகிறதா? என்பது குறித்து விசாரணை மேற் கொண்டனர்.

    அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் வந்த விவசாயிகளிடம் அவர்களது குறைகளை குறித்து கேட்டிருந்தனர்.

    மேலும் நெல் கொள்முதல் நிலை யங்களில் பணி யாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை யும் வழங்கினர்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rafalescam #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்ததாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையை சுமுகமாக நடத்த இயலாத நிலை நீடித்து வருகிறது.

    இன்றைய மக்களவை கூட்டத்தில் இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    பின்னர், பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் பேரம் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



    இந்த ஊழல் தொடர்பாக காங்கிரசின் கேள்விக்கு பதில் அளிக்க பயந்துகொண்டு பிரதமர் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் தன்னை தனிப்பட்ட முறையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி தரக்குறைவாக அவையில் பேசி வருவதற்கும் ராகுல் கண்டனம் தெரிவித்தார்.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். #Rafalescam #Congress #RahulGandhi
    ×