என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளி பகுதிகளில் பயணிகளை இறக்கி விடுவதால் பெண்கள் கடும் அவதி
- பஸ் நிலைய வெளி பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.
- இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டின் மையப்பகுதி யில் பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலை யத்தில் இருந்து சேலம், நாமக்கல், கோவை, மேட்டூர், கரூர், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தின மும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகிறது. அதே போல் மதுரை, திருச்சி, நெல்லை, தஞ்சாவூர், செ ன்னை, உள்பட தமிழ கத்தின் பல்வேறு பகுதி களுக்கும் தொலை தூர பஸ்களும் செல்கிறது.
இதே போல் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், கொடுமுடி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தொலை தூர பஸ்களும், சென்னிமலை மற்றும் பவானி, பெருந்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட குமாரபாளையம், பள்ளி பாளையம், திருச்செங்கோடு, சேலம் மாவட்டம் சங்ககிரி உள்பட பல ஊர்களுக்கு நகர பஸ்களும் சென்று வரு கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஈரோடு பஸ் நிலையத்துக்கு அதிகளவில் பஸ்கள் வரு கிறது.
இதே போல் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்கள் வந்து செல்கிறது. மாவட்டத்தில் நகர பஸ்களை வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் என பலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் அதிகளில் நகர பஸ்களில் பயணம் செய்து வரு கிறார்கள்.
இதே போல் மற்ற பகுதிகளில் இருந்து பொது மக்கள் டவுன் பஸ்களில் பஸ் நிலையம் வந்து அங்கு இருந்து வெளியூர்களுக்கு செல்கிறார்ஙகள்.
இதனால் பஸ் நிலையத் துக்கு பொதுமக்கள் அதிக ளவில் வந்து செல்கிறார்கள். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். எப்போதும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும்.
வெளியூர்களுக்கு செல்லும் பெரும்பாலான பொதுமக்கள் டவுன் பஸ்க ளில் பஸ் நிலை யம் வந்து தாங்கள் செல்லும் பஸ்களில் மாறி செல்வது வழக்கம்.
இதை யொட்டி அரசு மற்றும் தனி யார் டவுன் பஸ்கள் மக்களின் பயன்பாட்டு க்காக அதிகளவில் பஸ் நிலை யத்தில் இருந்து பல பகுதிகளு க்கு செல்கிறது. பெரும்பாலான டவுன் பஸ்கள் பஸ் நிலைத்து க்குள் சென்று பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது.
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு பஸ் நிலையத்துக்கு வரும் ஒரு சில டவுன் பஸ்கள் பஸ் நிலை யத்துக்கு செல்லாமல் வெளி பகுதிகளில் பயணி களை இறக்கி விடுவதாக பொது மக்கள் புகார் கூறி னர்.
பஸ் நிலையத்துக்கு வரும் ஒரு சில டவுன் பஸ்கள் நாச்சியப்பா வீதி நகராட்சி திருமண மண்டம் அருகே மற்றும் பஸ் நிலைய வெளி பகுதிகளில் பயணிகளை இறக்கி விட்டு செல்கிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதனால் குழந்தைகளு டன் வெளியூருக்கு செல்லும் பெண்கள் தாங்கள் கொண்டு வரும் பேக்குகள் மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு டவுன் பஸ்களில் வருபவர்கள் பஸ் நிலையம் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
மேலும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் சிலர் பஸ் நிலையம் வந்து அவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் பஸ்களில் மாறி செல்கிறார்கள். அப்படி வரும் மாணவர்கள் புத்தக பைகளை தூக்கி கொண்டு செல்லவும் சிரமம் அடைகி றார்கள்.
அதே போல் பஸ் நிலை யத்துக்கள் அந்தந்த பஸ் நிற்கும் இடங்களில் பஸ்சு க்காக பலர் நிற்கிறார்கள். பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வராமல் செல்வதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பலர் ஏமாற்றம் அடைந்து வரு கிறார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு வரும் பஸ்களில் ஏறி செல்லும் நிலை உளளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் நிலைய பகுதிகளில் அதிகளவில் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரி சலும் ஏற்படுகிறது. இதனால் ரோட்டை கடந்து செல்லும் பெண் பயணிகள் மற்றும் முதியவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் வயதான மூதாட்டி வெளி பகுதியில் இருந்து பஸ் நிலையத்துக்கு தட்டுதடுமாறி செல்லும் நிலை உள்ளது. இதே போல் இறக்கி விடும் பகுதியில் இருந்து பஸ் நிலையம் நடந்து செல்வதால் விபத்து அபாயமும் உள்ளது.
எனவே அனைத்து பஸ் களும் பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை இறக்கி விட வேண்டும் என பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளும் கண்காணி த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.






